wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் கொன்றை வேந்தனின் பொருள் எது

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

a)

செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது

b)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

c)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

d)

தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

2.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

___________________________________________

a)

யாண்டும் இடும்பை இல.

b)

நற்றாள் தொழாஅர் எனின்.

c)

புண்ணுடையர் கல்லா தவர்.

d)

இன்மை புகுத்தி விடும்

3.

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஊருடன் கூடி வாழ்

4.

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

5.

ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.

a)

கம்பி நீட்டினான்.

b)

அள்ளி இறைத்தான்.

c)

ஆறப் போட்டான்

6.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கந்தன் வகுப்பறையில் புத்தகம் வாசித்தாள்.

b)

சுந்தரியும் கலாவும் மெதுவோட்டம் ஓடினார்.

c)

அகிலன் மேசையைத் துடைத்து சுத்தம் செய்தான்.

d)

அள்ளி தோட்டத்தில் பூக்களைப் பறித்தனர்

7.

ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

மெத்தை - மெத்தைங்கள்

b)

முட்டை - முட்டைக்கள்

c)

சிங்கம் - சிங்கம்கள்

d)

மரம் - மரங்கள்

8.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்

a)

மலரும் மணமும் போல.

b)

நகமும் சதையும் போல.

c)

எலியும் பூனையும் போல.

d)

சிலை மேல் எழுத்து போல.

9.

சினைப்பெயரைக் குறிக்கும் சொல் எது?

a)

குட்டை

b)

திடல்

c)

வாய்

d)

பாடுதல்

10.

உயிர்மெய் நெடில்


ம்+ ஈ =_____________________

a)

மா

b)

மூ

c)

மே

d)

மீ