wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 12

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

d)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

2.

அமுதாவின் அண்ணன் குபேரன் கவிதை பாடுவதில் சிறந்தவர். எனினும், அவர் எளிமையாகவும் அமைதியாகவும் நடந்து கொள்வார்.

a)

புத்திமான் பலவான்.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே.

3.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்குக் குற்றமாகத் தெரியாது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

b)

வருந்தினால் வாராதது இல்லை.

c)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

4.

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.

______________ தளும்பாது.

a)

அரைகுடம்

b)

நிறைவாளி

c)

மரைவாளி

d)

நிறைகுடம்

5.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?


ஒருவரின் அருமை அவர் பிரிந்து சென்றபோதுதான் தெரியும்.

a)

A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

B. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

C. வெள்ளம் வருமுன் அணைபோடு

d)

D. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

6.

ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

a)

A. ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

B. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

C. முன் வைத்த காலைப் பின் வைக்காதே

7.

________________ அருமை __________ தெரியும்.

a)

வெயிலின், நிழலில்

b)

ஆற்றில், சேற்றில்

c)

ஆழம், காலை

d)

நிழலின், வெயிலில்

8.

10. தனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த தோழி பள்ளி மாற்றலாகி சென்றதால் அபினயா பாடம் படிக்கச் சிரமப்பட்டாள்.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றில் ஒரு கால்

d)

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்

9.

பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.

வருந்தினால் வாராதது இல்லை.

a)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

b)

முயற்சியெடுத்துக் கொண்டால் நாம் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லை.

c)

அன்பாக நடந்து கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

d)

கடுமையாக நடந்து கொண்டால் நாம் எதையும் செய்து முடிக்க முடியாது.

10.

தன் தாயின் தியாக உள்ளத்தை உணராத தயாளன், அவர் இறந்த பிறகு அதனை நினைத்து வருந்தினான்.

a)

வருந்தினால் வாராதது இல்லை.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

d)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

11.

இலட்சுமி எல்லாப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தாலும், எப்போதுமே அவள் அடக்கத்துடனும் அமைதியுடனும் காணப்படுவாள்.

a)

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

d)

புத்திமான் பலவான்.

12.

இசையையும் தையற்கலையையும் கற்றுக் கொண்டிருந்த சஞ்சனா இறுதியில் எதையும் திறம்பட கற்கவில்லை.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே.

b)

நிறைகுடம் தளும்பாது.

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்.

d)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.