wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆ5-பழமொழி

Total questions: 7

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்ற பழமொழிக்குப் பொருந்தாத சூழலைத் தெரிவு செய்க.

a)

தன் அக்காள் இருந்தவரை அவளுடன் தினமும் சண்டை இட்ட கபிலன், அவள் படிப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்றவுடன் அவளின் பிரிவை எண்ணி வருந்துகிறான்.

b)

கணித பாடத்தில் 15 புள்ளிகள் மட்டும் பெற்ற சிவா, அக்கறையோடு படித்ததால் இறுதியாண்டு தேர்வில் 74 புள்ளிகள் பெற்றான்.

c)

எப்பொழுதும் தன் அம்மாவைத் திட்டிக்கொண்டிருந்த அமலா, அவர் இறந்த பின்பே அவரின் அன்பை உணர்ந்தாள்.

2.

கல்வி மட்டுமின்றி பொது விஷயங்களையும் தேடித்தேடி படித்த சக்தி மிகந்த அறிவாளியாகத் திகழ்ந்தான். இருப்பினும், அவன் என்றும் தனக்கு எல்லாம் தெரியும் என பெருமை பேசியதில்லை. இச்சூழலுக்கு ஏற்ற பழமொழிகளைத் தெரிவு செய்க.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

c)

நிறைகுடம் தளும்பாது

d)

வருந்தினால் வராதது இல்லை.

3.

இனியன் பள்ளி சட்டாம்பிள்ளையாவான். அவன் தன் நண்பர்கள் செய்யும் தவறுகளை மட்டும் ஆசிரியரிடம் தெரிவிக்க மாட்டான்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

c)

நிறைகுடம் தளும்பாது

d)

வருந்தினால் வராதது இல்லை

4.

பழமொழியைப் பூர்த்தி செய்க.


இமைக் _______________ கண்ணுக்குத் ___________________.

a)

குற்றம், தெரியாது

b)

குற்றம், தெரியும்

c)

தவறு, தெரியாது

d)

தப்பு, தெரியாது

5.

'வருந்தினால் வராதது இல்லை' என்ற பழமொழிக்கேற்ற சூழலைத் தெரிவு செய்க.

a)

அந்தக் கலைஞர் சிற்பக் கலையில் சிறந்து விளங்கினாலும் எப்போதும் தன்னடக்கமாகவே காணப்படுவார்.

b)

கமலா தன் பாட்டி உயிருடன் இருந்த வரை அவரைச் துச்சமாக நினைத்தால். ஆனால், அவர் இறந்த பிறகே அவரின் அருமை தெரிந்தது.

c)

கண்ணும் கருத்துமாகக் கல்வி கற்ற சுடர்விழி தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுப் பல்கலைக்கழகம் வரை சென்றாள்.

6.

'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்ற பழமொழிக்கேற்ற சூழலைத் தெரிவு செய்க.

a)

அந்தக் கலைஞர் சிற்பக் கலையில் சிறந்து விளங்கினாலும் எப்போதும் தன்னடக்கமாகவே காணப்படுவார்.

b)

கமலா தன் பாட்டி உயிருடன் இருந்த வரை அவரைச் துச்சமாக நினைத்தால். ஆனால், அவர் இறந்த பிறகே அவரின் அருமை தெரிந்தது.

c)

கண்ணும் கருத்துமாகக் கல்வி கற்ற சுடர்விழி தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுப் பல்கலைக்கழகம் வரை சென்றாள்.

7.

கபிலன் மிகுந்த அக்கறையுடன் வாகனப் பழுதுப்பார்க்கும் தொழிலைக் கற்றுக் கொண்டதால், இன்று மிகப் பெரிய பட்டறை ஒன்றனை நடத்தி வருகிறான்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

c)

நிறைகுடம் தளும்பாது

d)

வருந்தினால் வராதது இல்லை.