Worksheetsதமிழ்மொழி இலக்கியப் புதிர்கேள்விகள்
Total questions: 50
Worksheet time: 25mins
தங்க ஆபரணங்கள் __________வென ஜொலித்தன.
பளபள
தகதக
மளமள
சலசல
சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடி யாது?
சந்தியா தன் பெற்றோரின் துணையோடு நடமாட்டுக் கட்டுப்பாட்டுக் காலக்கட்டத்தில் தன்னால் இயன்றதைப் பிறருக்குச் செய்தாள்.
ஒப்புர வொழுகு
உடையது விளம்பேல்
இயல்வது கரவேல்
படத்திற்குப் பொருந்தும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.
கீழ்க்காணும் செய்யுளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
எல்லார்க்கும் பெய்யும் மழை
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்துகொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவர்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
இரமணி தன் பெற்றோரை இழந்த கஷ்டமான சூழலிலும் கூட பின்வாங்காமல் தன் கல்வியைப் படித்து முடித்தான்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
மகள் : அப்பா, நாம் குளிக்கும் இடத்தை நெருங்கி விட்டோமா?
அப்பா : ....... என்ற ஓசை கேட்கின்றதா? ஆம் நெருங்கி விட்டோம்.
சர சர
சல சல
கிலு கிலு
கற்கக் கசடற கற்பவைக் கற்றப்பின் நிற்க அதற்கு தக எனும் திருக்குறளுக்கு ஒப்பாக பொருள் தரும் ஆத்திசூடி என்ன?
எண்ணுவது உயர்வு
கற்றது ஒழுகு
ஓய்தல் ஒழி
இளைத்தல் இகழ்ச்சி
பின்வருவனவற்றில் எது ஔவையார் இயற்றிய ஆத்திசூடி அல்ல?
ஈவது விலக்கேல்
ஔவியம் பேசேல்
ஊக்கமது கைவிடேல்
ஆண்மை தவறேல்
தன் வீட்டில் பலவகையான உணவு இருந்தும் வாசலில் பசி என்று வந்து நின்ற முதியவரை இரக்கமே இல்லாமல் விரட்டியடித்தாள் மாலா.
சூழலுக்கு ஏற்ற ஆத்திச்சூடி என்ன?
இயல்வது கரவேல்
அறம் செய விரும்பு
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டு உண்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
கோடிடப்பட்டச் சொல்லுக்கு வேறு பொருள் என்ன?
நடத்தை
செயல்
பேச்சு
எண்ணம்
'மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்' என்ற நீதிநெறி விளக்கும் கொன்றை வேந்தன் யாது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
சூதும் வாதும் வேதனை செய்யும்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
பல்வகைச் செய்யுளை நிறைவு செய்க.
_____________ வீணையும் மாலை மதியமும்
வீசு ___________ வீங்(கு) இள வேனிலும்
மூசு வண்டறை ___________ போன்றதே
ஈசன் எந்தை இணையடி ______________.
மாலை , தென்றலும் , மாசில் , பொய்கையும்
நீழலே , மாசில் , பொய்கையும் ,தென்றலும்
மாசீல் , தென்றலும் , பொய்கையும் , நீழலே
'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்... '
மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்யுளடி இடம்பெற்றுள்ள பகுதி என்ன ?
நல்வழி
நாலடியார்
மூதுரை
நீதிநெறி விளக்கம்
கோவலன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி________ துடித்தாள்.
அனலில் இட்ட மெழுகு போல
இலைமறை காய் போல
எலியும் பூனையும் போல
காட்டுத் தீ போல
ஓடை நீர் _____ என ஓடியது
மளமள
சலசல
கலகல
குடுகுடு
பெருநாள்கள் வந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறைதானே என்று நினைத்து அதிகமாகச் செலவு செய்வோம்; வியர்வை சிந்தி சம்பாதித்ததை வீணாக அழித்து விடுவோம்.
சிறு துளி பெரு வெள்ளம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிக்கனம் சீரளிக்கும்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறா உம்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
ஆன்முதலில் அதிகஞ் செலவானால்
செய்யுளைப் பூர்த்தி செய்க.
நல்லார்க்கும் ________ நடுநின்ற நடுவே
கெட்டவர்க்கும்
கற்றவர்க்கும்
நரர்களுக்கும்
பொல்லார்க்கும்
மறைந்த நடனக் கலைஞர் மைக்கல் ஜாக்சனின் ______________ ஏலத்தில் விடப்பட்டன.
பேரும் புகழும்
ஆடை அணிகலன்கள்
கல்வி கேள்வி
குறை நிறை
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
_____________________________
திண்ணிய ராகப் பெறின்
எழுமையும் ஏமாப் புடைத்து
நிற்க அதற்குத் தக.
புண்ணுடையார் கல்லா தவர்
கீழ்காணவற்றுள் பிழையான இணை எது?
அன்றும் இன்றும் = எந்தக்காலத்திலும்
கரடு முரடு=சமமில்லாத நிலை
தாயும் சேயும்= நாலாப் பக்கமும்
நன்மை தீமை=நல்லது கெட்டது
நூறாண்டு பழகினும் ____1______ கோண்மை ____2_____ பாசிபோல் வேர் கொள்ளாதே.
1.மேன்மை 2. மூர்க்கர்
1.மூத்தோர் 2.நீர்க்குட்
1.மூர்க்கர் 2.நீர்க்குட்
1.நீர்க்குட் 2.மூர்க்கர்
படத்தின் புதிய ஆத்திசூடி விளக்கும் பொருள் யாது?
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்
காலம் கிடைத்தற்கரியது. அதனை வீணில் கழித்துவிட வேண்டாம்.
கண்,காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
சரியான இணையைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் ~ பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் ~ யாரையுப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் ~ மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் ~ தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற நண்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற நாமே முயற்சி செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.
செய்தி 1 :
கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.
செய்தி 2 :
ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்
ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்
இயல்வது கரவேல், அறம் செய விரும்பு
உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
ஒருவரை போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.
பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.
திரு திரு, தக தக
தக தக, திரு திரு
திரு திரு, தர தர
கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
பல நாட்களாக ஊண் உறக்கம் இல்லாமல் பணி புரிந்த திரு இரமணி ........ காணப்பட்டார்.
அங்கும் இங்கும்
உருண்டு திரண்டு
அல்லும் பகலும்
எலும்பும் தோலுமாக
சிலாம்புசெல்வன் சிறு வயதிலிருந்து முழுக்கவனத்துடன் கல்வி கற்று, இன்று மருத்துவத் துறையில் பட்டதாரியாகி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளான்.
கண்ணும் கருத்துமாக
செவி சாய்த்தல்
கிணற்றுத் தவளை
நாக்கு நீளுதல்
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
படிப்பது அவசியம். ஆனால், பிழையில்லாமல் பேசும்போதுதான் படித்தக் கல்விக்கு மதிப்பு
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
ஒளவியார்
சமண முனிவர்
பாரதியார்
குமரகுருபர சுவாமிகள்
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க
கல்வியறிவு - கல்வி கேள்வி
உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்
சீரும் சிறப்பும் - அருமை பெருமை
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது
B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்
ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
A. அன்றும் இன்றும்
B. அல்லும் பகலும்
C. எலியும் பூனையும்
D. ஆடை அணிகலன்
சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான். இத்திட்டத்தின் ___i_____ எண்ணிக் குழப்பம் அடைந்தான். இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின் ஆலோசனைப்படி கோழிகளை வளர்த்தான். கோழிகள் _______ii_____ காணப்படன.
A. எலும்பும் தோலும் - நன்மை தீமைகளை
B. நன்மை தீமைகளை - உருண்டு திரண்டு
C. ஆடை அணிகலன்களை - உருண்டு திரண்டு
D. துணி மணிகளை - எலும்பும் தோலும்
1. ‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
A. மனப்பால் குடித்தல்
B. செவி சாய்த்தல்
C. கம்பி நீட்டுதல்
D. குரங்குப் பிடி
கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.
A.தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனைத் திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.
B.கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.
C.தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.
D.அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.
குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................
கை கொடுத்தான்.
தோள் கொடுத்தான்.
கரி பூசினான்.
கங்கணம் கட்டினாள்.
"இப்போது கணினித் துறையில்தான் அதிகமான வாய்ப்பு உள்ளது. எனவே, அத்துறையில்தான் நான் மேற்கல்வியைத் தொடரவுள்ளேன்" என்று இளமாறன் கூறினான்.
இக்கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க
ஒப்புர ஒழுகு
ஓதுவ தொழியேல்
ஊக்கமது கைவிடேல்
ஔவியம் பேசேல்
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றி வேற்கைக்கேற்ற சரியான சூழலைத் தெரிவு செய்க.
பிரதமர் தமது தேசிய தின உரையில் மக்கள் பிளவுபட்டிருந்தால் நாடு முன்னேற்றம் காணாது; என்றும் எல்லாத் துறைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டால்தான் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் என்றார்.
சுந்தர் அவர் ஊரில் பிரபலமான ஒருவர்.இருப்பினும், பலர் அவரோடு பேசுவதைத் தவிர்ப்பார்கள்; காரணம் ஒவ்வொரு முறையும் அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவதற்குக் கடினமாக இருக்கும்.
டாக்டர் காதர் இப்ராஹிம் சொற்பொழிவிற்கு ஒவ்வொரு முறையும் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதற்கு முக்கிய கரணியம் அவர் கற்ற கல்விக்கேற்ப தெளிவாகவும், பிழையில்லாமலும், பல நகைச்சுவை துணுக்குகளோடு பேசுவதேயாகும்.
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.
அள்ளி இறைத்தல்
அரக்க பரக்க
வாரி இறைத்தல்
மனப்பால் குடித்தல்
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?
நாதன் :.........................................................................................
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உறுமீன் என்பதன் பொருள்
பெரிய மீன்
சிறிய மீன்
நடு மீன்
