NEW
Font size
Worksheetsதமிழ் மொழி (பாகம் 1) - ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 7mins
ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
சரியான எச்சத்தைத் தெரிவு செய்க
தேடி அலைந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.
வானில் பருந்து பறந்து சென்றது
மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.
அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.
12
30
18
216
கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.
செய்தி 1 :
கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.
செய்தி 2 :
ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்
ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்
இயல்வது கரவேல், அறம் செய விரும்பு
வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.
பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.
திரு திரு, தக தக
தக தக, திரு திரு
திரு திரு, தர தர
கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
பல நாட்களாக ஊண் உறக்கம் இல்லாமல் பணி புரிந்த திரு இரமணி ........ காணப்பட்டார்.
அங்கும் இங்கும்
உருண்டு திரண்டு
அல்லும் பகலும்
எலும்பும் தோலுமாக
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
படிப்பது அவசியம். ஆனால், பிழையில்லாமல் பேசும்போதுதான் படித்தக் கல்விக்கு மதிப்பு
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
இளங்கன்று பயமறியாது
பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
ஒளவியார்
சமண முனிவர்
பாரதியார்
குமரகுருபர சுவாமிகள்
திருக்குறளை நிறைவு செய்க.
_____________________________________
தெய்வத்துள் வைக்கப் படும்
முயற்சி திருவினையாக்கும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடருவேன்.
முழு மூச்சு
முயல் கொம்பு
கண்ணும் கருத்தும்
கங்கணம் கட்டுதல்
கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?
கண்ணும் கருத்தும்
கரடு முரடு
சுற்றும் முற்றும்
தான தர்மம்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே
நல்லவர்
மூடர்
உறவினர்
நண்பர்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
குறையான சொற்கள்
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
இனிமை பயக்கும் சொற்கள்
படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஆறுவது சினம்
ஓய்தல் ஒழி
ஊண்மிக விரும்பு
ஏற்பது இகழ்ச்சி
பளீர் பளீர்
சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி
அறைதல்
வன்மையான ஒலியுடன் கூடிய செயல்
