wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 மீள்பார்வை 2

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - _____________

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

a)

உலகில்

b)

ஆங்கே

c)

தொல்லுலகில்

d)

மண்ணுலகில்

2.

கடந்த கேள்வியில் விடுப்பட்ட சொல்லின் எதை குறிக்கின்றது ? (தொல்லுலகில்)

a)

சொர்கத்தில்

b)

நரகத்தில்

c)

இந்த மண்ணில்

d)

இவ்வுலகில்

3.

கற்கை நன்றே ________ நன்றே

பிச்சை _________ கற்கை நன்றே

a)

நன்றே , கற்கை

b)

கற்கை , நன்றே

c)

புகினும் , கற்கை

d)

கற்கை , புகினும்

4.

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே


என்பது என்ன?

a)

பழமொழி

b)

திருக்குறள்

c)

வெற்றி வேற்கை

d)

இரட்டைக் கிளவி

5.

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே


என்பதன் பொருள் என்ன?

a)

எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது

b)

எந்த வறுமை நிலையிலும் கல்வி கற்றதை விடலாகாது

c)

எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடக்கூடாது

d)

எத்தகைய சிறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது

6.

சூழலுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவுச் செய்க.


சிவா மிகவும் நல்லவன். ஆனால், அவனிடன் உள்ள ஒரே தீய பழக்கம் யார் எவர் என்று பார்க்காமல் மனதில் தோன்றியதை மரியாதையின்றி கூறிவிடுவான். இதனால் பலர் முகம் சுளிக்க நேரிடும்.

a)

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்

b)

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

c)

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

7.

தமிழ்மொழியில் வருமொழியில் வல்லெழுத்துகள் வந்தாலும் சில இடங்களில் வலிமிகாது. அவற்றை இரண்டைத் தெரிவுச் செய்க.

a)

ண்டு

b)

ய்து

c)

ந்து

d)

த்து

8.

தலை குனிதல்

a)

கரி பூசுதல்

b)

அவமானம் அடைதல்

c)

பலரும் பாராட்டுதுதல்

d)

உறவைத் துண்டித்தல்

9.

தலை முழுகுதல்

a)

கரி பூசுதல்

b)

அவமானம் அடைதல்

c)

பலரும் பாராட்டுதுதல்

d)

உறவைத் துண்டித்தல்

10.

வெளுத்து வாங்குதல்

a)

கரி பூசுதல்

b)

அவமானம் அடைதல்

c)

பலரும் பாராட்டுதுதல்

d)

உறவைத் துண்டித்தல்

11.

ஓடி + பிடித்து

a)

ஓடிப் பிடித்து

b)

ஓடிப்பிடித்து

c)

ஓடி பிடித்து

d)

ஓடிபிடித்து

12.

கேள்வி 21 அ)

சரியான கூற்றை மட்டும் அடையாளமிடுக.

a)

உயிரெழுத்துகள் - 12

b)

உயிர்க்குறில் - 7

c)

மெய்யெழுத்துகள் - 18

d)

ஆய்த எழுத்து - 2

13.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


ஆசிரியர் பணி (.............................) அறப்பணி.

a)

ஓர்

b)

ஒரு

14.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


(.............................) ஓர் அழகிய கிராமம்.

a)

அது

b)

அஃது

15.

கேள்வி 21

ஆ)திருக்குறளை நிறைவு செய்க.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

................................................................................................

a)

யாண்டும் இடும்பை இல

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

உயிரினும் ஓம்பப் படும்

16.

உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

c)

ஒருவரை போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.

17.

கீழ்க்காணும் கவிதைக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

18.

சிலாம்புசெல்வன் சிறு வயதிலிருந்து முழுக்கவனத்துடன் கல்வி கற்று, இன்று மருத்துவத் துறையில் பட்டதாரியாகி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளான்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

செவி சாய்த்தல்

c)

கிணற்றுத் தவளை

d)

நாக்கு நீளுதல்

19.

வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.


பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.

a)

திரு திரு, தக தக

b)

தக தக, திரு திரு

c)

திரு திரு, தர தர

20.

படத்திற்குப் பொருந்தும் திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

b)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருக்கக் காய்கவர்ந் தற்று

c)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு