NEW
Font size
Worksheetsஉயர்நிலை 1
Total questions: 8
Worksheet time: 3mins
விமலா _______ என்பதால் அவளிடம் எந்த ரகசியத்தையும் கூற அவள் தோழிகள் முன் வருவதில்லை.
ஓட்டைக் கை
அவரசக் குடுக்கை
ஓட்டை வாய்
அடக்கவொடுக்கம்
இரவு முழுவதும் கணினி விளையாட்டை விளையாடிதால் காலையில் கால தாமதமாக எழுந்த மாறன் பள்ளிக்கு ________ ஓடினான்.
அறக்க பறக்க
ஆறஅமர
அவசரக்குடுக்கையாக
கம்பி நீட்டினான்
வீட்டில் தனியாக இருந்த முதியோரிடம் ____ தன்னிடமுள்ள பொருட்களை விற்க முயன்ற இளையரின் எண்ணம் ஈடேறவில்லை.
அடக்கவொடுக்கம்
ஒற்றைக் காலில் நின்று
இனிக்க பேசி
ஆற அமர
ஆண்டிறுதித் தேர்வில் ராமன் சிறப்பு தேர்ச்சி பெற்றதால் பள்ளியிலேயே சிறந்த மாணவன் என்று பாராட்டப்பட்டதை நினைத்து அவனது பெற்றோர் ______.
ஒற்றைக் காலில் நின்றனர்,
உச்சி குளிர்ந்தனர்
கரைத்துக் குடித்தனர்
இனிக்கப் பேசினர்
கல்விகேள்விகளில் சிறந்தவர் என்று பாரட்டப்படும் திரு. குமரன் வாழ்வில் வெற்றி பெற அவர் ________ நடந்துகொண்டதே காரணமாகும்.
அவசரக்குடுக்கையாக
அறக்க பறக்க
ஆற அமர
அடக்கவொடுக்கமாக
கண்ணன் எப்போதும் கேட்கப்படும் வினாக்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் ____ பதில் அளிக்கும் குணம் படைத்தவன்.
ஆறஅமர
அவசரக்குடுக்கையாக
அவசரக்குடுக்கை
கண்மூடித்தனமாக
கொடுக்கப்படும் வேலைகளை உடனுக்குடன் செய்யாமல் ______ செய்வதால் வாழ்க்கையில் பல விசயங்களை நாம் இழந்துவிடுகிறோம்.
கரைத்துக்குடித்து
ஆறப்போட்டு
ஆற அமர
அறக்க பறக்க
கடைத்தொகுதியில் பார்த்த பொம்மை வேண்டும் என்று _______ மகனை தாய் சமாதனப்படுத்த முயன்றும் அது பயனளிக்கவில்லை.
அடக்கவடுக்கமாக
கண்டதையும் கேட்டதையும்
ஒற்றைக் காலில் நின்ற
அறக்க பறக்க
