wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி புதிர் (ஆசிரியர் மோகன்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அவனன்றி ஓரணுவும் அசையாது ?

a)

குற்றத்திற்குக் காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

b)

ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

c)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

2.

புத்திமான் பலவான்

a)

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

b)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.

c)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

3.

உப்பிட்டவரை உள்ளவும் நினை

a)

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

b)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

c)

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்.

4.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

a)

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

b)

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

c)

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்.

5.

ஊருடன் கூடி வாழ்

a)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.

b)

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

c)

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

6.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

a)

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

b)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

c)

நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகள் நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

7.

ஆழம் அறியாமல் காலை விடாதே

a)

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.

b)

நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகள் நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

c)

பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

8.

பதறாத காரியம் சிதறாது.

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை , அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படும்.

c)

பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

9.

வெள்ளம் வருமுன் அணை போடு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.

c)

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக்கூடாது.

10.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

a)

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.

b)

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக்கூடாது.

c)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

11.

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

a)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

b)

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.

c)

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.

12.

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.

a)

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.

b)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

c)

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக்கூடாது.

13.

நிறைகுடம் தளும்பாது.

a)

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.

b)

எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.

c)

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.

14.

இளங்கன்று பயம் அறியாது.

a)

ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.

b)

இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.

c)

தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.

15.

சிக்கனம் சீரளிக்கும்

a)

சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

b)

சிக்கமாக வாழ்வது பல இன்னல்களை கொண்டு வரும்.

c)

தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.