wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண இலக்கியம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


அள்ளி விடுதல்



a)

அவமானம் ஏற்படுத்துதல்

b)

உறுதி பூணுதல்

c)

ஏமாற்றித் தப்புதல்

d)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

2.

கொடுக்கப்பட்டுள்ள உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

b)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

c)

தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

d)

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது

3.

படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆடை அணிகலன்

b)

எலும்பும் தோலும்

c)

அங்கும் இங்கும்

d)

மேடு பள்ளம்

4.

தக தக எனும் இரட்டைக்கிளவியைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
5.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

a)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

d)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

6.

வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?

a)

உலகநாத பண்டிதர்

b)

பாரதியார்

c)

குமர குருபர சுவாமிகள்

d)

அதிவீர ராம பாண்டியன்

7.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கேற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


தான் சிறு வயதில் கண்ட சாலை விபத்து தன் மனத்தில் அழியாமல் பதிந்திருப்பதாக யாழினி கூறினாள்.

a)

காட்டுத் தீ போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

மலரும் மணமும் போல

d)

கண்ணினைக் காக்கும் இமை போல

8.

கொடுக்கப்படும் படம் உணர்த்தும் பழமொழியைத் தெரிவு செய்க.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

சிக்கனம் சீரளிக்கும்

9.

கீழ்க்காணும் ஆத்திசூடியில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது?


ஔவியம் பேசேல்

a)

முயற்சி

b)

உழைப்பு

c)

கோபம்

d)

பொறாமை

10.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான விளக்கத்தைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அருமை பெருமை - மகிழ்ச்சியுடன்

b)

மேடு பள்ளம் - சமமற்ற நிலப்பகுதி

c)

நன்மை தீமை - நல்லது கெட்டது

d)

ஆடல் பாடல் - பாட்டும் நடனமும்

11.

வல்லின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

நண்டு

b)

ஞாயிறு

c)

கடவுள்

d)

வண்டு

12.

கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஜன்னல்

b)

புஷ்பம்

c)

ஐந்து

d)

ஸர்ப்பம்

13.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


குமரன் பேச்சுப்போட்டியில் முதல் பரிசை

A B C


வென்றான்.

D

a)

A

b)

B

c)

C

d)

D

14.

கீழ்க்காணும் வாக்கியங்களில் மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தலைமையாசிரியர் வெற்றிப் பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.

b)

விமலன் அகிலனோடு கடைக்குச் சென்றான்.

c)

அம்மா தங்கைக்குப் புதிய பொம்மை வாங்கித் தந்தார்.

d)

பிராணிகளின்பால் அன்பு கொள்ள வேண்டும்.

15.

படத்திற்கேற்ற சரியான பெண்பாலைத் தெரிவு செய்க.

a)

உழச்சி

b)

உழவள்

c)

உழவி

d)

உழத்தி

16.

கீழ்க்காணும் வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


நீதி தவறா பாண்டிய மன்னன் பல்லாண்டு வாழ்க.

a)

செய்தி வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

17.

குமுதன் (அ) காலணியை எடுத்தான். அப்பா (ஆ) காலணியை வைத்தார்.


விடுப்பட்ட இடத்திற்கு ஏற்ற சரியான இலக்கண மரபு எது?

a)

தன் , தான்

b)

தம் , தன்

c)

தன் , தம்

d)

தம் , தாம்

18.

சரியான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஔவையார் நீதி நூல்களை இயற்றினார்.

b)

அம்மாவும் அப்பாவும் பேரங்காடிக்குச் சென்றனர்.

c)

பாவணன் கதைப்புத்தகத்தை வாசித்தான்.

d)

இளஞ்சேந்தன் தங்கையோடு சந்தைக்குச் சென்றான்.

19.

கீழ்க்காண்பனவற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

ஓர் ஆடு

b)

ஒரு கூண்டு

c)

அஃது கௌளி

d)

அஃது ஔடதம்

20.

சரியான நிறுத்தக்குறியை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிவா கடைக்குச் சென்று பழங்கள் கய்கறிகள் மீன்கள் வாங்கினான்.

b)

தைப்பூசம் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

c)

’டிங்கி’ காய்ச்சல் எப்படிப் பரவுகிறது?

d)

ஐயோ, என் கால் வலிக்கிறதே.