wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் (ஆண்டு 6)

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

உறவைத் துண்டித்தல் எனும் பொருளுக்கேற்ற மரபுத்தொடர் என்ன?

a)

ஆழம் பார்த்தல்

b)

தலை குனிதல்

c)

தலை முழுகுதல்

d)

கை கழுவுதல்

2.

கை கழுவுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

a)

உதவி செய்தல்

b)

பொறுப்பிலிருந்து விலகுதல்

c)

கைவிடுதல்

d)

உதவி செய்வதிலிருந்து விலகுதல்

3.

கீழ்க்காண்பவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?

a)

முயல் கொம்பு

b)

கரை கண்டவர்

c)

மேடு பள்ளம்

d)

ஆணித்தரம்

4.

கபிலனின் திறமையைப் பரிசோதிக்க நினைத்த ஆசிரியர் சிக்கலான கேள்விகளை அவனிடம் கேட்டார்.

a)

ஈடு கட்டுதல்

b)

வெளுத்து வாங்குதல்

c)

ஆழம் பார்த்தல்

d)

ஆணித்தரம்

5.

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.

a)

வெளுத்து வாங்குதல்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

தலை குனிதல்

d)

ஆணித்தரம்

6.

தனது பன்னிரெண்டாவது பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்ற முடிவில் மாறன் விடாபிடியாக இருந்தான்.


சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.

a)

முயல் கொம்பு

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கரை கண்டவர்

d)

ஆணித்தரம்

7.

எத்தனை செல்வங்கள் இருந்தாலும் கல்விச் செல்வத்திற்கு இணையான ஒன்றில்லை.

a)

ஈடு கட்டுதல்

b)

ஆணித்தரம்

c)

எடுப்பார் கைப்பிள்ளை

d)

ஆழம் பார்த்தல்

8.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

9.

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

கரி பூசினாள்.

b)

கங்கணம் கட்டினாள்.

c)

ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

கை கொடுத்தாள்.

10.

ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

ஓட்டை வாய் / நாக்கு நீளுதல்

b)

மனப்பால் குடித்தல் / குரங்குப் பிடி

c)

முழு மூச்சி / முட்டுக்கட்டை

11.

இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?

a)

மனப்பால் குடித்தல்

b)

கங்கணம் கட்டுதல்

c)

முழு மூச்சு

d)

வெளுத்து வாங்குதல்

12.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணை எது?

a)

நாக்கு நீளுதல் - வரம்புமீறி பேசுதல்

b)

தலை குனிதல் - அவமானம் அடைதல்

c)

ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத்தோடு ஒட்டாதக் கல்வி

d)

எடுப்பார் கைப்பிள்ளை - எளிதல் பிறருக்கு வசப்படாதவர்

13.

கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.

a)

தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனை திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.

b)

கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.

c)

தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.

d)

அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.

14.

மேற்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?

a)

கையும் களவுமாய்

b)

தெள்ளத் தெளிதல்

c)

அவசரக் குடுக்கை

d)

ஓட்டை வாய்

15.

பள்ளி விதிமுறைகளைக் கட்டொழுங்கு ஆசிரியர் ______________ விளக்கினார்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

செவி சாய்த்து

c)

தெள்ளத் தெளிவாக

d)

குடு குடு

16.

கொடுக்கப்பட்ட மரபுத்தொடரின் பொருளைச் சரியாகத் தெரிவு செய்க.


அவசரக் குடுக்கை

a)

ஒரு செயலை மெதுவாகச் செய்துவிடுபவர்

b)

ஒரு செயலை நிதானமாகச் செய்துவிடுபவர்

c)

ஒரு செயலைத் தீவிரமாகச் செய்துவிடுபவர்

d)

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்

17.

சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


வகுப்பில் எப்பொழுதும் அவசரமாகப் பதிலைக் கூறும் மாறனை ஆசிரியர் கண்டித்தார்.

a)

கண்ணும் கருத்தும்

b)

ஒற்றைக் காலில் நிற்றல்

c)

அவசரக் குடுக்கை

18.

சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க

a)

ஓட்டை வாய் - உண்மையைப் பேசுபவன்

b)

அவசரக் குடுக்கை - அவசரமில்லாமல் நடப்பவன்

c)

செவி சாய்த்தல் - தலையைச் சாய்த்து நிற்றல்

d)

தெள்ளத் தெளிதல் - அதிகம் தெளிவாகுதல்

19.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.


தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அரக்க பரக்க

c)

வாரி இறைத்தல்

d)

மனப்பால் குடித்தல்

20.

குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................

a)

கை கொடுத்தான்.

b)

தோள் கொடுத்தான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கணம் கட்டினாள்.

21.

கீழ்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரை தெரிவு செய்.


விமலா தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற முழு கவனத்துடன் படித்தாள்.

a)

நாக்கு நீளுதல்

b)

கண்ணும் கருத்தும்

c)

செவி சாய்தல்

d)

தெள்ளத் தெளிதல்