wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

A. எலும்பும் தோலும்

b)

B. உருண்டு திரண்டு

c)

C. இன்ப துன்பம்

d)

D. மேடு பள்ளம்

2.

ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

a)

A. அன்றும் இன்றும்

b)

B. அல்லும் பகலும்

c)

C. எலியும் பூனையும்

d)

D. ஆடை அணிகலன்

3.

இந்திய திருமணத்திற்கான கலாச்சார __________________ கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.

a)

A. ஆடை அணிகலன்

b)

B. எலும்பும் தோலும்

c)

C. பழக்க வழக்கம்

d)

D. ஆடல் பாடல்

4.

கௌரி ___________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.

a)

A. காலையும் மாலையும்

b)

B. பழக்க வழக்கம்

c)

C. அங்கும் இங்கும்

d)

D. அன்றும் இன்றும்

5.

அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

a)

A. சுற்றும் முற்றும்

b)

B. அன்றும் இன்றும்

c)

C. தாயும் சேயும்

d)

D. கல்வி கேள்வியும்

6.

இச்சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?


இராமு அல்லும் பகலுமாகத் தேர்வுக்குப் படித்துத் தயார் ஆனான்.

a)

A. மனப்பால் குடித்தல்

b)

B. கங்கணம் கட்டுதல்

c)

C. முழு மூச்சு

d)

D. வெளுத்து வாங்குதல்

7.

இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.

a)

நாக்கு நீளுதல்

b)

அரக்க பரக்க

c)

அள்ளி இறைத்தல்

d)

எடுப்பார் கைப்பிள்ளை

8.

கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

9.

வசந்தி எப்பொழுதும் தன் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி வகுப்பில் தற்பெருமையாகப் பேசுவாள்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஓதுவதொழியேல்

10.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

11.

பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.


எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் செல்லிவிடுகிற இயல்வு உள்ள ஒரு நபர்.

a)

கிணற்றுத் தவளை

b)

நாக்கு நீளுதல்

c)

அவசரக் குடுக்கை

d)

ஓட்டை வாய்

12.

திருமண வீட்டில் அடுக்கப்பட்டிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் _________________________ என மின்னின.

a)

தட தட

b)

மினு மினு

c)

தக தக

d)

பள பள

13.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

14.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

15.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

16.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

17.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

18.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

19.

கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்

a)

ஆசிரியர்

b)

பூண்டு

c)

தோட்டக்காரன்

20.

__________ புல் மேய்ந்தது.

a)

மாடு

b)

மாடுகள்