wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள் (Set 4)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உலகமே கணினி மயமாகி கொண்டிருக்கும் போது, உனக்கு மட்டும் கணினியை இயக்கத் தெரியவில்லையே?ஆச்சரியமாக உள்ளது.


மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?

a)

ஊக்கமது கைவிடேல்

b)

ஓதுவ தொழியேல்

c)

ஒப்புர வொழுகு

d)

எண்ணுவது உயர்வு

2.

போர் படையினில் தூங்கியவன் வெற்றி இழந்தான்!

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்!

இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால்,

பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!


மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?

a)

ஓய்தல் ஒழி

b)

இளைத்தல் இகழ்ச்சி

c)

அச்சம் தவீர்

d)

ஆண்மை தவறேல்

3.

போக விட்டு புறஞ் சொல்லித் திரிய வேண்டாம்


செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருள் என்ன?

a)

தீயச் செயல்

b)

ஏமாற்றுதல்

c)

குறை சொல்லுதல்

d)

பொறாமை கொள்ளுதல்

4.

மேற்காணும் அட்டவணை உணர்த்தும் வெற்றி வேற்கையை தேர்ந்தெடுக.

a)

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

b)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

5.

மேற்காணும் படத்திற்கு ஏற்ற திருக்குறளை தேர்வு செய்க.

a)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

b)

வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

c)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

d)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

6.

புத்தரின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப __________ அடைவர்.

a)

அருமை பெருமை

b)

பேரும் புகழும்

c)

நன்மை தீமை

d)

பழக்க வழக்கம்

7.

பிழையான உவமைத் தொடரைக் கொண்ட வாக்கியத்தை தேர்ந்தெடுக.

a)

மெலிண்டோ விமானம் தீப்பற்றி அவசரமாகத் தரையிறங்கிய செய்தி காட்டுத் தீ போல பரவியது.

b)

சிறு வயதில் கற்ற கல்வியானது எப்பொழுதும் சிலை மேல் எழுத்து போல மனதில் பதிந்திருக்கும்.

c)

ராதாவும் கீதாவும் எலியும் பூனையும் போல எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்பர்.

d)

திருமணத்திற்கு வந்திருந்த பெரியவர் மணமக்களை மலரும் மணமும் போல் இருக்க வேண்டுமென வாழ்த்தினார்.

8.

சரியான இரட்டைக் கிளவியைக் கொண்டுள்ள வாக்கியத்தை தேர்ந்தெடுக.

a)

அமலா தன் வீட்டு வேலைகளை குடு குடுவென முடித்து விட்டு விளையாடச் சென்றாள்.

b)

காவல் அதிகாரியிடம் பிடிப்பட்ட திருடன் திரு திருவென விழித்தான்.

c)

இரவில் விண்மீன்கள் பள பளவென மின்னிக் கொண்டிருந்தன.

d)

தொலைக்காட்சியில் நகைச்சுவை நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா சல சலவென சிரித்தார்.

9.

பட்டதாரியாக வேண்டுமென்ற அருணனின் நீண்ட நாள் கனவு இன்று ___________.

a)

கை கொடுத்தது

b)

தலை குனிந்தது

c)

கை கூடியது

d)

மனக்கோட்டையானது

10.

ஒழுங்காக படித்திருந்தால் விடையை எழுதலாம் அல்லவா? இப்பொழுது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வருத்தப்பட்டு என்ன பயன்.


சரியான பழமொழியை தேர்ந்தெடுக.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

பதறாத காரியம் சிதறாது

c)

வெள்ளம் வருமுன் அணைபோடு

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு