wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5 மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிறைகுடம் தளும்பாது

பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

நாம் ஈடுபடும் செயலின் பின் விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

b)

நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்குக் குற்றமாகத் தெரியாது.

c)

நிரம்ப கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்து கொள்வர்.

d)

அக்கறை எடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

2.

ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும். மற்ற பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

a)

நோக்கக் குழையும் விருந்து

b)

தீமை இலாத சொலல்

c)

எழுமையும் ஏமாப் புடைத்து

d)

மாடல்ல மற்றை யவை

3.

இக்கருத்து எந்த உலகநீதிக்கு ஏற்றது ?

அண்டைவீட்டார் வாய்ச் சண்டை போட்டுக் கடும் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதால் திருமதி அமினா அவருடன் பேசமாட்டார்.

a)

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்

b)

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

c)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

d)

தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்

4.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் - கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி

_________________________________

கருமமே கண்ணாயி னார்

நீதிநெறி செய்யுளில் விடுபட்ட வரியைத் தெரிவு செய்க.

a)

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

b)

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

d)

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

5.

தெனாலிராமனின் செயல்கள் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் அவரின் அறிவுக் கூர்மை அரசர்களின் உள்ளத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்தது.

மேற்கண்ட கூற்று உணர்த்தும் செய்யுள் எது?

a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

b)

செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்.

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

6.

வறுமையில் வாடும் தம் உறவினர்களுக்கு வயிறு நிரம்ப உணவளித்துத் தோட்டத்தில் வேலையும் கொடுத்தார் செல்வந்தரான திரு. ராமலிங்கம்.

மேற்கண்ட கூற்று உணர்த்தும் வெற்றி வேற்கை செய்யுள் அடி எது?

a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

b)

செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

7.

'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்' எனும் செய்யுள் அடிக்கு ஏற்ற விளக்கத்தினைத் தெரிவு செய்க.

a)

கொக்கு அடக்கமாக இருக்கும்

b)

கொக்கு பொறுமையுடன் காத்திருக்கும்

c)

கொக்கு சிறிய மீன்களை ஓட விட்டு, பெரிய மீன் வரும் வரை காத்திருக்கும்.

d)

கொக்கு சிறு மீன்களைப் பரிவோடு விட்டுவிடும்.

8.

கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதே பொய்

கொடுக்கப்பட்ட கூற்றுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

d)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை

9.

_____________ களில் சிறந்து விளங்கியதால் தேன்மொழி சிறந்த மாணவிக்கான பரிசையும் நற்சான்றிதழையும் பெற்றாள்.

சூழலுக்கு ஏற்ற இணைமொழி யாது?

a)

அரை குறை

b)

ஒளிவு மறைவு

c)

கல்வி கேள்வி

d)

பேரும் புகழும்

10.

பத்து மாடி அடுக்ககம் ஒன்று _______________ வெனச் சரிந்து விழுந்தது.

a)

தடதட

b)

கடுகடு

c)

மடமட

d)

பளீர்பளீர்