NEW
Font size
Worksheets10th Tamil Iyal 1
Total questions: 30
Worksheet time: 15mins
’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்டபகுதி குறிப்பிடுவது--
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
தாளும் சண்டும்
சருகும் சண்டும்
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
எந்+தமிழ்+நா
எந்த+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
எந்தம்+தமிழ்+நா
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்-என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்றவர்
பாரதியார்
பாரதிதாசன்
க. சச்சிதானந்தன்
முடியரசன்
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை_____
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இலை வகை
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு-மலேசியா. அம்மாநாட்டுக்குரிய முதல் மொழி எது?
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
ஆங்கிலம்
மொழிஞாயிறு எனப்படுபவர் யார்?
தேவநேயப் பாவாணர்
நாமக்கல் கவிஞர்
க. அப்பாத்துரையார்
பாரதியார்
’மெத்த வணிகலன்” என்னும் தொடரில் தமிழகனார் குறிப்பிடுவது
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
’கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே_________
பாடிய:கேட்டவர்
பாடல்:பாடிய
கேட்டவர்:பாடிய
பாடல்:கேட்டவர்
திணை எத்தனை வகைப்படும்?
இரண்டு
நான்கு
மூன்று
ஆறு
எது அஃறிணை?
ஆண்பால்
ஒன்றன்பால்
பெண்பால்
பலர் பால்
மக்கள் -இச்சொல்லின் பால் பகுப்பு
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
ஒன்றன் பால்
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ................எனப்படும்
வழாநிலை
வழு
வழுவமைதி
மூவிடம்
அன்னை மொழியே பாடலின் ஆசிரியர்
நாமக்கல் கவிஞர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
சந்தக்கவிமணி தமிழழகனார்
திரு.வி.கலியாண சுந்தரனார்
அன்னை மொழியே என்ற கவிதையில் குறிப்பிடப்படாத நூல் எது ?
திருக்குறள்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
தொல்காப்பியம்
மன்னுஞ் சிலம்பே ! மணிமேகலை வடிவே ! - எஞ்சியுள்ள பெருங்காப்பியம் எத்தனை ?
ஐந்து
மூன்று
இரண்டு
எட்டு
செந்தாமரை - இலக்கணக் குறிப்பு தருக
வினைத்தொகை
அன்மொழித்தொகை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
சாகும்போதும் தமிழ்ப் படித்துச் சாக வேண்டும் - என்று பாடியவர்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
சச்சிதானந்தன்
ஆறுமுகநாவலர்
செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல்
அரும்பு
மலர்
போது
வீ
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்
அல்லூர்
திருவள்ளுவர்
கல்லூர்
நெல்லூர்
பொருத்துக
1. கவை - அ) அடிமரத்திலிருந்து பிரியும் கிளை
2. கொம்பு - ஆ) கிளையின் பிரிவு
3. சினை - இ) கவையின் பிரிவு
4. போத்து - ஈ) சினையின் பிரிவு
1 - அ , 2 - இ , 3 - ஆ , 4 - ஈ
1 - ஈ , 2 - இ , 3 - அ , 4 - ஆ
1 - ஆ , 2 - அ , 3 - ஈ , 4 - இ
1 - இ , 2 - ஆ , 3 - அ , 4 - ஈ
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக
தோகை , ஓலை , சண்டு , சருகு
துளிர் , முறி , கொழுந்து , கொழுந்தாடை
பூம்பிஞ்சு , பிஞ்சு , வடு , கவ்வை
கருக்கல் , கச்சல் , கொத்து , குலை
நாடும் மொழியும் நமதிரு கண்கள் - எனப் பாடியவர்
பாரதிதாசன்
பாவாணர்
பெருஞ்சித்திரனார்
பாரதியார்
தமிழையும் , கடலையும் ஒப்பிட்டுக் கவி பாடியவர்
ஒட்டக்கூத்தர்
சந்தக்கவிமணி
சொக்கநாதப்புலவர்
இரட்டைப் புலவர்கள்
இரட்டுற மொழிதலின் வேறு பெயர்
இரட்டைக் கிளவி
அடுக்குத் தொடர்
சிலேடை
வேற்றுமை
புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
க . அப்பாத்துரை
எழில் முதல்வன்
தண்டி
தொல்காப்பியர்
இசைநிறை அளபெடையின் வேறு பெயர்
சொல்லிசை அளபெடை
இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
ஒற்றளபெடை
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
தொழிற்பெயர்
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
மன்னுஞ் சிலம்பே ! மணிமேகலை வடிவே ! - எஞ்சியுள்ள பெருங்காப்பியம் எத்தனை ?
ஐந்து
மூன்று
இரண்டு
எட்டு
தென்மொழி , தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர்
கண்ணதாசன்
பாரதிதாசன்
துரை.மாணிக்கம்
திரு.வி.க
கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது
ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
செம்மொழி மாநாட்டு மலர்
தமிழிலக்கிய வரலாறு மு.வ
