Worksheetsஇலக்கண இலக்கியப் பகுதிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
திருமகள் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாள். எனவே, திருமகளைப் பலரும் பாராட்டினர்.
இரண்டாம், மூன்றாம் வேற்றுமை
முதலாம், இரண்டாம் வேற்றுமை
மூன்றாம், நான்காம் வேற்றுமை
ஐந்தாம், இரண்டாம் வேற்றுமை
தமிழர்கள் __________________ நம் பாரம்பரியத்தைப் போற்றிக் கடைப்பிடித்து வாழ்கின்றனர்.
அன்றும் இன்றும்
அருமை பெருமை
சுற்றும் முற்றும்
மேடு பள்ளம்
நன்கு கல்வி கற்ற அப்பெரியவர் தம்மிடம் உள்ள சிறந்த ஆற்றலைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார். அவரின் ஆற்றல் ஊற்றுப் போல் பெருகிக் கொண்டு தான் இருந்தது.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வாணுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
என்னை நம்பி இவ்விடத்திற்கு வேலை தேடி வந்த தோழியை நான் ஆதரிப்பேன்.
நல்லினக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்க வேண்டும். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் நமக்கு கண்கண்ட தெய்வங்களாவர்.
கல்விக் கழகு கசடற மொழிதல்.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.
தேவைக்கு ஏற்பச் செலவு செய்து வாழ்வதே சிறப்பு என்பதை நீ உணர வேண்டும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
சிக்கனம் சீரளிக்கும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
_________________ வென மின்னிய வெள்ளிப் பாத்திரங்களை வாங்கிக் கொண்டு வெகு தாமதமாக வீட்டிற்கு வந்த என்னிடம் அம்மா ___________வெனப் பேசினார்.
பளபள, கடுகடு.
கடுகடு, சரசர.
பளபள, சரசர.
கடுகடு, பளபள.
கரி பூசுதல் =
நெடுங்காலமாய்.
வெறும் கற்பனை
அவமானம் ஏற்படுத்துதல்.
ஏமாற்றித் தப்புதல்.
கடுக்காய் கொடுத்தல்=
நெடுங்காலமாய்.
வெறும் கற்பனை
அவமானம் ஏற்படுத்துதல்.
ஏமாற்றித் தப்புதல்.
மனக்கோட்டை=
நெடுங்காலமாய்.
வெறும் கற்பனை
அவமானம் ஏற்படுத்துதல்.
ஏமாற்றித் தப்புதல்.
