wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி மீள்பார்வை 1 ஆண்டு 6

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

2.

வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.

b)

வானில் பருந்து பறந்து சென்றது

c)

மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.

d)

அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.

3.

ஐயோ! கால் வலிக்கிறதே!

மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

4.

சரியான எச்சத்தைத் தெரிவு செய்க


தேடி அலைந்தான்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

5.

சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக


உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.

a)

எழுந்த

b)

எழுதிய

c)

எழுதும்

d)

எழுத்து

6.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

7.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

8.

இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.


ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

9.

ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.

a)

கு , ஓடு

b)

இல் , உடன்

c)

ஐ , ஓடு

d)

இல் , கு

10.

மாணவர்கள் யாழ் பயிற்சி நூல்களை நேற்று _____________.

a)

வாங்கும்

b)

வாங்கினர்

c)

வாங்குகின்றனர்

d)

வாங்குவோம்

11.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

12.

பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.

a)

சலசல

b)

மளமள

c)

தகதக

d)

மடமட

13.

திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.

_____________________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

b)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

c)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

d)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

14.

ஈகை திறன் எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

b)

அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

c)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

d)

நலமாக வாழ உடலினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

15.

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

a)

துன்பத்தால் மனம் உருகுதல்

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

c)

ஒரு பொருள் சேதமடைவதை தடுக்க முடியாமை

16.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திசூடி

c)

புதிய ஆத்திசூடி

d)

வெற்றிவேற்கை

17.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

18.

சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


சிறுவயதில் தன் குடும்பத்தை பழிவாங்கிய அந்தப் பயங்கர சாலை விபத்து, சுமதியின் மனதில்_________________ பதிந்து விட்டது.

a)

இலைமறை காய் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

காட்டுத் தீ போல

19.

விடா முயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.


எனக் கூறும் செய்யுள் எது?

a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

20.

விடா முயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.


எனக் கூறும் செய்யுள் எது?

a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

21.

கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


சர் சீ.வி. இராமன் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் அறிவியல் பாடத்தை ________________ ஒரு மாமேதை.

a)

ஓட்டை வாயனான

b)

கரைத்துக் குடித்த

c)

காது குத்திய

d)

அள்ளி இறைத்த

22.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஒற்றுமை வலிமையாம்

c)

ஊண்மிக விரும்பு

d)

உடலினை உறுதிசெய்

23.

கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.


I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

a)

I, II, IV, III

b)

I, IV, III, II

c)

I, II, III, IV

d)

II, I, III, IV

24.

தோன்றல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

கல் + தூண் = கற்றூண்

b)

கண் + இமை = கண்ணிமை

c)

செம்மை + கோல் = செங்கோல்

d)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

25.

மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

a)

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

b)

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

c)

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

d)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே