wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - ஆண்டு 3

Total questions: 30

Worksheet time: 8hrs 30mins

Name
Class
Date
1.

அம்மா மீன் கறியில் சிறிதளவு ____________யைச் சேர்த்துக் கொண்டார்.

a)

புலி

b)

கலி

c)

களி

d)

புளி

2.

மீனவன் ______________ யை வீசி மீன்களைப் பிடித்தான்.

a)

கலை

b)

வலை

c)

வளை

d)

களை

3.

எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.

இன்பம்

a)

சோகம்

b)

கவலை

c)

துன்பம்

d)

மகிழ்ச்சி

4.

கரடி மரத்தடியில் உறங்கியது.

இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

உறங்கியது

b)

கரடி

c)

மரத்தடியில்

d)

மரத்தடியில் உறங்கியது

5.

சத்துள்ள


மேலே கொடுக்கப்பட்ட சொல்லின் அடிச்சொல் என்ன?

a)

உள்ள

b)

சத்துள்

c)

சத்து

d)

சத்துகள்

6.

கிளியின் ___________ வளைந்து இருக்கும்.


சரியான சினைப்பெயரைத் தெரிவுச் செய்யவும்.

a)

அலகு

b)

கால்

c)

காது

d)

வால்

7.

கருமை நிறக் காகம் கரைந்தது.


இந்த வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயர் என்ன?

a)

காகம்

b)

நிறக்

c)

கருமை

d)

கரைந்தது

8.

சுகந்தி அழகான உடை அணிந்திருந்தாள்.


இவ்வாக்கியத்தில் எழுவாய் எது?

a)

உடை

b)

சுகந்தி

c)

அணிந்திருந்தாள்

d)

அழகான

9.

அம்மா ஒரு ................. வாழைப்பழத்தை வாங்கினார்.

a)

சீப்பு

b)

கொத்து

c)

தார்

10.

கோவிட் 19 பரவுதலைத் தடுக்க மக்கள் ........... இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

a)

கூட்டமாக

b)

மந்தையாக

c)

குவியலாக

11.

விளைந்த நெல் ....... விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.

a)

குலைகளை

b)

கொத்துகளை

c)

கதிர்களை

12.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

___________________________________________

a)

யாண்டும் இடும்பை இல.

b)

நற்றாள் தொழாஅர் எனின்.

c)

புண்ணுடையர் கல்லா தவர்.

d)

இன்மை புகுத்தி விடும்

13.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்

a)

மலரும் மணமும் போல.

b)

நகமும் சதையும் போல.

c)

எலியும் பூனையும் போல.

d)

சிலை மேல் எழுத்து போல.

14.

2. மாலா அனுதினமும் காலையில் _______ வனை வழிபடுவாள்.

a)

இரை

b)

இறை

c)

ஏணி

15.

4.தலைமையாசிரியர் சபைகூடலில் __________ யாற்றினார்.

a)

உரை

b)

உறை

c)

அரம்

16.

8. உன் எதிர்கால ஆசை என்ன?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

17.

9. விஜயா அழகாக நடனம் ஆடினாள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

18.

அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக?

a)

அளவுக்கு அதிகமாகச் சேமித்தல்.

b)

அளவுக்கு மேல் செலவழித்தல்.

c)

சிக்கனமாகச் செலவழித்தல்.

d)

கருமையாக இருத்தல்.

19.

அரக்கப் பரக்க என்ற மரபுத்தொடருக்கு எற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

அவசரம்

b)

பதற்றம்

c)

அவசரமும் பதற்றமும்

d)

பயம்

20.

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?


நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒற்றுமையே பலம்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

d)

தனிமரம் தோப்பாகாது

21.
a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

பலர்பால்

22.

பந்து எந்தத் திசையில் உள்ளது?

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

23.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


திருவள்ளுவர் ___________ இயற்றினார்.

a)

கவிதைகளை

b)

திருக்குறளை

c)

பாடல்களை

d)

உரைவீச்சுகளை

24.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.

a)

கோலம்

b)

ஓவியம்

c)

சித்திரத்தைப்

25.
'மள மள' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
a)
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
b)
கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை
c)
செந்நிறமான ஒளி அல்லது கொழுந்து விட்டு எரிதல்
d)
நீர் ஓடும் ஓசை
26.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

a)

படம் பார்க்கமால் இருக்கக்கூடாது.

b)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

c)

விளையாடமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

d)

இறைவனை வணங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

27.

மாதா என்றால்

a)

மாடு

b)

மாமா

c)

அம்மா

d)

ஆட்டுக்குட்டி

28.

கடவுளை நம்பினோர்

a)

கைவிடுவார்

b)

கைக்கழுவுவார்

c)

கைவிடப்படார்

d)

கைத்தட்டுவார்

29.

ஆத்திரக்காரனுக்குப் ______ மட்டு.

a)

புத்தி

b)

மூளை

c)

அறிவு

d)

ஞானம்

30.

விடுபட்ட எழுவாயை எழுதுக.


___________________ வேகமாக ஓடின.

a)

சிறுவர்கள்

b)

குதிரைகள்