wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயிரினங்களுக்கிடையே காணப்படும் தொடர்பு_ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

1. ஆண் மயில் தன் அழகான தோகையை விரிப்பதைக் காட்டுகிறது. ஏன் ஆண் மயில் இவ்வாறு செய்கிறது?

a)

தன் அழகான தோகையைப் பாதுகாக்க

b)

தனக்குள்ள உணவைப் பாதுகாக்க

c)

இணையை ஈர்ப்பதற்காக

d)

தான் வாழும் இடத்தைத் தற்காத்துக் கொள்ள

2.

2. வரிக்குதிரைகள் கூட்டமாக வாழும் விலங்குகளாகும். ஏன் இவை கூட்டமாக வாழ்கின்றன?

a)

தன் குழுவைப் பலப்படுத்த

b)

தன் குழு உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த

c)

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை சுலபமாக்க

d)

அனைத்து உறுப்பினர்களும் எப்பொழுதும் குழுவில் இருப்பதை உறுதிபடுத்த

3.

3. படம், தாவரச் செடி வேறொரு மரத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்வதைக் காட்டுகிறது. ஏன் இத்தாவரம் இப்பெரிய மரத்தின் மீது படர்ந்து வாழ்கிறது?

a)

அதிகமான காற்றைப் பெறுவதற்கு

b)

போதிய சூரிய ஒளியைப் பெறுவதற்கு

c)

சுலபமாக மர உச்சி வரை வளர்வதற்கு

d)

மற்ற விலங்குகள் உண்பதைத் தவிர்ப்பதற்கு

4.

4. தனித்து வாழும் பிராணிகள் இச்சூழ்நிலையை எதிர்நோக்கும் ஒன்றைத் தவிர

a)

தனித்து வாழும் பிராணிகள் போராட்டத்தில் தோல்வியுற்றால் இறந்து விடும்.

b)

தனித்து வாழும் பிராணிகள் இணையைத் தேடுவதற்கு பிரச்சனைகளை எதிர் நோக்கும்.

c)

தனித்து வாழும் பிராணிகள் எதிரிகளிடமிருந்து தன்னை சுலபத்தில் தற்காக்க முடியாது.

d)

தனித்து வாழும் பிராணிகள் குறைவான உணவு மூலப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய முடியும்.

5.

5. ரெப்லிசியா தாவரம் ஒரு மரத்தின் அடியில் ஒட்டிக் கொண்டு அம்மரம் மடியும் வரை அம்மரத்திலுள்ள அனைத்து தாது சத்துகளையும் உறிஞ்சி உயிர் வாழும். அவ்விருவகை தாவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

a)

பரிமாற்று வாழ்வு

b)

வேற்றின இணை வாழ்வு

c)

ஒட்டுண்ணி வாழ்வு

d)

ஒரே இன வகை வாழ்வு

6.

6. பாலன், தாவரங்களுக்கிடையே நடைபெறும் போராட்டத்தை ஆராய விரும்பினான். பின்வருவனவற்றுள் எதை அவன் தற்சார்பு மாறியாக இப்பரிசோனைக்குப் பயன்படுத்த வேண்டும்?

a)

ஜாடியின் வகை

b)

விதையின் வகை

c)

விதைகளுக்கு இடையே உள்ள தூரம்

d)

பரிசோதனைக்குப் பயன்படுத்திய இடம்

7.

7. படம், மீனின் இனவகையில் ஏற்படும் தொடர்பைக் காட்டுகிறது. இத்தொடர்பை ஒட்டி சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

போராட்டம் மீன்களின் இனவகையை அழித்துவிடும்.

b)

வெவ்வேறு இனவகை மீன்களிடையே கூட்டு உயிர் வாழ்க்கை ஏற்படும்.

c)

போராட்டத்தில் ஈடுபடும் மீனுக்கு மற்ற மீன்களை விட அதிக உணவு கிடைக்கும்.

d)

வெவ்வேறு இனவகை மீன்கள் உணவுக்குப் போட்டியிடும்போது போராட்டம் ஏற்படும்.

8.

8. உணவு தேடும்போது ஏற்படும் போராட்டத்தைத் தவிர்க்கா ஆந்தை எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும்?

a)

மரத்தில் வசிக்கும் பிராணிகளை மட்டுமே வேட்டையாடும்.

b)

தன் வாழ்விடத்தில் இருந்து அதிக தூரத்தில் வேட்டையாடும்.

c)

இரவில் மட்டுமே வேட்டையாடும்.

d)

மற்ற விலங்குகள் சாப்பிடாத பிராணிகளை வேட்டையாடும்.

9.

9. படம், வேற்றின விலங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது. படத்தில் காணப்படும் சூழலின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

இணையை பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

b)

உணவைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

c)

வாழிடத்தைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

d)

தனது வலிமையைக் காண்பிக்க விலங்குகள் போராடுகின்றன.

10.

10. கூட்டு உயிர் வாழ்க்கை என்றால் என்ன?

a)

ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் வெவ்வேறு இனவகை விலங்குகளின் உணவு தொடர்பு ஆகும்.

b)

ஒரே வாழிடத்தில் வாழும் வெவ்வேறு இனவகை விலங்குகளின் நெருங்கிய தொடர்பாகும்.

c)

ஒன்று மற்றொன்றுக்கு நன்மை பயக்கும் ஒரே இனவகை விலங்குகளின் நெருங்கிய தொடர்பாகும்.