wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி இலக்கியம் 1

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற ஆத்திசூடி யாது?


முயற்சியை விட்டு விடக்கூடாது

a)

ஈவது விலக்கேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

இளத்தல் இகழ்ச்சி

d)

உடலினை உறுதிசெய்

2.

புதிய ஆத்திசூடியை நிறைவு செய்க.


_________________________ வலிமையாம்.

a)

ஓய்தல்

b)

எண்ணுவது

c)

ஆட்சிகொள்

d)

ஒற்றுமை

3.

கொடுக்கப்பட்ட படத்திற்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஓதுவ தொழியேல்

b)

இயல்வது கரவேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஆறுவது சினம்

4.

படத்தின் புதிய ஆத்திசூடி விளக்கும் பொருள் யாது?

a)

துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.

b)

எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்

c)

காலம் கிடைத்தற்கரியது. அதனை வீணில் கழித்துவிட வேண்டாம்.

d)

கண்,காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.

5.

கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?

a)

ஏறுப்போல் நட

b)

ஒப்புர வொழுகு

c)

ஔடதம் குறை

d)

ஏற்பது இகழ்ச்சி

6.

சரியாக நிறைவு செய்க.


கொன்றை வேந்தன்: ஐயம் புகினும் செய்வனச் செய்


பொருள்: _____________ எடுக்கும் அளவுக்கு ____________

ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய

______________________ செய்ய வேண்டும்.

(a)  

7.

படத்திற்கேற்ற கொன்றை வேந்தன் என்ன?

a)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

b)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

c)

ஏவா மக்கம் மூவா மருந்து

d)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

8.

மேற்காணும் உணர்த்தும் கொன்றை வேந்தன்களை அடையாளமிடுக.

a)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

9.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் ~ பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

b)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் ~ யாரையுப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

c)

போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் ~ மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் ~ தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது.

10.

படத்திற்கேற்ற கொன்றை வேந்தன்களைத் தெரிவு செய்க.

a)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

b)

சினந்திருத்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்.

c)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

d)

தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்

11.

சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடி யாது?


சந்தியா தன் பெற்றோரின் துணையோடு நடமாட்டுக் கட்டுப்பாட்டுக் காலக்கட்டத்தில் தன்னால் இயன்றதைப் பிறருக்குச் செய்தாள்.

a)

ஒப்புர வொழுகு

b)

உடையது விளம்பேல்

c)

இயல்வது கரவேல்

12.

படத்திற்குப் பொருந்தும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

உடலினை உறுதிசெய்

c)

ஊண்மிக விரும்பு

13.

கவிதைக்குப் பொருந்தும் கொன்றை வேந்தன் எது?

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

14.

படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

15.

பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

c)

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.

16.

கீழ்க்காணும் செய்யுளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

a)

எல்லார்க்கும் பெய்யும் மழை

b)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

c)

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

17.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்துகொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவர்.

a)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

b)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்

c)

மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

18.

இரமணி தன் பெற்றோரை இழந்த கஷ்டமான சூழலிலும் கூட பின்வாங்காமல் தன் கல்வியைப் படித்து முடித்தான்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

19.

மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


நாக்கு நீளுதல்

a)

உறுதி பூணுதல்

b)

அவமானப்படுதல்

c)

வரம்பு மீறிப் பேசுதல்

20.

மகள் : அப்பா, நாம் குளிக்கும் இடத்தை நெருங்கி விட்டோமா?


அப்பா : ....... என்ற ஓசை கேட்கின்றதா? ஆம் நெருங்கி விட்டோம்.

a)

சர சர

b)

சல சல

c)

கிலு கிலு

21.

அறம் செய்ய விரும்பு. இதை எழுதியது யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

அதிவீரம பாண்டியன்

d)

திருவள்ளுவர்

22.

கோவலன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி________ துடித்தாள்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

இலைமறை காய் போல

c)

எலியும் பூனையும் போல

d)

காட்டுத் தீ போல

23.

பெருநாள்கள் வந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறைதானே என்று நினைத்து அதிகமாகச் செலவு செய்வோம்; வியர்வை சிந்தி சம்பாதித்ததை வீணாக அழித்து விடுவோம்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

24.

ஓடை நீர் _____ என ஓடியது

a)

மளமள

b)

சலசல

c)

கலகல

d)

குடுகுடு

25.

கதவைத் தட்டும் ஓசை.

a)

தகதக

b)

தடதட

c)

கிடுகிடு

d)

குடுகுடு

26.

"நாந் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்," என மாலதி கூறினாள்.

a)

முழு மூச்சு

b)

பெயர் பொறித்தல்

c)

கங்கணம் கட்டுதல்

d)

கண்ணும் கருத்தும்

27.

தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது?

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறா உம்

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

d)

ஆன்முதலில் அதிகஞ் செலவானால்

28.

செய்யுளைப் பூர்த்தி செய்க.


நல்லார்க்கும் ________ நடுநின்ற நடுவே

a)

கெட்டவர்க்கும்

b)

கற்றவர்க்கும்

c)

நரர்களுக்கும்

d)

பொல்லார்க்கும்

29.

மறைந்த நடனக் கலைஞர் மைக்கல் ஜாக்சனின் ______________ ஏலத்தில் விடப்பட்டன.

a)

பேரும் புகழும்

b)

ஆடை அணிகலன்கள்

c)

கல்வி கேள்வி

d)

குறை நிறை

30.

கீழ்காணவற்றுள் பிழையான இணை எது?

a)

அன்றும் இன்றும் = எந்தக்காலத்திலும்

b)

கரடு முரடு=சமமில்லாத நிலை

c)

தாயும் சேயும்= நாலாப் பக்கமும்

d)

நன்மை தீமை=நல்லது கெட்டது

31.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

_____________________________

a)

திண்ணிய ராகப் பெறின்

b)

எழுமையும் ஏமாப் புடைத்து

c)

நிற்க அதற்குத் தக.

d)

புண்ணுடையார் கல்லா தவர்

32.

நூறாண்டு பழகினும் ____1______ கோண்மை ____2_____ பாசிபோல் வேர் கொள்ளாதே.

a)

1.மேன்மை 2. மூர்க்கர்

b)

1.மூத்தோர் 2.நீர்க்குட்

c)

1.மூர்க்கர் 2.நீர்க்குட்

d)

1.நீர்க்குட் 2.மூர்க்கர்

33.

உலக நீதியை இயற்றிவர்__________

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

34.

நுண்ணிய கரும்மும்_____________.

a)

செய்வன செய்

b)

எண்ணித் துணிக.

c)

வேதனை செய்யும்

d)

கண்ணெனத் தகும்

35.

அன்னையர் தினத்தன்று பலர் தங்கள் அன்னையிடம் ஆசி பெற்று அவருக்குப் பரிசுகளைக் கொடுப்பர்.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஆலயம் தொழுவது சாலமும் நன்று

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

36.

கற்கக் கசடற கற்பவைக் கற்றப்பின் நிற்க அதற்கு தக எனும் திருக்குறளுக்கு ஒப்பாக பொருள் தரும் ஆத்திசூடி என்ன?

a)

எண்ணுவது உயர்வு

b)

கற்றது ஒழுகு

c)

ஓய்தல் ஒழி

d)

இளைத்தல் இகழ்ச்சி

37.

பின்வருவனவற்றில் எது ஔவையார் இயற்றிய ஆத்திசூடி அல்ல?

a)

ஈவது விலக்கேல்

b)

ஔவியம் பேசேல்

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஆண்மை தவறேல்

38.

" வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்"

இப்பாடல் வரிகள் விளக்கும் ஔவையாரின் ஆத்திசூடி என்ன?

a)

ஆறுவது சினம்

b)

ஒப்புர ஒழுகு

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஓதுவ தொழியேல்

39.

தன் வீட்டில் பலவகையான உணவு இருந்தும் வாசலில் பசி என்று வந்து நின்ற முதியவரை இரக்கமே இல்லாமல் விரட்டியடித்தாள் மாலா.

சூழலுக்கு ஏற்ற ஆத்திச்சூடி என்ன?

a)

இயல்வது கரவேல்

b)

அறம் செய விரும்பு

c)

ஏற்பது இகழ்ச்சி

d)

ஐயமிட்டு உண்

40.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஏறுபோல் நட , ஈகைத் திறன்

b)

ஆண்மை தவறேல் , அச்சம் தவிர்

c)

ஓய்தல் ஒழி , காலம் அழியேல்

d)

உடலினை உறுதி செய் , இளைத்தல் இகழ்ச்சி

41.

கொடுக்கப்பட்டுள்ள உரையாடலுக்கு ஏற்ற உலக நீதியைத் தேர்ந்தெடுக.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

c)

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

d)

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

42.

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.

கோடிடப்பட்டச் சொல்லுக்கு வேறு பொருள் என்ன?

a)

நடத்தை

b)

செயல்

c)

பேச்சு

d)

எண்ணம்

43.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் உணர்த்தும் கொன்றை வேந்தன் எது?

a)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

b)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

44.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

i , iv

b)

i, ii, iii

c)

i, iii

d)

iii, iv

45.

'மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்' என்ற நீதிநெறி விளக்கும் கொன்றை வேந்தன் யாது?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

46.

கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருள் என்ன

ஈவது விலக்கேல்

a)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறுக்கக்கூடாது.

b)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.

c)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

47.

படம் காட்டும் சரியான புதிய ஆத்திசூடி எது ?

a)

ஔடதம் குறை

b)

ஊண்மிக விரும்பு

c)

உடலினை உறுதி செய்

d)

ஓய்தல் ஒழி

48.

பல்வகைச் செய்யுளை நிறைவு செய்க.

_____________ வீணையும் மாலை மதியமும்

வீசு ___________ வீங்(கு) இள வேனிலும்

மூசு வண்டறை ___________ போன்றதே

ஈசன் எந்தை இணையடி ______________.

a)

மாலை , தென்றலும் , மாசில் , பொய்கையும்

b)

நீழலே , மாசில் , பொய்கையும் ,தென்றலும்

c)

மாசீல் , தென்றலும் , பொய்கையும் , நீழலே

49.

'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்... '

மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்யுளடி இடம்பெற்றுள்ள பகுதி என்ன ?

a)

நல்வழி

b)

நாலடியார்

c)

மூதுரை

d)

நீதிநெறி விளக்கம்

50.

'தங்குதீர் வுள்ளார் தளர்ந்து...',எனத் தொடங்கும் அடிகளை இயற்றியது யார் ?

a)

சிவபிரகாச சுவாமிகள்

b)

குமரகுருபர சுவாமிகள்

c)

சிவசுப்ரமணிய சுவாமிகள்

d)

சமண முனிவர்