wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியம் & புணரியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நான் உடனே வெளிநாட்டில் இருக்கும் என் நண்பனைக் காண வேண்டும்.

b)

கோபத்தைக் கட்டுப்படுத்துவது உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்று.

c)

அனைவரும் அரண்மனையை விட்டு வெளியேருங்கள்.

d)

ஐயோ! கால் வலிக்கிறதே!

2.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான வாக்கிய வகையைத் தெரிவு செய்க.

a)

வினா வாக்கியம் - ஒழிந்து போவாய்!

b)

செய்தி வாக்கியம் - அனைவரும் வரிசையில் நின்று பொருட்களை வாங்குங்கள்.

c)

உணர்ச்சி வாக்கியம் - ஆஹா! எத்துணை அழகான குழந்தை!

d)

விழைவு வாக்கியம் - நீ எப்பொழுது ஊருக்குச் செல்வாய்?

3.

கீழ்க்காணும் உரையாடலில் விழைவு வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

மாலா : ஜப்பானில் சுனாமி பேரலையால் பலர் உயிரிழந்தனர்.

b)

ராமு : ஐயோ! பாவம்!

c)

மங்கை : எனக்கு இன்றைய நாளிதழ் வேண்டும்.

d)

மாறன் : உனக்கு எதற்கு நாளிதழ் தேவைப்படுகிறது?

4.

கீழ்க்காணும் வாக்கியத்தின் வகையைத் தெரிவு செய்க.


தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!

a)

உணர்ச்சி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

விழைவு வாக்கியம்

5.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினா வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தயவு செய்து இருக்கையில் அமருங்கள்.

b)

நீ சாம்பலாய் போவாயாக!

c)

சுத்தம் சுகம் தரும்.

d)

அந்த கட்டிடத்தை கட்டியது அவரோ?

6.

கீழக்காண்பனவற்றுள் திரிதல் விகார விதிக்கு ஏற்ப அமைந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.


I) பாடங்கற்றாள்

II) காரஞ்சாப்பிட்டான்

III) ஆணழகன்

IV) கலைமகள்

a)

I, II

b)

III, IV

c)

I, IV

d)

II, IV

7.

கீழ்க்காணும் சொற்றொடர் புணர்ந்த விதத்தைத் தெரிவு செய்க.


காலம் + கடந்து = காலங்கடந்து

a)

மகர மெய் கரத்தோடு இயல்பாகப் புணர்ந்துள்ளது.

b)

மகர மெய் கரத்தோடு புணரும்போது மகரம் கெட்டுவிட்டது.

c)

மகர மெய் கரத்தோடு புணரும்போது இன மெல்லெழுத்தாகத் திரிந்துள்ளது.

d)

மகர மெய் கரத்தோடு புணருபோது கரம் கெட்டுவிட்டது.

8.

சரியான கெடுதல் புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

காலையுணவு

b)

தங்கயானை

c)

ஏரிக்கரை

d)

குளத்துமீன்

9.

பின்வருவனவற்றுள் பிழையான திரிதல் விகாரத்தைத் தெரிவு செய்க.

a)

பாலம் + போட்டான் = பாலம் போட்டான்

b)

சிரம் + சிதைந்தது = சிரஞ்சிதைந்தது

c)

கோபம் + தணிந்தது = கோபந்தனிந்தது

d)

கேசம் + கலைந்தது = கேசங்கலைந்தது

10.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ______________ஆகும்.


தைப்பூசத்தன்று முருகன் கோவிலிலிருந்து தங்கரதம் வெளியேறியது.

a)

மகரம் ஒற்று (ம்) + க், ச்,த்

b)

மகரம் + இடையினம்

c)

மகரம் + வல்லினம்

d)

மகரம் + மெல்லினம்