wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் - ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சாரணர் முகாமில் கலந்து கொண்டவர்களில் மிகவும் அமைதியாகக் காணப்பட்ட கந்தன், திறமையாக ஒவ்வொரு பயிற்சியையும் செய்த போது ________________________________ அவனது ஆற்றல் வெளிப்பட்டது.

a)

காட்டுத் தீ போல

b)

இலைமறை காய் போல

c)

குடத்திலிட்ட விளக்கு போல

d)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

2.

இதுநாள் வரை பல மோசடிகளைச் செய்து வந்த சீலன், அந்தக் கொள்ளைச் சம்பவத்தினால் ________________ தன் நிலை இருப்பதை உணர்ந்தான்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

இலைமறை காய் போல

c)

மலரும் மணமும் போல

d)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

3.

பல ஆண்டுகளாக இராஜாவைச் சூழ்ந்திருந்த வறுமை, இன்று திரு.சந்திரரின் உதவியால் _______________________நீங்கியது.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

மலரும் மணமும் போல

c)

சிலை மேல் எழுத்துப் போல

d)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

4.

புனர்வாழ்வு மையத்திலிருந்து போதைப் பித்தர்கள் தப்பியோடிய தகவல் _________________ மக்களைச் சென்றடைந்தது.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

காட்டுத் தீ போல

c)

மலரும் மணமும் போல

d)

எலியும் பூனையும் போல

5.

இவர்களைப் பெரியவர்கள் எப்படி வாழ்த்துவார்கள்?

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

காட்டுத் தீ போல

c)

மலரும் மணமும் போல

d)

எலியும் பூனையும் போல

6.

படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

எலியும் பூனையும் போல

d)

நகமும் சதையும் போல

7.

படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

எலியும் பூனையும் போல

d)

நகமும் சதையும் போல

8.

படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

எலியும் பூனையும் போல

d)

நகமும் சதையும் போல

9.

தமக்கு எதிராக அரசாட்சியைக் கைப்பற்ற தம் உடன் பிறந்த தம்பியே சதித்திட்டம் தீட்டுகிறான் என்பதை அறிந்த குமண மன்னர் _____________________ வேதனைப்பட்டார்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

காட்டுத் தீ போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

எலியும் பூனையும் போல

10.

_____________ இருந்த தமிழ்மதியின் பேச்சுத் திறமை சொற்போர் போட்டி வழியாக அனைவராலும் அறியப்பட்டது.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

இலைமறை காய் போல

c)

மலரும் மணமும் போல

d)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல