wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உரைநடை பகுதி

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

2.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


சர்வினி : கார்த்திகா நீ ஏன் எப்பொழுதும் உன் அண்டை வீட்டாருக்கு உணவு, துணிமணி போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறாய்? உனக்கென்று வைத்துக் கொள்ளமாட்டாயா?


கார்த்திகா : அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால்தான் என்னால் இயன்றதைக் கொடுத்து உதவுகிறேன்.


பூவரசன் : சர்வினி பிறர் கொடுப்பதைத் தடுக்க நினைப்பது தவறு.

a)

ஈவது விலக்கேல்

b)

உடையது விளம்பேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஊக்கமது கைவிடேல்

3.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


தனலெட்சுமி : சிவசங்கரி, நந்தினி தேர்வில் சிறந்த தேர்ச்சிப்பெற்று விட்டாள் என்பதற்காக மிகத் தற்பெருமையாக இருப்பதைக் கவனித்தாயா?


சிவசங்கரி : தனலெட்சுமி பிறர் மீது பொறாமைக் கொள்வது சரியன்று, அவளும் நம் தோழிதானே!

a)

ஒப்புர ஒழுகு

b)

ஔவியம் பேசேல்

c)

ஓதுவதொழியேல்

d)

ஊக்கமது கைவிடேல்

4.

இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.


மேற்காணும் காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

ஏற்பது இகழ்ச்சி

5.

பசியென்று வருவோர்க்குப்

புசியென்று தந்தவனைப்

பரமனும் பணிவானடா - அவன்

பக்கத்தில் வருவானடா


மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஐயமிட்டு உண்

b)

அறம் செய விரும்பு

c)

ஒப்புர ஒழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

6.

வசந்தி எப்பொழுதும் தன் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி வகுப்பில் தற்பெருமையாகப் பேசுவாள்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஓதுவதொழியேல்

7.

குமரன் : அம்மா, இன்னும் சற்று நேரத்தில் பக்கத்து வீட்டு அகிலன் மிதிவண்டி இரவல் கேட்க வருவான், அவனிடம் மிதிவண்டி பழுதாகிவிட்டது என்று கூறிவிடுங்கள்.

அம்மா : குமரா, நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டுமே தவிர இல்லையென்று சொல்லக் கூடாது.

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

இயல்வது கரவேல்

8.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

ஔவியம் பேசேல் - பிறரைப் புகழ்ந்து பேசக்கூடாது

b)

ஐயமிட்டு உண் - பசியென்று வந்தவர்க்கு உணவிட்டப் பின்னரே உண்ண வேண்டும்.

c)

உடையது விளம்பேல் - நம்மிடம் உள்ள செல்வம் மற்றும் கல்வியைப் பற்றி பெருமைப்பட பேச வேண்டும்.

d)

ஒதுவதொழியேல் - நல்ல நூல்களை எப்பொழுதாவது படிக்க வேண்டும்

9.

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

இயல்வது கரவேல்

a)

பேசக்கூடாது

b)

நினைக்கக்கூடாது

c)

பாடக்கூடாது

d)

மறைக்கக்கூடாது

10.

தவறான இணையைத் தெரிவு செய்க

a)

எண்ணெழுத்திகழேல் - எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல்

கற்க வேண்டும்.

b)

ஆறுவது சினம் - கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

c)

ஊக்கமது கைவிடேல் - முயற்சியை விட்டு விடக்கூடாது.

d)

ஏற்பது இகழ்ச்சி - பசியென்று வந்தவர்க்கு உணவிட்டப் பின்னரே

உண்ண வேண்டும்.