wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முன்னறித் தேர்வு ஆண்டு 6

Total questions: 50

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

2.

ஐயோ! கால் வலிக்கிறதே!

மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

3.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

4.

இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.


ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

5.

மாணவர்கள் யாழ் பயிற்சி நூல்களை நேற்று _____________.

a)

வாங்கும்

b)

வாங்கினர்

c)

வாங்குகின்றனர்

d)

வாங்குவோம்

6.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

7.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

8.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.

a)

ஆயினும்

b)

ஏனென்றால்

c)

ஏனெனில்

d)

இன்னும்

9.

கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?


அ, இ , உ

a)

வினா எழுத்து

b)

மெய் எழுத்து

c)

நெட்டெழுத்து

d)

சுட்டெழுத்து

10.

வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.


_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.

a)

மீனவர், ஆறு, மீன்களைப்

b)

மீனவரது, ஆற்றை, மீனைப்

c)

மீனவர், ஆற்றில், மீன்களைப்

d)

மீனவரின், ஆற்றில், மீனுக்குப்

11.

தோன்றல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

கல் + தூண் = கற்றூண்

b)

கண் + இமை = கண்ணிமை

c)

செம்மை + கோல் = செங்கோல்

d)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

12.

சரியான இரண்டு செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

கவிதை தேவியால் பாடப்பட்டது.

b)

அந்த ஓவியம் கவினால் வரையப்பட்டது.

c)

விஷால் பள்ளிப் போட்டி விளையாட்டில் கலந்து கொண்டான்.

d)

அம்மா சந்தைக்குச் சென்று பழங்கள் வாங்கி வந்தார்.

13.

கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?


மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

14.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?

b)

சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?

c)

நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?

d)

உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?

15.

பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.

a)

சலசல

b)

மளமள

c)

தகதக

d)

மடமட

16.

ஈகை திறன் எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

b)

அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

c)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

d)

நலமாக வாழ உடலினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

17.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திசூடி

c)

புதிய ஆத்திசூடி

d)

வெற்றிவேற்கை

18.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

19.

கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


சர் சீ.வி. இராமன் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் அறிவியல் பாடத்தை ________________ ஒரு மாமேதை.

a)

ஓட்டை வாயனான

b)

கரைத்துக் குடித்த

c)

காது குத்திய

d)

அள்ளி இறைத்த

20.

விடா முயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.


எனக் கூறும் செய்யுள் எது?

a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

21.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஒற்றுமை வலிமையாம்

c)

ஊண்மிக விரும்பு

d)

உடலினை உறுதிசெய்

22.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

தெய்வத்துள் வைக்கப் படும்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

23.

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.

a)

முழு மூச்சு

b)

முயல் கொம்பு

c)

கண்ணும் கருத்தும்

d)

கங்கணம் கட்டுதல்

24.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

a)

குறையான சொற்கள்

b)

தீமை பயக்கும் சொற்கள்

c)

நன்மை பயக்கும் சொற்கள்

d)

இனிமை பயக்கும் சொற்கள்

25.

படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆறுவது சினம்

b)

ஓய்தல் ஒழி

c)

ஊண்மிக விரும்பு

d)

ஏற்பது இகழ்ச்சி

26.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

a)

நண்பர்கள்

b)

பணக்காரர்கள்

c)

சகோதரர்கள்

d)

உறவினர்கள்

27.

ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


தை மாதத்தில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் நடைமுறையாகும்.

a)

பேரும் புகழும்

b)

பழக்க வழக்கம்

c)

பேரும் புகழும்

d)

இன்ப துன்பம்

28.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

சிலை மேல் எழுத்து போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

நகமும் சதையும் போல

d)

காட்டுத் தீ போல

29.

வெற்றி வேற்கையைப் பூர்த்திச் செய்க.


கல்விக் ....................................

a)

வித்தவன் இறைவனாகும்

b)

அழகு கசடற மொழிவது

c)

கழகு கசடற மொழிதல்

d)

கழகு செழுங்கினை தாங்குதல்

30.

ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?

a)

புதிய ஆத்திசூடி

b)

ஆத்திசூடி

c)

கொன்றை வேந்தன்

d)

நல்வழி

e)

மூதுரை/வாக்குண்டாம்

31.

அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் எது?

a)

நல்வழி

b)

நாலடியார்

c)

வெற்றி வேற்கை

d)

திருவள்ளுவர்

32.

கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
33.

கீழ்க்கண்டவைகளில் எது திருமுறையின் முதல் சொல்லாகும்?

a)

ஆனமுதலில்

b)

நன்றி

c)

வானாகி

d)

மாசில்

34.

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன?

a)

உறவினர்களின் அறிவுரை மட்டும் கேட்க வேண்டும்.

b)

உறவினரோடு அருகில் இருக்க வேண்டும்.

c)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

d)

உறவினரின் நண்பர்களை உபசரிக்க வேண்டும்.

35.

சரியான நிறுத்தற்குறியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கல்வியில் வெற்றி பெற நன்கு முயற்சி செய் : கல்வி நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

b)

வர்த்தினி தம்பியுடன் விளையாட எண்ணினாள் ; வீட்டுப்பாடம் மிகுதியால் அதனை மறந்து போனாள்.

c)

அம்மா கடைக்குச் சென்றார் : பொருள்களை வாங்கினார்.

36.

தம்பி __________யில் நனைந்தான்.

a)

மலை

b)

மழை

c)

மாலை

37.

கிளியின் அலகு _______ந்திருக்கும்

a)

வளை

b)

வலை

38.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

தொண்ணூறு

b)

எழுபத்து இரண்டு

c)

நூற்று இருபத்து ஆறு

d)

இருநூற்று நாற்பத்து ஏழு

39.

வண்ணமிடப்பட்ட சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

40.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

41.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

42.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

ஆகவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

43.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
44.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.


கோவிட் பெருந்தொற்று காரணமாக விடுமுறையில் இருந்த மாணவர்கள் புலனத்தில் கொடுக்கப்பட்ட படங்களைக் கவனமாகச் செய்தனர்.

a)

கோவிட் பெருந்தொற்று

b)

விடுமுறை

c)

மாணவர்கள்

d)

கவனம்

45.

இதில் எது சரியான வாக்கியம்?

a)

அப்பா ஒர் நீர்ப்புட்டியை வாங்கி வந்தார்.

b)

அருகில் இருந்த ஓர் ஆற்றில் மான் நீர் குடித்தது.

c)

கபிலன் ஓர் படத்தை வரைந்தான்.

46.

குற்றெழுத்துகள் யாவை?

a)

அ, ஈ, உ, எ, ஐ

b)

அ, இ, ஊ, எ, ஏ

c)

அ, இ, உ, எ, ஒ

47.
இசைஞானி இளையராஜாவின் கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இசை கலைஞர்கள் பலர் மேடையில் __________________ மலேசிய வாழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
a)
அன்றும் இன்றும்
b)
அருமை பெருமை
c)
ஆனந்தம்
d)
ஆடிப்பாடி
48.
திருமதி மணிமேகலை _____________ பழைய பாடல்களையே விரும்பி கேட்பதாகக் கூறினார்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
ஏற்றம் இறக்கம்
d)
அருமை பெருமை
49.

கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.


செய்தி 1 :

கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.


செய்தி 2 :

ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

a)

இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்

b)

ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்

c)

இயல்வது கரவேல், அறம் செய விரும்பு

50.

வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.


பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.

a)

திரு திரு, தக தக

b)

தக தக, திரு திரு

c)

திரு திரு, தர தர