NEW
Font size
Worksheetsஆத்திசூடி மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 10mins
கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?
அறஞ்செய விரும்பு
A. தருமம்
B. கோபம்
C. தீமை
D. பரிவு
எண்களும் மொழியும் நம் இரு கண்களைப் போன்றது என்ற கூற்றை விளக்கும் ஆத்திசூடி எது?
A. ஏற்ப திகழ்ச்சி
B. எண்ணெழுத் திகழேல்
C. ஈவது விலக்கேல்
D. ஆறுவது சினம்
முயற்சியை விட்டு விடக்கூடாது எனும் கூற்றை உணர்த்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
A. ஐய மிட்டுண்
B. ஓப்புர வொழுகு
C. ஊக்கமது கைவிடேல்
D. ஆறுவது சினம்
கீழ்க்காணும் கூற்று உணர்த்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
நாம் யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது.
A. ஆறுவது சினம்
B. இயல்வது கரவேல்
C. உடையது விளம்பேல்
D. ஒப்புர வொழுகு
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
மேற்காணும் உலகநீதியின் பொருளை உணர்த்தும் ஆத்திசூடி எது?
A. ஔவியம் பேசேல்
B. ஏற்ப திகழ்ச்சி
C. ஓதுவ தொழியேல்
D. ஊக்கமது கைவிடேல்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
மேற்கண்ட பொருளுக்குப் பொருந்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
A. ஊக்கமது கைவிடேல்
B. இயல்வது கரவேல்
C. அறஞ்செய விரும்பு
D. ஈவது விலக்கேல்
பின்வருவனவற்றுள் எஃது ஆத்திசூடி அல்ல?
A. உடையது விளம்பேல்
B. ஈவது விலக்கேல்
C. ஔடதம் குறை
D. ஒப்புர வொழுகு
அப்பா :
கந்தா, இன்றைய நவீன உலகில் நீயும் கணினியை இயக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்பாவின் கூற்றுக்குப் பொருந்தும் ஆத்திசூடி எது?
A. ஔவியம் பேசேல்
B. ஓதுவ தொழியேல்
C. ஓப்புர வொழுகு
D. ஊக்கமது கைவிடேல்
பிச்சையெடுப்பது இழிவான செயலாகும். எனவே, உழைத்து வாழ்.
மேற்காணும் அறிவுரைக்குப் பொருந்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
A. ஐய மிட்டுண்
B. ஆறுவது சினம்
C. ஊக்கமது கைவிடேல்
D. ஏற்ப திகழ்ச்சி
ஆத்திசூடியை அருளியவர் யார்?
A. பாரதியார்
B. உலகநாத பண்டிதர்
C. ஔவையார்
D. அதிவீர ராம பாண்டியர்
