Font size
Worksheetsஇலக்கணப் புதிர்
Total questions: 20
Worksheet time: 10mins
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
147
216
130
247
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
20
47
18
15
மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான சொல் எது?
புஷ்பம்
ரிஷபம்
பக்ஷி
ஸர்ப்பம்
கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் உயிர்மெய் குறில் சொற்களைத் தேர்ந்தெக்கவும்.
தென்றல்
புல்
கூட்டு
தோணி
கீழ்க்கண்ட படங்களில் சினைப்பெயரைக் குறிக்கும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
கிளியின் அலகு வளைந்திருக்கும்.
கோடிடப்பட்ட சொல்லின் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆண்பால்
ஒன்றன்பால்
பெண்பால்
பலவின்பால்
சரியான இனவெழுத்து இணைகளைத் தேர்வு செய்க.
ங்க
ண்ட
ன்த
ஞ்ச
படத்திற்கு ஏற்ற சரியான வினைச்சொல்லைத் தேர்வு செய்க.
ஓடினார்கள்
ஏறினான்
இழுத்தனர்
ஏறினர்
எதிர்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அமலா பரதம் பயில்கிறாள்.
யாழினி கோலம் போட்டாள்.
பாரதி கவிதை எழுதினார்.
சந்தியா வீணை மீட்டுவாள்.
பின்வருவனவற்றுள் எவை இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்டுள்ளன?
பக்கம்
மன்றம்
அச்சம்
வெப்பம்
'அஃது' என்ற சொல்லிற்கு அடுத்து வரும் சொல்லிற்கானப் படம் எது?
இனியனுக்கு
மேற்கண்ட சொல்லைப் பிரித்து எழுதுக.
இனிய + னுக்கு
இனியனுக் + கு
இனியன் + கு
இனியன் + க்கு
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் சிறப்பாக எழுதினார்.
மேற்கண்ட வாக்கியத்தில் எந்தச் சொல் செயப்படுப்பொருளைக் குறிக்கிறது?
இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தை
சிறப்பாக
எழுதினார்
கீழ்க்காண்பவற்றுள் தொடர்வாக்கியத்தைத் தேர்வு செய்க.
உமா பள்ளியில் கவிதை ஒப்புவிக்கிறாள்.
கோபியும் சுதாவும் சாதம் உண்டனர்.
தமிழன்பன் கைகளை உயர்த்தி வினா எழுப்பினான்.
மருத்துவர் நோயாளிக்குச் சிகிச்சை அளித்தார்.
படத்திற்கு ஏற்ற பெயரடை கொண்ட சொற்றொடரைத் தெரிவு செய்க,
அழகாக ஓவியம்
அழகு ஓவியம்
அழகான ஓவியம்
அழகுள்ள ஓவியம்
பிழையான வேற்றுமை உருபு கொண்ட வாக்கியம் எது?
நிலவன் பவானிக்குப் பணம் கொடுத்தான்.
சூர்யாவின் இனிமையான குரல் என்னிடம் கவர்ந்தது.
கமலா தாரணியை அழைத்தாள்.
வினிதா கண்ணனிடம் பூக்களைக் கொடுத்தாள்.
வியாபாரம் செய்வதற்குக் கபிலனிடம் போதிய பணம் இல்லை. ___________ வங்கியில் கடன் பெற்றான்.
ஏனெனில்
எனவே
காரணம்
ஆனால்
பன்மை சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பிழையான இணையைத் தெரிவு செய்க.
அவன் ------படர்க்கை
நான் ------ தன்மை
கமலி ----- முன்னிலை
நீ ------- முன்னிலை
சரியான நிறுத்தக்குறிகளைக் கொண்ட வாக்கியங்கள் எவை?
யானை தேங்காய், வாழை, மா, கரும்பு ஆகியவற்றை உண்ணும்.
உன் எதிர்கால ஆசை என்ன?
ஐயோ! என் கால் வலிக்கிறதே!
இறைவா. எனக்கு அருள் புரி.
