wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்களும் இணைமொழிகளும்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தன் தாத்தா பாட்டியைப் பார்க்க கீதா ________________ சென்றாள்.

a)

அடக்கவொடுக்கத்துடன்


b)

உச்சிக்குளிர்ந்து

c)

சிட்டாய்ப் பறந்து

d)

அறக்கப் பறக்க 

2.

மாலா _______________ என்பதால் அவளிடம் யாரும் தங்களின் இரகசியங்களைக் கூறுவதில்லை. 

a)

ஓட்டைக்கை

b)

இழுக்கடித்ததால்

c)

ஓட்டைவாய்  

d)

தட்டிக் கழித்ததால் 

3.

பாலா பள்ளியில் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த அவனின் பெற்றோர் _______________.

a)

சிட்டாய்ப் பறந்தனர்

b)

உச்சிக்குளிர்ந்தனர்

c)

தட்டிக்கொடுத்தனர்

d)

தட்டிக் கழித்தனர் 

4.

சிறையிலிருந்து சிறைக்கைதி ____________________ முயன்றபோது பிடிபட்டான்.

a)

ஓட்டம் பிடிக்க

b)

கம்பி நீட்ட

c)

தட்டிக்கேட்க

d)

தட்டிக் கழிக்க 

5.

சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ___________________ விலைபோகாத தங்கள் பொருட்களை விற்றுவிடுகிறார்கள்.

a)

அடக்கவொடுக்கத்துடன்

b)

இனிக்கப்பேசி

c)

ஆறப்போடாமல்

d)

ஓட்டை வாயாக

6.

ரகு செய்த தவறு அப்பாவுக்குத் தெரிந்தவுடன் அவன் பயத்தில் ________________    நின்றான். 

a)

அடக்கவொடுக்கத்துடன்


b)

ஆடாமல் அசையாமல்

c)

சிட்டாய்ப் பறந்து

d)

அறக்கப் பறக்க 

7.

தன்னை ______________________ யாரும் இல்லாததால் கண்ணன் மனப்போல போக்கில் ஊர் சுற்றித் திரிந்தான்.

a)

    தட்டிக் கொடுக்க

b)

தட்டிக் கேட்க

c)

தட்டிக்கழிக்க

d)

வாலாட்ட

8.

ராமன் தனக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளை _______________ வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.

a)

தட்டிக்கேட்டதால்

b)

இழுக்கடித்ததால்

c)

ஆறப்போட்டதால்

d)

தட்டிக் கழித்ததால் 

9.

பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் சிவராமன் தம் வகுப்பை நோக்கி  ______________________ சென்றான்.

a)

    அவசரக் குடுக்கையாக

b)

அறக்கப் பறக்க

c)

ஓட்டம் பிடித்து

10.

அந்தப் பெரிய குரங்கு, ஒரு சிறிய குரங்கிடமிருந்து பழத்தை ______________________ ஓடியது. 

a)

    தட்டிப் பறித்து

b)

வாலாட்டி

c)

ஓட்டம் பிடித்து

d)

சிட்டாய்ப் பறந்து

11.

______________________ முடியாததால் சங்கர் தன் உடல் பருமனைக் குறைக்க முடியாமல் திண்டாடினான்.

a)

    தட்டிப் பறிக்க

b)

வாலாட்ட

c)

அள்ளிக் கொட்ட

d)

    வாயைக்கட்ட

12.

பள்ளிக்குக் காலதாமதமாக வரக்கூடாது என ஆசிரியர் முரளியிடம் எவ்வளவோ கூறியபோதிலும் அவன் சிறிதும் ______________________.

a)

    தட்டிக் கேட்கவில்லை

b)

தட்டிக் கொடுக்கவில்லை

c)

செவி சாய்க்கவில்லை        

d)

    வாயைக்கட்டவில்லை

13.
  1. மதி, தன் உறவினர் வீட்டுத் திருமண விருந்தில் கொடுக்கப்பட்ட உணவு வகைகளை _________________ உண்டு முடித்தான்.

a)

    ஆறஅமர

b)

அடக்கவொடுக்கமாக

c)

ஆடாமல் அசையாமல்       

d)

  அவசரக்குடுக்கையாக

14.
  1. மாறன், கடையில் கண்ட பொம்மை தனக்கு வேண்டுமென்று தன் அப்பாவிடம் 

கேட்டு ________________அடம்பிடித்தான். 

a)

அடக்கவொடுக்கமாக

b)

ஒற்றைக்காலில் நின்று

c)

ஆடாமல் அசையாமல்       

d)

  அவசரக்குடுக்கையாக

15.
  1. பள்ளிக்குப் புதிதாக வந்த தமிழாசிரியர் தன்னிடம் ______________ மாணவர்களைக் கண்டிக்காமல் அன்பாகக் கூறித் திருத்த முயற்சி செய்கிறார்.

a)

அடக்கவொடுக்கமான

b)

ஒற்றைக்காலில் நின்ற

c)

வாலாட்டிய       

d)

  அவசரக்குடுக்கயான