WorksheetsGrade-6 half yearly exam
Total questions: 16
Worksheet time: 8mins
அ] சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [10x1=10]
இயல்பாகக் காற்று வெளிப்படும் போது பிறக்கும் எழுத்துகள் .
அ] மெய் எழுத்துகள்
ஆ] உயிர் எழுத்துகள்
இ] உயிர்மெய் எழுத்துகள்
தமிழில் உள்ள தனி எழுத்து எது?
அ] ஆய்தம்
ஆ] மெய்
இ] உயிர்
வன்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள்.
அ] மெல்லினம்
ஆ] இடையினம்
இ] வல்லினம்
சார்பெழுத்துகளின் வகைகள் எத்தனை?
அ] எட்டு
ஆ] பத்து
இ] ஒன்பது
உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதனை ஒத்திருக்கும்?
அ] மெய் எழுத்து
ஆ] உயிர் எழுத்து
இ] சார்பு எழுத்து
சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்து எது?
அ] ஆய்தஎழுத்து
ஆ] உயிர் எழுத்து
இ] மெய் எழுத்து
மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லில் வராத இடம் எது?
அ] இடை
ஆ] இறுதி
இ] முதல்
உயிர் எழுத்துகள் மெய் எழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லில் வரும் இடம் எது?
அ] இறுதி
ஆ] முதல்
இ] இடை
கீழ்க்கண்டவற்றுள் இன எழுத்துகள் வராத சொல் எது?
அ] அண்டம்
ஆ] தென்றல்
இ] அண்ணன்
ஒரே இனமாக வரும் மெய் எழுத்துகள் எவை?
அ] வல்லினம்
ஆ] மெல்லினம்
இ] இடையினம்
ஆ] கோடிட்ட இடங்களை நிரப்புக. [5x1=5]
எழுத்துகளை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது ______________
அ] மாத்திரை
ஆ] நித்திரை
இ] ஆதிரை
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதற்காரணமாக இருக்கும் எழுத்துகள் ______________
அ] உயிர் எழுத்துகள்
ஆ] முதல் எழுத்துகள்
இ] மெய் எழுத்துகள்
சொல்லின் இறுதியில் ________________ எழுத்துகள் தனித்து வருவதில்லை.
அ] உயிர்
ஆ] மெய்
இ] உயிர்மெய்
தமிழ் எழுத்துகளில் _______________ எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை.
அ] உயிர்
ஆ] மெய்
இ] ஆய்தம்
குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் _______________ எழுத்துகளில் இன எழுத்தாக வரும்.
அ] மெய்
ஆ] உயிர்
இ] ஆய்தம்
இ] பொருத்துக. [5x1=5]
ஆசிரியர் - நூல்கள்
1. ஒளவையார் - சிலப்பதிகாரம்
2. நெல்லை சு.முத்து - கொய்யாக் கனி
3. இளங்கோவடிகள் - நல்வழி
4. பாரதியார் - அறிவியல் ஆத்திசூடி
5. பெருஞ்சித்திரனார் - பாஞ்சாலி சபதம்
அ] 3, 4, 1, 5, 2
ஆ] 5,3,1,2,4
இ] 4,3,2,5,1
