NEW
Font size
WorksheetsOli Verupadu
Total questions: 15
Worksheet time: 13mins
1.விமலன் மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றான். அவன் தனக்கு தேவையான ___________________பொருட்களையும் பெட்டியில் எடுத்து வைத்தான்.
அனைத்து
அணைத்து
2. கலா தன் நண்பர்களுடன் திடலில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். கலாவின் பட்டத்தில் கட்டப்பட்டிருந்த நூல் _______________ பட்டம் கீழே விழுந்தது
அருந்து
அறுந்து
3.தம்பி நண்பர்களுடன் திடலில் விளையாடினான் அதனால் அவன் வெள்ளை சட்டையில்________ பட்டது
கரை
கறை
4.தங்க மாளிகை' நகை கடை லிட்டில் இந்தியாவில் இருக்கிறது. நேற்று சிலர் கடையில் புகுந்து _______________ அடித்தனர்
கொல்லை
கொள்ளை
5.ரவியின் பள்ளியில் கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அவ்விழாவிற்கு அப்பள்ளியின்_____________ தலைமையாசிரியர் வந்திருந்தார்.
முன்னாள்
முன்னால்
6.கலா அவளுடைய தோழிக்கு ஒரு கடிதம் எழுதினாள்.அதை ஓர் _____________ வைத்து அனுப்பினாள்.
உரையில்
உறையில்
8.குண்டர்கள் பலர் தெருவில் சண்டை போட்டனர்.__________ செய்தவர்களை காவலர்கள் கைது செய்தனர்.
கலகம்
கழகம்
9.கடலுக்குச் சென்ற ஏழை மீனவன் மீன்களைப் பிடிக்க __________வீசினான். நீண்ட நேரம் காத்திருந்தும் எந்த மீனும் கிடைக்கவில்லை
வளை
வலை
10.காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் __________ சாம்பலாகின.
எரிந்து
எறிந்து
11.மாணவர்கள்______________ வீட்டுப்பாடங்களையும் முடிக்க வேண்டும் என்று ஆசிரியர் எடுத்துரைத்தார்.
அனை
அணை
12. மரத்திலிருந்து கீழே விழுந்ததால் சிறுவனின்_________ எலும்பு முறிந்தது.
விலா
விழா
2015 ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட_________ பேரிடர் காலமாக கருதப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர்.
வெள்ளம்
வெல்லம்
திரு கோபால் ஒரு சிறந்த மருத்துவர்.________ குணம் கொண்ட அவர் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தார்.
இறக்க
இரக்க
திடீரென்று பயங்கர இடி இடித்தது. மாலா அதிர்ச்சியில் ஒரு ________சிலை போல் நின்றாள்.
கணம்
கனம்
அகிலன் பணத்தைத் திருடினான். ஆனால் பிடிபட்டதும் அவன் தன் நண்பன் மீது _______ சுமத்தினான்
பழி
பலி
