wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

a)

உறுதி பூணுதல்

b)

ஏமாற்றித் தப்புதல்

c)

முழுக் கவனத்துடன்

d)

அற்பமான ஒருவர்

2.

கீழ்காணுபவற்றில் 'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் குறிப்புச் சொற்களைத் தெரிவுச் செய்க.

a)

மனம் தளருதல்

b)

விடாமுயற்சியோடு இருத்தல்

c)

தன்நம்பிக்கை இல்லாமல் இருத்தல்

d)

பொறாமை கொள்ளுதல்

3.

கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவுச் செய்க

a)

மதி வாழ்வில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவள்.

b)

வாசு தன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என எண்ணம் மட்டும் கொண்டிருந்தான்.

c)

கபிலன் நீண்ட நாள் வேலை கிடைக்காமல் இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டினான்.

4.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தாத வாக்கியத்தைத் தெரிவுசெய்க

a)

சிவா தேர்வில் முழுத்தேர்ச்சி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டி விடாமுயற்சியோடு செயல்பட்டான்.

b)

முகிலன் கல்விக் கேள்விகலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமல் இருந்தான்.

c)

அரசன் பூப்பந்து வீரராக வேண்டும் என்று கங்கணம் கட்டி தன்நம்பிக்கை கொண்டு பயிற்சிகளை மேற்கண்டான்.

5.

கீழ்க்காணும் மரபுத்தொடருக்கான பொருள்களைக் கண்டறிக.

- கடுக்காய் கொடுத்தல்

a)

உறுதி பூணுதல்

b)

கம்பி நீட்டுதல்

c)

கரி பூசுதல்

d)

ஏமாற்றித் தப்புதல்

6.

கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

c)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

7.

தொன்று தொட்டு


என்பதன் பொருள் என்ன?

a)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

b)

நெடுங்காலமாய்

8.

உச்சி குளிர்தல்


என்பதன் பொருள் என்ன?

a)

நெடுங்காலமாய்

b)

ஆதிகாலத்திலிருந்து

c)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

9.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

10.

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

கரி பூசினாள்.

b)

கங்கணம் கட்டினாள்.

c)

ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

கை கொடுத்தாள்.

11.

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

12.

சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என நினைப்பது. _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

13.

'நீ அந்தப் பணத்தை ஏமாற்றி எடுத்ததும் இல்லாமல் அதை இவ்வளவு நேரம விசாரித்தும் ஒப்புக்கொள்ளாமல் பல பொய்களைச் சொல்லி தப்பித்து ஓடப் பார்க்கிறாயா?'


சூழலுக்குப் பொருந்தாத மரபுத்தொடர் எது?

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

காது குத்துதல்

d)

கம்பி நீட்டுதல்

14.

கணித் மேதையான ராமானுஜன் அவர்கள் கணிதத் தொடர்பான எல்லா நுணுக்கங்களையும் _________________.

a)

கங்கணம் கட்டியுள்ளார்

b)

மனப்பால் குடித்துள்ளார்

c)

தட்டிக் கழித்துள்ளார்

d)

கரைத்துக் குடித்துள்ளார்

15.

கல்வியில் சிறந்த மாணவனாக வர வேண்டும் என்று _________ கொண்டு அல்லும் பகலும் படித்துக் கொண்டிருக்கும் தன் மகனைக் கண்டு திரு.ராமு ______________.

a)

கங்கணம் கட்டிக், செவி சாய்த்தார்

b)

கரைத்துக் குடித்துக், கைக் கொடுத்தார்

c)

ஒரு கைப் பார்த்துக், கடுக்காய கொடுத்தார்

d)

கங்கணம் கட்டிக், உச்சிக் குளிர்ந்தார்