Font size
Worksheets7. விடுதலைத் திருநாள்
Total questions: 11
Worksheet time: 55secs
'விடுதலைத் திருநாள்' என்னும் கவிதைப்பேழையின் ஆசிரியர் ________.
அ) மேத்தா
ஆ) மீரா
இ) வைரமுத்து
ஈ) ஈரோடு தமிழன்பன்
'அன்னம் விடு தூது' என்னும் இதழை நடத்தியவர் _______.
அ) மேத்தா
ஆ) மீரா
இ) வைரமுத்து
ஈ) ஈரோடு தமிழன்பன்
மீரா ஒரு ________.
அ) பள்ளி ஆசிரியர்
ஆ) கல்லூரிப் பேராசிரியர்
இ) ஆராய்ச்சியாளர்
ஈ) தத்துவ நெறியாளர்
'விடுதலைத் திருநாள்' என்னும் கவிதைப்பேழை பகுதி இடம்பெறும் நூல் ________.
அ) கோடையும் வசந்தமும்
ஆ) ஊசிகள்
இ) குக்கூ
ஈ) மூன்றும் ஆறும்
விடுதலைத் திருநாள் கவிதையில் இடம்பெறும் விடுதலை வீரர் ________.
அ) மகாத்மா காந்தி
ஆ) தந்தை பெரியார்
இ) பகத்சிங்
ஈ) நேதாஜி
சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர் _________.
அ) மகாத்மா காந்தி
ஆ) வாஞ்சிநாதன்
இ) பகத்சிங்
ஈ) நேதாஜி
'சத்தியம்' என்பதன் பொருள் ________.
அ) உயிர்
ஆ) உண்மை
இ) உலகம்
ஈ) சூளுரை
வானில் முழுநிலவு அழகாகத் ________ தந்தது.
அ) தயவு
ஆ) தரிசனம்
இ) துணிவு
ஈ) தயக்கம்
இந்த _______ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
அ) வையம்
ஆ) வானம்
இ) ஆழி
ஈ) கானகம்
'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) விலம் + கொடித்து
ஆ) விலம் + ஒடித்து
இ) விலன் + ஒடித்து
ஈ) விலங்கு + ஒடித்து
'இதம் + தரும்' என்னும் சொல்லைப் சேர்த்தெழுதக் கிடைப்பது _________.
அ) இதந்தரும்
ஆ) இதம்தரும்
இ) இதத்தரும்
ஈ) இதைத்தரும்
