wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொடர் வாக்கியம்(ஆ4) நேர்க்கூற்று அயற்கூற்று (ஆ5) கலவை

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியம் நேர்க்கூற்று வாக்கியம் எனக் கண்டறிய கவனிக்க வேண்டிய சொல் எது?

  1. கேள்வி (1). உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுகளைச் சார்ந்து உள்ளது.

  2. கேள்வி (2). மேல் குறிப்பிட்ட சொல் தொடர் வாக்கியமா?

a)

1.உடல்

2.இல்லை

b)

1.நாம்

  1. 2.இல்லை

c)

1.நாம்

2.இல்லை

d)

  1. 1. உடல்

  2. 2. ஆம்

2.

கீழ்க்காணும் வாக்கியம் எத்தகைய வாக்கியங்களைக் கொண்டுள்ளது?

 நான் கூறியதற்கு ஏற்றவாறு பாரதியார் ‘உடலினை உறுதி செய்’ என்றும் கூறியுள்ளார்; ‘ஊண்மிக விரும்பு’ என்றும் கூறியுள்ளார்.


a)

நேர்க்கூற்று, தனி வாக்கியம்

b)

அயற்கூற்று, தொடர் வாக்கியம்

c)

நேர்க்கூற்று, தொடர் வாக்கியம்

d)

அயற்கூற்று, தனி வாக்கியம்

3.

கீழ்க்காணும் நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தேர்வு செய்க.

"என்னைப் போலவே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவை உண்ண வேண்டும்" எனக் கூறினான் மதியரசன்.

a)

மதியரசன், தன்னைப் போலவே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவை உண்ண வேண்டும் எனக் கூறினான்.

b)

"என்னைப் போல உண்ணுங்கள்" என்றான் மதியழகன்.

c)

தான் உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்குகிற உணவை மேற்கொள்ளுங்கள் எனக் கூறினான் மதியரசன்.

4.

கீழ்க்காணும் நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியம் எது?

மதியரசன் "உங்கள் ஆரோக்கியத்தை இன்றே பேண ஆரம்பியுங்கள்" எனக் கூறினான்.

a)

மதியரசன் அவர்களிடம் ஆரோக்கியத்தை அன்றே பேண ஆரம்பிக்கும்படி கூறினான்.

b)

மதியரசன் அவர்களிடம் ஆரோக்கியத்தை இன்றே பேண ஆரம்பிக்கும்படி கூறினான்.

c)

மதியரசன் இவர்களிடம் ஆரோக்கியத்தை இன்றே பேண ஆரம்பிக்கும்படி கூறினான்.

5.

கீழ்க்காணும் தொடர் வாக்கியத்தைப் பிரித்துக் காட்டுக.

காலம் பொன்னானது என்பதனை நீங்கள் மறவாதீர்கள். அதனால், நேரத்தை நல்ல பயனுள்ள வழியில் செலவழியுங்கள்.

a)

காலம் பொன்னானது என்பதனை நீங்கள் மறவாதீர்கள். நேரத்தை நல்ல வழியில் செலவழியுங்கள்.

b)

காலம் பொன்னானது என்பதனை நீங்கள் மறக்க வேண்டாம். நேரத்தை நல்ல வழியில் செலவழிக்க வேண்டும்..

6.

கீழ்க்காணும் சொல் நேர்க்கூற்று மற்றும் தொடர் வாக்கியம் என்று அறிய எச்சொற்களைக் கவனிக்க வேண்டும்.

எனக்கு வழங்கிய நேரம் இத்துடன் முடிந்தது. அதனால், உரைக்கு முற்றுயிடுகிறேன்.

a)

எனக்கு, உரைக்கு

b)

இத்துடன், அதனால்

c)

எனக்கு, அதனால்

d)

முடிந்தது. முற்றுயிடுகிறேன்

7.

கீழ்க்காணும் வாக்கியம் நேர்க்கூற்று வாக்கியம் மற்றும் தொடர் வாக்கியம் எனும் குறிக்கும் சான்றுகள் யாவை ?

"நமக்குள் இனி பிரச்சனை வேண்டாம் . ஏனெனில், எதிரிகள் நாம் பிரிவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் " என அமுதன் குமுதனிடம் கூறினான்.

a)

( . )

முற்றுப்புள்ளி/ கூறினான் என்கிற முற்றுவினை

b)

( " " )

இரட்டை மேற்கொள்குறி/ ஏனெனில் என்கிற இடைச்சொல்

c)

( , )

காற்புள்ளி / ஏனெனில் என்கிற இடைச்சொல்

d)

( " " )

இரட்டை மேற்கொள்குறி/ கூறினான் என்கிற முற்றுவினை

8.

கீழ்க்காணும் வாக்கியம் எத்தகைய வாக்கியமாகும்.

"உனக்குத் தெரியுமா ! சிங்கமும் புலியும் பூனைக் குடும்பத்தைச் சார்ந்ததுதான். இருப்பினும், கூடி வாழும் போக்குப் புலிகளுக்கு இல்லை" என்று அரவிந்தன் குகனிடம் கூறினான்.

a)

நேர்க்கூற்று

தொடர் வாக்கியம்

b)

நேர்க்கூற்று

தனி வாக்கியம்

c)

அயற்கூற்று

தொடர் வாக்கியம்

d)

அயற்கூற்று

தனி வாக்கியம்