wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் தாள் 1

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

புதுப்பிக்கக் கூடிய சக்தி என்பது

a)

தொடர்ச்சியாகக் கிடைக்கும் சக்தியின் மூலத்திலிருந்து உருவாக்கக் கூடியது

b)

தூய்மைக்கேட்டை ஏற்படுத்தக் கூடியது

c)

எரிபொருளின் இருந்து உருவாக்கக் கூடியது

d)

மற்ற சக்திகளை உருவாக்கக் கூடியது

2.

திரெங்கானுவிலிருந்து கோலாலம்பூருக்குப் பனிக்கட்டிகள் நிரப்பப்ட்ட கொள்கலனில் மீன்கள் அனுப்பப்ட்டன.

அந்தப் பனிக்கட்டிகள் எளிதில் உருகாமல் இருப்பதை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

a)

பனிக்கட்டிகளின் மேல் சிறிதளவு புளிக்காடியை ஊற்ற வேண்டும்

b)

பனிக்கட்டிகளின் மேல் உப்பைத் தூவ வேண்டும்

c)

பனிக்கட்டிகளைச் சிறுசிறு துண்டுகளாக உடைக்க வேண்டும்

d)

பனிக்கட்டிகளை ஒரு நெகிழிப் பையினுள் போட வேண்டும்

3.

அஸ்லி பென்சிலைக் கொண்டு ஓவியம் வரைந்தான். வரையும்போது ஓவியத்தில் ஏற்பட்ட சில தவறுகளை அழிக்க எண்ணினான். அவனிடம் நொய்வ அழிப்பான் இல்லை.


அந்தத் தவறுகளை அழிப்பதற்கு மிகச் சிறந்த வழி யாது?

a)

ஈரமான தனது விரலின் மேற்பரப்பைப் பயன்படுத்துதல்

b)

ஓர் ஈரமான மெல்லிலைத் தாளைப் பயன்படுத்துதல்

c)

ஒரு நொய்வ வளையத்தைப் பயன்படுத்துதல்

d)

காலணி வெள்ளைப் பூச்சைப் பயன்படுத்துதல்

4.

அமாட் கூடாரம் அமைக்கும்போது அக்கூடாரம் மரக்கிளையில் சிக்கிக் கிழிந்துவிட்டது.

பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் கூடாரத்தொன் கிழிந்த பகுதியை ஒட்டுவதற்கு மிகப் பொருத்தமானது ஆகும்?

a)

நெகிழித் தாள்

b)

விலங்கின் உரோமம்

c)

பருத்தித் துணி

d)

மணிலா அட்டை

5.

பின்வருவனவற்றுள் எது, வால் நட்சத்திரம் பற்றி சரியானது?

a)

பூமியின் இயற்கைத் துணைக்கோள்

b)

விண்வெளியில் நிலையாக மிதக்கும் கற்துண்டுகள் அல்லது உலோகத் துண்டுகள்

c)

செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் இடையே உள்ள உலோகக் கற்கள்

d)

சூரியனைச் சுற்றி வரும் உறைந்த வளிமங்கள், கற்கள் மற்றும் தூசுகள்

6.

பின்வரும் கூற்றுகளுள் எது, பொருண்மையைப் பற்றி சரியானது?

a)

ஒரு பொருளின் அளவு அதிகரித்தால், அப்பொருளின் பொருண்மை அதிகரிக்கும்

b)

ஒரு பொருளின் பருப்பொருள் எண்ணிக்கை அதிகரித்தால் பொருளின் பொருண்மை அதிகரிக்கும்

c)

ஒரு பொருளின் உயரம் அதிகரித்தால் அப்பொருளின் பொருண்மை அதிகரிக்கும்

d)

ஒரு பொருளின் கொள்ளளவு அதிகரித்தால் அப்பொருளின் பொருண்மை அதிகரிக்கும்

7.

படம் காற்றின் மூலம் பரவிய ஒருவகை விதையைக் காட்டுகிறது?

அந்தவிதையின் X பகுதி இல்லாவிட்டால் என்ன நேரிடும்?

a)

செழித்து வளரும்

b)

தாய்ச்ச்செடிக்கு அருகில் வளரும்

c)

தாய்ச்செடியுடன் குறைவான போராட்டத்தையே எதிர்நோக்கும்

d)

போதுமான அடிப்படைத் தேவைகள் பெறும்

8.

படம் ஒரு பசுமைக்குடிலில் நடப்பட்ட நான்கு வகைத் தாவரங்களைக் காட்டுகிறது.

பின்வரும் தாவரங்களுள் எது பூச்சாடிக்கு வெளியே பரவி வளரக் கூடியதாகும்?

a)

காசித்தும்பை

b)

எலுமிச்சை

c)

சோற்றுக்கற்றாழை

d)

செராய்

9.

படம் ஓர் இரவுச் சந்தையில் அங்காடிக்கடை ஒன்றைக் காட்டுகிறது

பின்வருவனவற்றுள் எது அங்காடிக்கடை வெளிச்சமாக்குவதில் ஏற்படும் சக்தியின் உருமாற்றத்தை விளக்குகிறது?

a)

இரசாயணச்சக்தி \rightarrow வெப்பச்சக்தி \rightarrow மின்சக்தி \rightarrow ஒளிச்சக்தி

b)

மின்சக்தி \rightarrow ஒளிச்சக்தி \rightarrow வெப்பச்சக்தி \rightarrow இரசாயணச் சக்டி

c)

இரசாயணச் சக்தி \rightarrow மின்சக்தி \rightarrow ஒளிச்சக்தி ++ வெப்பச்சக்தி

d)

மின்சக்தி \rightarrow இரசாயணச்சக்தி \rightarrow வெப்பச்சக்தி ++ ஒளிச்சக்தி

10.

படம் நெகிழிப்புட்டி ஒரு பூச்சாடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது

படம் உள்ள மறுபயனீட்டுப் பொருளை அதிகமாக மலேசியர்கள் பயன்படுத்தினால் என்ன நிகழும்?

a)

எரிப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும்

b)

பொருளின் உற்பத்தி செலவை அதிகரிக்கும்

c)

இயற்கை மூலங்கள் காக்கப்படும்

d)

தூய்மைக்கேடு அதிகரிக்கும்

11.

படம் ஒரு வன இலாகா மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றைக் காட்டுகிறது.

பின்வரும் நடவடிக்கைகளுள் எது, வன இலாகா மேற்கொண்ட முயற்சியுடன் தொடர்புடையது?

a)

பராமரித்தல்

b)

புணரமைத்தல்

c)

இனவகைநீடுநிலவல்

d)

உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு

12.

படம் மிளகாயை அரைக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கருவிகளைக் காட்டுகிறது.

X கருவிக்குப் பதிலாக Y கருவியைப் பயன்படுத்தினால் என்ன நிகழும் ?

a)

குறைவான உந்துவிசை தேவைப்படும்

b)

மிளகாயின் உறைப்புத் தன்மை அதிகரிக்கும்

c)

மிள்காயின் தன்மை மேலும் மிருதுவாகும்

d)

மிளகாய் அரைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகரிக்கும்

13.

அட்டவணை ஊதப்பட்ட பலூன் ஒன்றைச் சூரிய ஒளியின்கீழ் வைத்து மேற்கொள்ளப்பட்ட முடிவைக் காட்டுகிறது.

பலூன் வெப்பத்தைப் பெறும்போது எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

பலூனில் உள்ள காற்று விரிவடைகிறது

b)

பலூனில் உருவளவு மேலும் பெரிதாகுகிறது

c)

பலூனில் உள்ள காற்று மேலும் வெப்பமடைகிறது

d)

பலூனில் உள்ள காற்றின் கொள்ளளவு அதிகரிக்கிறது

14.

படம் நிலவின் கலைகளைப் பற்றி போலித்தம் ஒன்றைக் காட்டுகிறது.

S மாணவன் தன் அமைவிடத்தை,T மாணவனுக்குப் பின்னால் மாற்றினால் எந்த நிலவின் கலையை உற்றறிய முடியும்?

a)

புது நிலவு

b)

பிறை நிலா

c)

அரை நிலா

d)

பௌர்ணமி

15.

படம் இரும்புக் கம்பியில் தொங்கவிடப்பட்ட சில தாங்லோங் விளக்குகளைக் காட்டுக்கிறது.

நண்பகலில் இரும்புக் கம்பியின் நிலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

தங்லோங் விளக்குகளின் பொருண்மை அதிகரிக்கிறது

b)

தங்லோங் விளக்குகளிலுள்ள காற்று விரிவடைகிறது

c)

இரும்புக் கம்பி குளிர்ச்சியாக இருக்கும்போது சுருங்குகிறது

d)

இரும்புக் கம்பி வெப்பமாக இருக்கும்போது விரிவடைகிறது.

16.

படம் இரும்புக் கம்பியில் தொங்கவிடப்பட்ட சில தாங்லோங் விளக்குகளைக் காட்டுக்கிறது.

நண்பகலில் இரும்புக் கம்பியின் நிலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

தங்லோங் விளக்குகளின் பொருண்மை அதிகரிக்கிறது

b)

தங்லோங் விளக்குகளிலுள்ள காற்று விரிவடைகிறது

c)

இரும்புக் கம்பி குளிர்ச்சியாக இருக்கும்போது சுருங்குகிறது

d)

இரும்புக் கம்பி வெப்பமாக இருக்கும்போது விரிவடைகிறது.

17.

படம் சபாவில் வசிக்கும் திரு.அபு, கோலாலம்பூரில் உள்ள எழுதுபொருள் வியாபாரிக்கு அனுப்ப வேண்டிய ஓர் ஆவணத்தைக் காட்டுகிறது.

அந்த ஆவணத்தை மிக விரைவாகவும் விவேகமாகவும் அனுப்புவதற்கு மிகச் சிறந்த வழிமுறை

a)

தொலைநகலி / facsimile

b)

தந்தி / telegram

c)

தொலைபேசி உரையாடல் / telephone conversation

d)

கடிதம் அனுப்புதல் / delevery of letter

18.

R,S T என்பவை சில பொருள்களில் மிதவைத் திறத்தை ஆராயும் மூன்று படிநிலைகள் ஆகும்.


R - எல்லாப் பொருள்களையும் நீர் நிரப்பப்பட்ட மீன்

தொட்டிக்யில் போடுதல்.

S- ______________________________________________________________

T-ஒவ்வொரு பொருளையும் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருளைக் கண்டறிதல்

பின்வருவனவற்றுள் எது S படிநிலையாகும்?

a)

ஒவ்வொரு பொருளின் பொருண்மையை விளக்குதல்

b)

சில நிமிடங்களுக்குப் பிறகு நீரின் கொள்ளளவைக் குறித்துக் கொள்ளவும்.

c)

பொருளின் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு நறுமுனையை நீரில் அமிழ்த்தவும்.

d)

ஒவ்வொரு பொருளின் அமைவிடம் நீரின் மேற்பரப்பில் உள்ளதா அல்லது மீன்தொட்டியில் அடித்தளத்தில் உள்ளதா என்பதை உற்றறியவும்.

19.

R,S T என்பவை சில பொருள்களில் மிதவைத் திறத்தை ஆராயும் மூன்று படிநிலைகள் ஆகும்.


R - எல்லாப் பொருள்களையும் நீர் நிரப்பப்பட்ட மீன்

தொட்டிக்யில் போடுதல்.

S- ______________________________________________________________

T-ஒவ்வொரு பொருளையும் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருளைக் கண்டறிதல்

பின்வருவனவற்றுள் எது S படிநிலையாகும்?

a)

ஒவ்வொரு பொருளின் பொருண்மையை விளக்குதல்

b)

சில நிமிடங்களுக்குப் பிறகு நீரின் கொள்ளளவைக் குறித்துக் கொள்ளவும்.

c)

பொருளின் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு நறுமுனையை நீரில் அமிழ்த்தவும்.

d)

ஒவ்வொரு பொருளின் அமைவிடம் நீரின் மேற்பரப்பில் உள்ளதா அல்லது மீன்தொட்டியில் அடித்தளத்தில் உள்ளதா என்பதை உற்றறியவும்.

20.

அஹமாட்டின் குளியலறை 200cm X 200cm அளவு கொண்டது.

அவர் அந்த அறையின் தரைக்குப் பளிங்குக் கல் பதிக்க எண்ணினார்.

அவர் 20cm x 20cm பளிங்குக் கல்லைப் பயன்படுத்தினால் அறையின் தரை முழுவதும் பதிக்க எத்தனை பளிங்குக் கற்கள் தேவைப்படும்?

a)

100

b)

400

c)

1000

d)

4000

21.

சித்தி இளங்காசித்தும்பைச் செடிகளை ஒரு கலனில் வளர்த்தாள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அச்செடிகள் செழிப்பாக வளரவில்லை.

செடிகளின் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

a)

கலனை வீட்டினுள் வைத்தல்

b)

கலனில் உள்ள மண்ணின் அளவைக் குறைத்தல்

c)

இளஞ்செடிகளை வேறொரு கலனுக்கு மாற்றுதல்

d)

கலனில் உள்ள இளஞ்செடிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

22.

படம், ஓர் உணவு வலையைக் காட்டுகிறது.

பின்வருவனவற்றுள் எது, மேற்கண்ட உணவு வலையின் அடிப்படையில் சரியானது?

a)

அனைத்து U விளங்கும் மடிந்தால் S விலங்கு குறையும்

b)

அனைத்து S மற்றும் R விலங்குகள் மடிந்தால் T விலங்கு மடியும்.

c)

அனைத்து U விலங்கும் மடிந்தால் S மற்றும் R விலங்குகள் அதிகரிக்கும்.

d)

அனைத்து R விலங்கு மடிந்தால் T விலங்கு மடியும்

23.

இயற்கை நீர் சுழற்சி என்பதன் பொருள் என்ன?

a)

மீண்டும் மீண்டும் ஏற்படும் மழையின் உருவாக்கம்

b)

நீராவி ஒன்று சேர்ந்து மேகங்களை உருவாக்குதல்

c)

மேகங்கள் திண்மமாகி மழையாகுதல்

d)

பூமியின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாகுதல்

24.

படம் ஒரு வித பழத்தைக் காட்டுகிறது.

அப்பழத்தைப் பதனிட பயன்படுத்தப்படும் வழிமுறை எது?


J -மெழுகிடுதல்

K-ஊறவைத்தல்

L-புகையிடுதல்

M-குளிர்ந்துறையச் செய்தல்

a)

J மற்றும் K

b)

L மற்றும் M

c)

J மற்றும் L

d)

K மற்றும் M

25.

படம் ஓர் ஆராய்வைக் காட்டுகிறது.

இரண்டு நாள்களுக்குப் பின் கம்பழிப்புழுவின் நிலை என்ன ஆகும்?

a)

உயிருடன் இருக்கும்

b)

அதன் நிறம் மாறிவிடும்

c)

வண்ணத்துப் பூச்சியாக மாறும்

d)

தன் உடலைச் சுருட்டிக் கொள்ளும்

26.

படம் ஒரு வாரத்திற்குப் பின் சோற்றின் நிலையைக் காட்டுகிறது.

சோற்றின் நிலைஇன் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணிகள் என்ன?

a)

குளிர்ச்சியும் உலர்ச்சியும்

b)

குளிர்ச்சியும் ஈரப்பதமும்

c)

வெப்பமும் உலர்ச்சியும்

d)

வெப்பமும் ஈரப்பதமும்

27.

படம் விளையாட்டு வீரர் ஒருவர் கயிற்றைக் கொண்டு சுவர் மீது ஏறும் பயிற்சியை மேற்கொள்வதைக் காட்டுகிறது.

வழுக்கி விழாமல் தடுக்க அவர் என்ன செய்ய வேண்டும்?

a)

கையுறை அணிய வேண்டும்

b)

உள்ளங்கையை ஈரமாக்க வேண்டும்

c)

காலணிகளைக் கழற்றிவிட வேண்டும்

d)

உள்ளங்கையில் சவர்க்காரத்தூளை வைக்கவேண்டும்

28.

படம் R , S , T எனும் மூன்று வித உணவுகளைக் காட்டுகிறது.

இந்த உணவில் பதனிடும் சரியான முறை எது?

a)

R - குளிரபடுத்துதல்
S -குளிர்ந்துறைதல்
T-உப்பேற்றுதல்

b)

R-உப்பேற்றுதல்
S-குளிரபடுத்துதல்
T-குளிர்ந்துறைதல்

c)

R-குளிர்ந்துறைதல்
S-உப்பேற்றுதல்
T-குளிரபடுத்துதல்

d)

R-உப்பேற்றுதல்
S-குளிர்ந்துறைதல்
T-குளிரப்படுத்துதல்

29.

படம் மாணவர் குழு ஒன்று வளிமத்தின் தன்மையை உற்றறிந்ததைக் காட்டுகிறது.

வளிமத்தின் தன்மை என்ன?

a)

வழிந்தோடும்

b)

பொருண்மை உண்டு

c)

இடத்தை நிரப்பும்

d)

நிலையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்

30.

படம் சில எலுமிச்சைப்பழங்கள் ஒரு கண்ணாடிக் கோப்பை நீரினுள் பிழியப்படுவதைக் காட்டுகிறது.

கண்ணாடிக்கோப்பையில் உள்ள நீரின் தன்மைக்கு என்ன நிகழும்?

a)

சுவையற்று இருக்கும்

b)

நடுமைத் தன்மையாக இருக்கும்

c)

காடித் தன்மையாகும்

d)

காரத் தன்மையாகும்

31.

படம் ஒரு சூழலைக் காட்டுகிறது

அப்படம் சித்தரிக்கும் சூழல் என்ன?

a)

சாலை வழவழப்பாக உள்ளது.

b)

மலைச்சரிவை வலுப்படுத்த வேண்டும்

c)

வாகனம் தடம் புரளாமல் இருக்க ஓட்டுனர் கவனமாக ஒட்டுகிறார்.

d)

சாலையின் சாய்தள அமைப்பு வாகனம் குன்றின் உச்சியை அடைவதைச் சுலபமாக்குறது.