wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Category B (Round 1)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சுந்தரமூர்த்தி நாயனார் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள இருந்தபோது, என்ன நடந்தது?

a)

சிவபெருமான், பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் சுந்தரருடன் திருமணம் செய்துவைத்தார்

b)

சிவபெருமான் கிழவனாகச் சென்று திருமணத்தைத் தடுத்து சுந்தரர் பிறவி நோக்கத்தைப் புரிய வைத்தார்

c)

சிவபெருமான் திருமணத்தைத் தடுத்து சுந்தரரைக் அழைத்துச் சென்றார்.

d)

சிவபெருமான் சுந்தரமூர்தியைத் தேவார பாடல்கள் பாட கோருகிறார்

2.

மாணிக்கவாசகர் தன் புலமையால் எந்தப் பட்டத்தைப் பெற்றார்?

a)

அருள்வாசகர்

b)

திருவாதவூரடிகள்

c)

தென்னவன் பிரமராயன்

d)

தருமசேனர்

3.

யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை யாவை?

a)

தைத்திரீய யசுர்வேதம் மற்றும் மைத்திராயனீ யசுர்வேதம்

b)

வஜசனேயி யசுர்வேதம் மற்றும் மாத்தியந்தினியம் யசுர்வேதம்

c)

வஜசனேயி யசுர்வேதம் மற்றும் சுக்கில யசுர்வேதம்

d)

கிருஷ்ண யசுர்வேதம் மற்றும் சுக்கில யசுர்வேதம்

4.

ரிக் வேதத்தில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் எது?

a)

சாந்தோக்யம்

b)

பிரச்னம்

c)

முண்டகம்

d)

ஐதரேயம்

5.

உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்ற மக்கள் எந்தத் திணை நிலத்தவர்கள்?

a)

நெய்தல்

b)

பாலை

c)

முல்லை

d)

மருதம்

6.

மனிதர், மனிதர்களுக்கு விளக்கமளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட போதனைகளையும் விளக்கங்களையும் எது உணர்த்துகிறது?

a)

ஸ்ருதி

b)

ஸ்மிருதி

c)

நிர்குணப் பிரம்மன்

d)

நிர்குணப் பிரம்மன்

7.

இவற்றுள் சிந்து வெளியின் அடையாளங்கள் யாவை?

I ஆதி சக்தி முத்திரை

II தாய் வழிப்பாட்டுச் சிலைகள்

III சமயச் சடங்குக்கான குளம்

IV ஆதி சிவ முத்திரை

a)

I மற்றும் II

b)

II மற்றும் III

c)

I, II மற்றும் III

d)

II, III மற்றும் IV

8.

சைவ சமயத்தில், பர முக்தி அடையும் நிலையை இவ்வாறும் அழைப்பர்.

a)

சிவசாலோகம்

b)

சிவசாயுச்சியம்

c)

சிவசாரூபம்

d)

சிவசாமீபம்

9.

கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும் ?

a)

முகத்தை மேலே பார்த்தவாறு அணிய வேண்டும்

b)

முகத்தை கீழே பார்த்தவாறு அணிய வேண்டும்

c)

முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்

d)

கடவுளை பார்த்தவாறு அணிய வேண்டும்

10.

இவற்றில் எது தன் மாத்திரைகள் வகை அல்ல ?

a)

சுவை

b)

மேனி

c)

நாற்றம்

d)

ஒளி

11.

வேதங்களை இவ்வாறும் அழைக்கலாம்.

a)

உயர்வான அறிவு

b)

சம்ஹிதை தொகுப்பு

c)

மந்திரங்கள்

d)

சுருதி, மறை

12.

சூரியக் கடவுளை வேறு எந்தப் பெயரால் அழைப்பார்கள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது ?

a)

சூரியன்

b)

கொடிநிலை

c)

கதிரவன்

d)

நிலைகொடி

13.

எந்தச் சமயத்தின் பெயர் சிந்து நதிக்கரையிலிருந்து தோன்றியது ?

a)

வைதீக சமயம்

b)

வைணவ சமயம்

c)

இந்து சமயம்

d)

பெளத்த சமயம்

14.

சிலப்பதிகாரத்தில் சூரியக் கோவில் வேறு எந்தப் பெயரால் குறிக்கப் பெறுகிறது ?

a)

கொடிநிலை

b)

உச்சி கிழான் கோட்டம்

c)

சூரியத் தலம்

d)

சூரியன் வட்டம்

15.

பன்டரிநாதன் என எந்தக் கடவுளை அழைப்பார்கள் ?

a)

சிவன்

b)

முருகன்

c)

சூரியக் கடவுள்

d)

திருமால்

16.

இவற்றுள் எது சக்தி வழிபாட்டிற்குரிய பண்டிகை அல்ல?

a)

வைகுண்ட ஏகாதசி

b)

ஆடிப்பூரம்

c)

நவராத்திரி

d)

கௌரி விரதம்

17.

ஆடிச்செவ்வாயில் எந்த இரு தெய்வங்களுக்கு விரதம் எடுப்பார்கள்?

a)

முருகன் , துர்க்கை

b)

துர்கை, சிவன்

c)

முருகன், விநாயகர்

d)

முருகன், சிவன்

18.

தீபாவளி பண்டிகையை எந்தத் திதியில் கொண்டாடுவோம் ?

a)

பௌர்ணமி

b)

ஏகாதசி

c)

அஷ்டமி

d)

அமாவாசை

19.

மோட்சம் என்பது என்ன?

a)

ஈசனுடன் ஐக்கியமாவது

b)

ஜீவர்களின் தனித்துவம் இழப்பது

c)

பிறவிப் பெருங்கடலை கடப்பது

d)

கடவுளின் தரிசனம் பெறுவது

20.

கணேச புராணத்தின் கிருதா யுகத்தில் அவதரித்த கணேசனின் நாமம் என்ன?

a)

மயூரேசர்

b)

கஜானனன்

c)

மகாகடர்

d)

கனபதி