NEW
Font size
Worksheetsமொழி வளம் 1 - தொ6
Total questions: 10
Worksheet time: 5mins
கற்றோர் சபையில் வீற்றிருந்த இளம் கலைஞனின் திறமையை அனைவரும் போற்றினர்.
காத்திருந்த
வந்திருந்த
அமர்ந்திருந்த
கூடியிருந்த
மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்பொழுது விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்து செல்லக்கூடாது.
ஆடைகளை
ஆபரணங்களை
பொருள்களை
பொற்காப்புகளை
பெரியவர்கள் படிப்பறிவு இல்லாத பாரமரர்களின் அறியாத செயலைப் பெரிது படுத்த மாட்டார்கள்.
புரியாத
பேசாத
தேடாத
பாராத
எல்லாப் புதிர்க் கணக்குகளுக்கும் சரியாக விடையளித்த மாறனின் மதிநுட்பத்தை ஆசிரியர்கள் பாராட்டினர்.
திறமையை
புத்திக்கூர்மையை
பெருமையை
விடாமுயற்சியை
பள்ளியில் மாணவர்கள் கற்கும் கல்வி வெளியுலக வாழ்க்கைக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்.
செய்யும்
பயிலும்
எழுதும்
கேட்கும்
மணி நீதி நூல்களில் கற்றதுபோல் நடந்து உயர்ந்த பண்பாளனாக விளங்கினான்.
குணசீலனாக
நடிகனாக
அறிஞனாக
செல்வந்தனாக
ஒரு வாரக் காய்ச்சலினால் மாலதியின் முகம் பொலிவிழந்து விட்டது.
களை இழந்து
மகிழ் விழந்து
நிறம் இழந்து
திறனிழந்து
குகன் சோர்வில்லாமல் உழைத்துத் தன் லட்சியத்தை அடைந்தான்.
அயராமல்
உறங்காமல்
அஞ்சாமல்
துணையில்லாமல்
மாணவர்கள் படிப்பதில் மட்டும் மனநிறைவு அடையக் கூடாது.
மகிழ்ச்சி
உன்னதம்
திருப்தி
ஆர்வம்
திருடன் மறைந்து செல்வதைக் கண்ட காவலர்கள் அவன் மீது ஐயுற்றனர்.
பரிதாபப்பட்டனர்
பழிசுமத்தினர்
கோபப்பட்டனர்
சந்தேகப்பட்டனர்
