NEW
Font size
Worksheetsதொடர் வாக்கியம்_பயிற்சி 2
Total questions: 8
Worksheet time: 4mins
கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
யாழினி வீணை மீட்டினாள்.
மீனா கட்டுரை எழுதினாள்.
சந்திரனும் வளர்மதியும் நூலகத்திற்குச் சென்று கதைப் புத்தகம் படித்தார்கள்.
தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கவினும் கயலும் கடைக்குச் சென்று கதைப் புத்தகம் வாங்கினார்கள்.
கண்ணன் சுற்றுலா சென்றான்.
விமலா பரதநாட்டியம் ஆடினாள்.
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எது தொடர் வாக்கியம் அல்ல.
அம்மா சந்தைக்குச் சென்று பழங்களை வாங்கினார்.
கனிமொழி ஆடற்கலையை முறையாகப் பயின்று அரங்கேற்றம் செய்தாள்.
நான்காம் ஆண்டு மாணவர்கள் திடலில் பந்து விளையாடுகிறார்கள்.
தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வடிவழகியும் பூங்கொடியும் மழையில் நனைந்தனர்.
தேன்மொழியும் பாரதியும் சிற்றுண்டி சாலைக்குச் சென்றனர்.
கவியரசு காலையில் எழுந்தாள்; காலைக்கடன்களை முடித்தாள்; பள்ளி சென்றாள்.
தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திருமதி கலா தனது மகளைப் பேரங்காடிக்கு அழைத்துச் சென்றார்.
திருமதி கலா தன் மகளுடன் பேரங்காடிக்குச் சென்றார்.
திருமதி கலா தமது மகளைப் பேரங்காடிக்கு அழைத்துச் சென்று பொம்மை வாங்கித் தந்தார்.
கீழ்க்காணும் தனி வாக்கியங்களுக்குப் பொருத்தமான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் எக்காலத்திற்கும் ஏற்றது.
திருக்குறள் உலகப் பொதுமறையாகும்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எக்காலத்திற்கும் ஏற்றதால் உலகப் பொது மறையாகும்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எக்காலத்திற்கும் ஏற்ற உலகப் பொதுமறையாகும்.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியதால் எக்காலத்திற்கும் ஏற்ற பொதுமறையானது.
கீழ்க்காணும் தனி வாக்கியங்களுக்குப் பொருத்தமான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தந்தை வேலைக்குச் சென்றார். தந்தை மாலை வரையில் பணியில் ஈடுப்பட்டார்.
தந்தை பின்னர் இல்லம் திரும்பினார்.
தந்தை வேலைக்குச் சென்று அங்கு மாலை வரையில் பணியில் ஈடுபட்டதால் பின்னர் இல்லம் திரும்பினார்.
தந்தை வேலைக்குச் சென்று மாலை வரையில் பணியில் ஈடுபட்டுப் பின்னர் இல்லம் திரும்பினார்.
தந்தை வேலைக்குச் சென்று பணியில் ஈடுபட்டு இல்லம் திரும்பினார்.
கீழ்க்காணும் தனி வாக்கியங்களுக்குப் பொருத்தமான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நாடக நடிகர்கள் திறம்பட நடித்தனர்.
நாடக நடிகர்கள் இரசிகர்களை மகிழ்வித்தனர்.
நாடக நடிகர்கள் திறம்பட நடித்து இரசிகர்களை மகிழ்வித்தனர்.
நாடக நடிகர்கள் திறம்பட நடித்ததால் இரசிகர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.
நாடக நடிகர்கள் திறம்பட நடிக்க இரசிகர்கள் மகிழ்ந்தனர்.
