wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் இலக்கணம்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

து,தை,தொ எனும் எழுத்துகள் _______________ வகையைச் சார்ந்தவை.

a)

மெல்லின உயிர்மெய்

b)

வல்லின உயிர்மெய்

c)

உயிர்மெய்க் குறில்

d)

வல்லினமெய் எழுத்து

2.

து,தை,தொ எனும் எழுத்துகள் _______________ வகையைச் சார்ந்தவை.

a)

மெல்லின உயிர்மெய்

b)

வல்லின உயிர்மெய்

c)

உயிர்மெய்க் குறில்

d)

வல்லினமெய் எழுத்து

3.

ய,_____,_____,வ,____,ள - காலி இடத்தில் இருக்க வேண்டிய எழுத்துகள் யாவை ?

a)

ற,ழ,ல

b)

ர,ல,ழ

c)

ர,ழ,ல

d)

ற,ல,ழ

4.

கிரந்த எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

b)

ஞௌ

c)

d)

5.

கோடிடப்பட்டுள்ள ஒருமைக்கு ஏற்ற பன்மையைத் தெரிவு செய்க.

நல்லது

a)

நல்லவைகள்

b)

நல்ல

c)

நல்லவை

d)

நன்மைகள்

6.

கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருள் என்ன

ஈவது விலக்கேல்

a)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறுக்கக்கூடாது.

b)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.

c)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

7.

கீழுள்ள சொற்கள் எந்த இடத்தைக் குறிக்கின்றன

நான் , என் , நாங்கள் , எங்கள்

a)

முன்னிலை

b)

தன்மை

c)

படர்க்கை

8.

படம் காட்டும் சரியான புதிய ஆத்திசூடி எது ?

a)

ஔடதம் குறை

b)

ஊண்மிக விரும்பு

c)

உடலினை உறுதி செய்

d)

ஓய்தல் ஒழி

9.

பல்வகைச் செய்யுளை நிறைவு செய்க.

_____________ வீணையும் மாலை மதியமும்

வீசு ___________ வீங்(கு) இள வேனிலும்

மூசு வண்டறை ___________ போன்றதே

ஈசன் எந்தை இணையடி ______________.

a)

மாலை , தென்றலும் , மாசில் , பொய்கையும்

b)

நீழலே , மாசில் , பொய்கையும் ,தென்றலும்

c)

மாசீல் , தென்றலும் , பொய்கையும் , நீழலே

10.

சேர்த்தெழுதுக: இன்று + பார்த்தேன்=

a)

இன்று பார்த்தேன்

b)

இன்றுப் பார்த்தேன்

11.

காலையில் தாமதமாக எழுந்த செல்வி ________________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு _____________ என ஓடினாள்.

a)

மள மள, தட தட

b)

மள மள , குடு குடு

c)

மட மட, குடு குடு

12.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

ஓட்டை வாய் - அதிகம் பேசுதல்

b)

பெயர் பொறித்தல் - நிறைவேறுதல்

c)

கண்ணும் கருத்தும் - முழு கவனத்துடன்

13.

____________களில் சிறந்த விளங்கிய விலாசினி, இன்று சிறந்த விஞ்ஞானியாக விளங்குகிறாள்

a)

கல்வி கேள்வி

b)

பேரும் புகழும்

c)

ஒளிவு மறைவு

14.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை. சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

ஆற்றல் கொண்டு இயங்குபவருக்குத் தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்தும்.

b)

அக்கறையெடுத்துக் கொண்டால், நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

c)

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வ

15.

கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

c)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

16.

கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?

a)

ஏறுபோல் நட

b)

ஒப்புர வொழுகு

c)

ஆண்மை தவறேல்

17.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நாங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறோம்.

b)

என் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்

c)

உமா நாட்டியப் பள்ளியில் சேர்ந்தாள்

18.

சிறுகச் சிறுகச் சேமித்துப் பெருமைபட வாழ வேண்டும்

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

சிறுகக் கட்டிப் பெருக வாழ்

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

19.

வனைந்தான் இச்சொல்லின் வேர்ச்சொல் கண்டறிக

a)

வனை

b)

வனைந்து

c)

வனைந்த

d)

வனைந்தது

20.

கீழ்காணும் விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

21.

கொடுக்கப்பட்ட செய்யுளடி உணர்த்தும் கருத்து யாது? மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

a)

காலத்தின் அருமையையும் கருதாது செயலில் கருத்தூன்றி இருத்தல்

b)

ஒருவர்தான் நினைத்த செயலை முடித்திடும் உறுதி

c)

செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம்

d)

உடல்நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல்

22.

கீழே உள்ளவற்றுள் பிழையான பொருளைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

சுற்றும் முற்றும் - சில இடங்களில்

b)

ஆடை அணிகலன் - உடையும் ஆபரணமும்

c)

தான தர்மம் - கொடை தருதல்

d)

மேடு பள்ளம் - சமமற்ற நிலப்பகுதி

23.

இஃது எவ்வகை எழுத்தாகும் ?

கோ

a)

உயிர்மெய் குறில் எழுத்து

b)

உயிர்மெய் நெடில் எழுத்து

c)

கிரந்த எழுத்து

d)

மெய் எழுத்து

24.

கீழ்காண்பனவற்றுள் வினையடையை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

மங்கை இனிமையான பாடலைப் பாடினாள்

b)

மங்கை இனிய பாடலைப் பாடினாள்

c)

மங்கை பாடலை இனிமையாகப் பாடினாள்

d)

மங்கை பாடிய பாடல் இனிமையானது.

25.

இலக்கணப் பிழைகளை அடையாளங்காண்க :

மலர்விழி ஒரு அழகிய பூமாலையைத் தொடுத்தாள்.

a)

மலர்விழி

b)

பூமாலையைத்

c)

தொடுத்தாள்.

d)

ஒரு