wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்வினை செயப்பாட்டுவினை ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காவியா தங்க மீன்களை வளர்ப்பாள்

a)

தங்க மீன்கள் காவியாவால் வளர்க்கப்படும்.

b)

தங்க மீன்கள் காவியாவால் வளர்க்கப்பட்டது

c)

தங்க மீன்கள் காவியாவால் வளர்க்கப்படுகிறது.

2.

தங்க நகைகள் பொற்கொல்லனால் செய்யப்படுகின்றன.

a)

பொற்கொல்லன் தங்க நகைகளைச் செய்தான்.

b)

பொற்கொல்லன் தங்க நகைகளைச் செய்வான்.

c)

பொற்கொல்லன் தங்க நகைகளைச் செய்கிறான்.

3.

வியாபாரிகள் பொருள்களை விற்பர்.

a)

பொருள்கள் வியாபாரியால் விற்கப்பட்டது.

b)

பொருள்கள் வியாபாரியால் விற்கப்படுகிறது.

c)

பொருள்கள் வியாபாரியால் விற்கப்படும்.

4.

தாத்தாவால் மர்மக்கதைகள் கூறப்பட்டன.

a)

தாத்தா மர்மக்கதைகளைக் கூறினார்

b)

தாத்தா மர்மக்கதைகளைக் கூறுவார்.

c)

தாத்தா மர்மக்கதைகளைக் கூறுகிறார்.

5.

கருத்துகள் மாணவர்களால் கூறப்படும்.

a)

மாணவர்கள் கருத்துகளைக் கூறினர்.

b)

மாணவர்கள் கருத்துகளைக் கூறப்பட்டது.

c)

மாணவர்கள் கருத்துகளைக் கூறுவர்.

6.

ஆசிரியர் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தார்.

a)

ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு இலக்கியம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.

b)

ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு இலக்கியம் ஆசிரியரால் கற்பிக்கப்படும்.

c)

ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு இலக்கியம் ஆசிரியரால் கற்பிக்கப்படுகிறது.

7.

மலர்விழியால் தொடுக்கப்பட்ட மல்லிகை மலர்மாலையைப் பலரும் விரும்பி வாங்கினர்.

a)

மலர்விழி தொடுக்கும் மல்லிகை மலர்மாலைப் பலரும் விரும்பி வாங்கினர்.

b)

மலர்விழி தொடுக்கின்ற மல்லிகை மலர்மாலைப் பலரும் விரும்பி வாங்கினர்.

c)

மலர்விழி தொடுத்த மல்லிகை மலர்மாலைப் பலரும் விரும்பி வாங்கினர்.

8.

அப்பாவும் அண்ணனும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் பூச்செடிகளை நட்டனர்.

a)

பூச்செடிகள் அப்பாவாலும் அண்ணனாலும் வீட்டைச் சுற்றி நடப்படும்

b)

பூச்செடிகள் அப்பாவாலும் அண்ணனாலும் வீட்டைச் சுற்றி நடப்பட்டது.

c)

பூச்செடிகள் அப்பாவாலும் அண்ணனாலும் வீட்டைச் சுற்றி நடப்படுகிறது.

9.

மருதனால் செய்யப்பட்ட படகு அதிக விலையில் விற்கப்பட்டது.

a)

மருதன் செய்த படகை அதிக விலையில் விற்றான்.

b)

மருதன் செய்த படகு அதிக விலையில் விற்கப்பட்டது.

c)

மருதன் செய்த படகை அதிக விலையில் விற்பான்.

10.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் உலக மக்கள் அனைவரும் வாசிக்கத் தக்க நூலாகும்.

b)

கோமளம் தீபாவளிப் பண்டிகையன்று வாசலில் கோலம் இட்டாள்.

c)

மாணவர்கள் தேசிய கீதம் பாடுகின்றனர்.