NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
1.கீழ்க்காணும் குழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.
மகாபாரதக் கதையில், வறுமையில் வாடிய தம் நண்பர் குசேலர் தம்மிடம் யாசகம் கேட்கும் முன்பே அளவிட இயலாத அளவுக்குச் செல்வத்தை வாரி வழங்கினார் கண்ணபிரான்.
A எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்
B செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
C வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு
D.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
2. கீழ்க்காண்பனவற்றுள் இணைமொழி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க
A அன்றும் இன்றும் படித்த மாறன் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான்
B கதிரவன் சாலையைக் கடப்பதற்குமுன் அங்கும் இங்கும் பார்த்தான்
C வளர்மதி எழுதிய கட்டுரையின் குறை நிறைகளை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்
3.கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரந்த எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க
A.ஐஸ்வர்யம்,
பக்க்ஷி,
விஷம்,கர்ஜனை
B.புஷ்பம், ரோஜா,ஷண்பகம்,சாமந்தி
C.ஜனவரி,ஜூலை,ஆகஸ்டு,நவம்பர்
D.கிருஷ்ணன், மஹாதேவன், சிவன்,சரஸ்வதி
கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க
ஈ , ஊ ,ஐ,ஒள
A உயிர் நெடில் எழுத்துகள்
B உயிர்க் குறில் எழுத்துகள்
C வல்லின மெய் எழுத்துகள்
D மெல்லின மெய் எழுத்துகள்
5.சரியான விடையைத் தெரிவு செய்க
A மண் + குடம் = மண்குடம்
B கல் + பாறை = கட்பாறை
C முள் + செடி = முட்செடி
D பொன் + பானை = பொன்பானை
6.உயர்திணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க
A ஆண்பால், பெண்பால், பலவின்பால்
B ஆண்பால், பெண்பால், பலர்பால்
C பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்
D ஒன்றன்பால், பலர்பால், பலவின்பல்
7.கீழ்க்காணும் வாக்கியத்தில் காலியிடத்திற்கு ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க
பள்ளிகளுக்கிடையிலான காற்பந்துப் போட்டியில் பார்த்திபன் மிகச் சிறப்பாக விளையாடினான். ……………………….. , மாவட்டப் போட்டிக்கு அவன் தேர்வாகவில்லை.
A எனவே
B ஆகவே
C மேலும்
D இருப்பினும்
8.வேற்றுமை உருபைச் சரியாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க
A. 2ஆம் வேற்றுமை உருபு - மாலா பள்ளிக்குச் சென்றாள்,
B. 4ஆம் வேற்றுமை உருபு - நாய் தண்ணீரைத் தேடி அலைந்தது.
C. 2ஆம் வேற்றுமை உருபு - யானைக்குப் பெரிய தந்தம் உண்டு.
D. 4ஆம் வேற்றுமை உருபு - அவனுக்குக் கடுமையான வயிற்றுவலி.
9.கீழ்க்காண்பனவற்றுள் வினையடை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க
A இளமாறன், இனிமையான பாடலைப் பாடினார்.
B இளமாறன், பாடலை இனிமையாகப் பாடினார்.
C இளமாறன், பாடிய பாடல் இனிமையானது.
D இளமாறன், இனிய பாடலைப் பாடினார்.
10.கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க
அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.
A. மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.
B நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.
C அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.
D. நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை
11.கீழ்காணும் கருத்துக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்
A. ஏறு போல் நட
B. ஆண்மை தவறேல்
C. இளைத்தல் இகழ்ச்சி
D. உடலினை உறுதிசெய்
12.கீழ்க்காணும் சொற்றொடருக்கு எதிர்மறையான கருத்தைக் கொண்டுள்ள மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
எண்ணித் துணிக கருமம்
A கரைத்துக் குடித்தல்
B கண்ணும் கருத்தும்
C அவசரக் குடுக்கை
D முழு மூச்சு
13.பொருத்தமான மரபுத்தொடரை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க
A படிப்பிலும் விளையாட்டிலும் பல பரிசுகளைப் பெறும் மகனைப் பார்த்துப் பரிமளா உச்சிக் குளிர்ந்தாள்.
B பூப்பந்தாட்டப் போட்டியில் தான் வெற்றிப் பெறப் போவதாக மாறன் கடுக்காய் கொடுத்தான்.
C குமரன் ஆழம் பார்த்துப் பணத்தைச் சேமித்துத் தான் விரும்பிய மிதிவண்டியை வாங்கினான்.
D முகிலரசி ஒரு செயலைக் கிள்ளுக் கீரையெனத் தொடங்கிவிட்டு அதனை முடிக்க முடியாமல் திண்டாடுவாள்.
14.நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும் என்னும் பழமொழிக்கு ஈடான உவமைத்தொடரைத் தெரிவு செய்க
A மலரும் மணமும் போல
B இலைமறை காய் போல
C குன்றின் மேலிட்ட விளக்கு போல
D சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
15.கோடிடப்பட்ட செய்யுள் வரியின் பொருளைத் தெரிவு செய்க
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
A இல்லாவிடினும் அவர் குறையை வெளியில் சொல்லக் கூடாது.
B.நல்லவராக இல்லாவிடினும் அடக்கமானவராக நாம் இருக்க வேண்டும்.
C .நல்லவராக இல்லாவிடினும் நாம் அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும்.
D.நல்லவராக இல்லாவிடினும் நாம் அடங்கிப் போகுபவராக இருக்கக் கூடாது.
