wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி – குயில் பாட்டு

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

’மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ!’ எனக் கவிஞர் ஏங்கும் காரணம் யாது?

a)

குயில் மேல் கொண்ட பரிவு

b)

குயில் மேல் கொண்ட காதல்

c)

குயில் பாட்டின்மேல் கொண்ட ஈர்ப்பு

2.

குயில் ஏன் சோகமுற்றுத் தலை குனிந்து அமர்ந்திருந்தது?

a)

மற்ற பறவைகள் பறந்து சென்றுவிட்டமையால்

b)

குயிலின் சோகக் கதை கேட்க ஆள் இல்லாமையால்

c)

குயிலைக் காதல் செய்ய ஆள் இல்லை

3.

குயிலின் தனிச் சிறப்புகள் யாவை ?

a)

இனிமையாகப் பாட இயலும்

b)

மனிதர்கள் மொழி புரியும்

c)

மனிதர்கள் போல் உணர்வு உண்டு

4.

' சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே நல்லுறுதி கொண்ட நாவாய் போல் வந்திட்டீர்' குயில் இவ்வாறு கூறக் காரணம் யாது?

a)

குயிலின் பாடலைக் கவிஞர் இரசித்ததால்

b)

கவிஞர் குயிலின் சோகத்தைக் காது கொடுத்துக் கேட்டதால்

c)

குயிலுக்கு ஆதரவாகப் பேசியதால்

5.

குயிலின்பால் தம் மனதைப் பறிகொடுத்த கவிஞரின் நிலையை விவரித்திடுக.

a)

பித்துப் பிடித்தவர் போல் ஆனார்.

b)

கவலை கொண்டார்

c)

மறுநாள் வரை காத்திருக்கும் பொறுமை இன்மை

6.

மறுநாள் குயிலைக் காணச் சென்ற கவிஞர் கண்ட காட்சியை விவரித்திடுக.

a)

குயில் குரங்கை நோக்கிக் காதல் பாட்டுப் பாடியது

b)

குயில் குரங்கிடம் மனிதரைத் தாழ்த்தியும் குரங்கினத்தை உயர்த்தியும் பேசியது.

c)

கவிஞரை உயர்த்திப் பேசியது.

7.

குயில், கவிஞரை எவ்வாறெல்லாம் விளித்துள்ளது.

a)

மஞ்சரே

b)

சோதித் திருவிழியீர்

c)

ஆணழகரே

8.

கவிஞரைப் பிரிகையில் குயில் கூறியது என்ன ?

a)

மறுநாள் வந்து பார்க்க வேண்டும்

b)

நான்காம் நாள் வரவேண்டும்.

c)

கவிஞர் வராவிடில் உயிர் பிரிந்து விடும்.

9.

குயில், இரசித்தனவற்றைப் பட்டியலிடுக.

a)

மூங்கிலின் இசை

b)

அரிசி இடிக்கும் பெண்களின் வளையல் ஒலி

c)

கும்மிப்பாட்டு

10.

குயில் பாட்டு காவியத்தில் வெளிப்படும் சமுதாயக் கருத்துகளை அடையாளம் காண்க.

a)

பிற உயிர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்

b)

எந்தச் சூழ்நிலையிலும் பொறுமை அவசியம்

c)

எளிதில் ஏமாந்துவிடக் கூடாது