wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்க் கேள்வி

Total questions: 50

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

a)

வோ, ரீ, வு, ளை

b)

ங், ஞோ, மெள, னா

c)

தோ, றீ, செ, கூ

d)

மூ, பெள, வை, யோ

2.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

3.

கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

4.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

5.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

6.

பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?


நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

a)

மூன்றாம் வேற்றுமை உருவு

b)

ஆறாம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருவு

7.

கீழ்க்காண்பனவற்றுள் எது தோன்றல் விகாரம்?

a)

கரம் + தா = கரந்தா

b)

கல் + சுவர் = கற்சுவர்

c)

கண் + இமை = கண்ணிமை

d)

மலர் + மாலை = மலர்மாலை

8.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

எனவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

9.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
10.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.


ஐயோ.... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.

a)

! !

b)

! ;

c)

: ;

d)

! .

11.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

12.

சரியான எச்சத்தைத் தெரிவு செய்க


தேடி அலைந்தான்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

13.

வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.

b)

வானில் பருந்து பறந்து சென்றது

c)

மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.

d)

அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.

14.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

15.

இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.


ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

16.

ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.

a)

கு , ஓடு

b)

இல் , உடன்

c)

ஐ , ஓடு

d)

இல் , கு

17.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

18.

கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.


செய்தி 1 :

கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.


செய்தி 2 :

ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

a)

இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்

b)

ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்

c)

இயல்வது கரவேல், அறம் செய விரும்பு

19.

வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.


பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.

a)

திரு திரு, தக தக

b)

தக தக, திரு திரு

c)

திரு திரு, தர தர

20.

கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


பல நாட்களாக ஊண் உறக்கம் இல்லாமல் பணி புரிந்த திரு இரமணி ........ காணப்பட்டார்.

a)

அங்கும் இங்கும்

b)

உருண்டு திரண்டு

c)

அல்லும் பகலும்

d)

எலும்பும் தோலுமாக

21.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.


படிப்பது அவசியம். ஆனால், பிழையில்லாமல் பேசும்போதுதான் படித்தக் கல்விக்கு மதிப்பு

a)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

கல்விக் கழகு கசடற மொழிதல்

22.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.

a)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

இளங்கன்று பயமறியாது

23.

பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

ஒளவியார்

b)

சமண முனிவர்

c)

பாரதியார்

d)

குமரகுருபர சுவாமிகள்

24.

தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

47

b)

147

c)

247

d)

347

25.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

8

b)

12

c)

16

d)

20

26.

மெய்யெழுத்துகள் எத்தனை?

a)

12

b)

14

c)

16

d)

18

27.

மெய்யெழுத்துகள் யாவை?

a)

வல்லினம், மெல்லினம், குறிலினம்

b)

இடையினம், மெல்லினம், வல்லினம்

c)

வல்லினம், இடையினம், குறிலினம்

d)

மெல்லினம், இடையினம், குறிலினம்

28.

சரியானதைத் தேர்ந்தெடுக.

a)

க் + அ = அ

b)

க் + ஆ = ஆ

c)

அ + க் = க்

d)

க் + அ = க

29.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது

b)

B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்

c)

C. கரடு முரடு - தாயும் குழந்தையும்

d)

D. குறை நிறை - எந்தக் காலத்திலும்

30.

கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

A. எலும்பும் தோலும்

b)

B. உருண்டு திரண்டு

c)

C. இன்ப துன்பம்

d)

D. மேடு பள்ளம்

31.

சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான். இத்திட்டத்தின் ___i_____ எண்ணிக் குழப்பம் அடைந்தான். இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின் ஆலோசனைப்படி கோழிகளை வளர்த்தான். கோழிகள் _______ii_____ காணப்படன.

a)

A. எலும்பும் தோலும் - நன்மை தீமைகளை

b)

B. நன்மை தீமைகளை - உருண்டு திரண்டு

c)

C. ஆடை அணிகலன்களை - உருண்டு திரண்டு

d)

D. துணி மணிகளை - எலும்பும் தோலும்

32.

அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

a)

A. சுற்றும் முற்றும்

b)

B. அன்றும் இன்றும்

c)

C. தாயும் சேயும்

d)

D. கல்வி கேள்வியும்

33.

1. கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

A. கரி பூசினாள்.

b)

B. கங்கணம் கட்டினாள்.

c)

C. ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

D. கை கொடுத்தாள்.

34.

ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

ஓட்டை

வாய்

நாக்கு

நீளுதல்

b)

தோள்

கொடுத்தல்

கை

கொடுத்தல்

c)

முழு

மூச்சு

முட்டுக்கட்டை

d)

மனப்பால்

குடித்தல்

குரங்குப்

பிடி

35.

குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................

a)

கை கொடுத்தான்.

b)

தோள் கொடுத்தான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கணம் கட்டினாள்.

36.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

37.

உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்


அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

d)

தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?

38.

பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?

சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........

பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

d)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

39.

குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?


தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

a)

சுத்தம் சுகம் தரும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

40.

முகிலன்பால் அன்பு கொள்க. கோடிட்ட சொல் எந்த வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஏழாம் வேற்றுமை

41.

சீப்பு, தார், குலை, குழு போன்றன என்ன வகைப்பெயர்?

a)

பகுதிப் பெயர்

b)

விகுதிப் பெயர்

c)

தொகுதிப் பெயர்

d)

தகுதிப் பெயர்

42.

மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

தொழிற்பெயர்

43.

நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

d)

செய்தி வாக்கியம்

44.

1. மனிதன் ____________ இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்தல் வேண்டும்.

a)

தன்னால்

b)

தன்னை

c)

தனக்கு

d)

தன்னுடன்

45.

குரங்கு _________ மரம் தாவிச் சென்றது.

a)

மரத்தின்

b)

மரத்துடன்

c)

மரத்திற்கு

d)

மரத்தை

46.

3. அம்மா __________________ அன்னம் ஊட்டினார்.

a)

குழந்தை

b)

குழந்தாய்

c)

குழந்தையின்

d)

குழந்தைக்கு

47.

4. தன்மை இடத்தை விளக்கும் விடையைத் தெரிவு செய்க.

a)

நான், என், உன்

b)

நான், யாம், நாங்கள்

c)

நாங்கள், தன், உங்கள்

d)

நமது, தம், உங்கள்

48.

5. வினையெச்சங்களுக்குப் பின் க,ச,த,ப ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

புரிந்து கொண்டான்

b)

சென்று பார்த்தான்

c)

படர்ந்து வளர்ந்தது

d)

கொன்று தின்றது

49.

6. சரியான இணையைத் தேர்ந்தெடுக

a)

கேட்க+சொன்னார் = கேட்கச் சொன்னார்

b)

அறிந்து+கொண்டான் = அறிந்து கொண்டான்

c)

ஆடி+காட்டினான்= ஆடிக் காட்டினான்

d)

கண்டு+பேசினான்= கண்டுப் பேசினான்

50.

7. இவ்வளவு சிரமமான கேள்விக்கு நீ __________ பதிலளித்தாய்?

a)

இப்படி

b)

அப்படி

c)

எப்படி