wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம் 1

Total questions: 12

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

a)

2 (அ, ஏ)

b)

2 (எது, என்ன)

c)

3 (அ, இ, உ)

2.

கீழ்காண்பனவற்றுள் இடுகுறிப்பெயரைத் தேர்வு செய்க.

a)

வானூர்தி

b)

மண்

c)

பறவை

3.

சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?

a)

2 (அகச்சுட்டு, புறச்சுட்டு)

b)

3 (அ, இ, உ)

4.

கீழ்காண்பனவற்றுள் காரணப் பெயரைத் தேர்வு செய்க.

a)

புல்

b)

கற்றாடி

c)

கடல்

5.

குன்றியவினை என்றால் என்ன?

a)

வாக்கியங்களில் ‘எதை’, ‘எவற்றை’, ‘யாரை’ என்ற கேள்விகளுக்கு விடை வாராது.

b)

வாக்கியங்களில் 'எதை', 'எவற்றை', 'யாரை' என்ற கேள்விகளுக்கு விடை வரும்.

6.

குன்றாவினையைச் சரியாக ஏற்றுள்ள வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

நளினி கட்டுரை எழுதினாள்.

b)

குழந்தை கதறி அழுதது.

c)

பாவாணர் சிரித்தார்.

7.

பிரித்தெழுதுக.


மாவிலை

a)

மாவு + இலை

b)

மா + இலை

c)

மாவ் + இலை

8.

கீழ்காண்பனவற்றுள் வலிமிகா இணையைத் தேர்வு செய்க.

a)

அத்துணை + பெரியது

b)

ஏது + கண்டாய்

c)

அரை + காசு

9.

கீழ்காணும் வாக்கியங்த்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்வு செய்க.


திரு.பாலன் ______________ இன்றி அண்டை அயலாரிடம் பழகினார்.

a)

தங்கு தடை

b)

ஆதி அந்தம்

c)

கள்ளங் கபடு

10.

கீழ்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


சேகர் தன் குடும்பத்தைக் கண்டவுடன் ________________________மகிழ்ந்தான்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

தாயைக் கண்ட சேயை போல

c)

பசுமரத்தாணி போல

11.

சேர்த்தெழுதுக.


பூ + அரும்பு =

a)

பூயரும்பு

b)

பூஅரும்பு

c)

பூவரும்பு

12.

திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க.


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

a)

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்.

b)

பொறாமை, பேராசை, கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.