wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணிகளும் ஆண்டு 3

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எலியும் பூனையும் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

b)

எப்போதும் ஒற்றுமையாக இருத்தல்

c)

எப்போதும் பொறாமை கொண்டிருத்தல்

d)

எப்போதும் விளையாடிக் கொண்டிருத்தல்

2.

பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.

*சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

d)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

3.

திருக்குறளை நிறைவு செய்.

_____________ ____________ _________________ துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

a)

துணிக எண்ணித் தினமும்

b)

எண்ணித் துணிக கருமம்

c)

எண்ணித் துணிக வீரம்

d)

கற்க கசடற கற்பவை

4.

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

தக தக - கொழுந்து விட்டு எரிதல்

b)

பள பள - செந்நிறமான ஒளி

c)

தர தர - வேகமாக ஓடுதல்

d)

சல சல - உரக்கப் பேசுதல்

5.

மிக நெருக்கமாக எனும் பொருளுக்கேற்ற உவமைத் தொடர் யாது?

a)

வேடிக்கை பார்ப்பது போல

b)

எலியும் பூனையும் போல

c)

காந்தம் இரும்பைக் கவர்வது போல

d)

நகமும் சதையும் போல

6.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பழமொழிக்குப் பொருத்தமான விளக்கம் எது?

a)

உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

b)

எப்போதும் அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும்.

c)

உணவளித்தவரை என்றும் மறக்கலாகாது

d)

நம்முடன் அன்பாகப் பழகுபவரை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

7.

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற பழமொழி எது?

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்;முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

d)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

8.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் மரபுத்தொடர் எது?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

அள்ளி விடுதல்

c)

கிணற்றுத் தவளை போல

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

9.

நாலாப்பக்கம் எனும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி யாது?

a)

மேடு பள்ளம்

b)

சுற்றும் முற்றும்

c)

ஆறப்போடுதல்

d)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

10.

காந்தம் இரும்பைக் கவர்வது போல

a)

ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

11.

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

a)

அறஞ்செய விரும்பு

b)

ஆறுவது சினம்

12.

ஆறுவது சினம்

a)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

b)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

13.

ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

14.

படத்திற்கு ஏற்றச் சரியான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

அறம் செய விரும்பு

b)

ஈவது விளக்கேல்

c)

உடையது விளம்பேல்

15.

படத்திற்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

உடலினை உறுதி செய்

b)

ஊண்மிக விரும்பு

c)

ஔடதம் குறை

16.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

சிறு துளி பெரு வெள்ளம்

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி