wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளிச்சேர்க்கை ஆண்டு 4

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஒளிச்சேர்க்கை என்பது ___________

a)

தாவரங்கள் சுயமாக சுவாசிக்கும் செயற்பாங்கு

b)

தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு

2.

ஒளிச்சேர்க்கையில் தேவைப்படும் பொருள்கள்?

a)

நீர் + கரிவளி + சூரிய ஓளி + பச்சையம்

b)

நீர் + காற்று + சூரிய ஓளி + பச்சையம்

3.

ஒளிச்சேர்க்கையில் தயாரிக்கப்படும் பொருள்கள்?

a)

கஞ்சி + உயிர்வளி

b)

கஞ்சி + காற்று

4.

காளானால் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்ய முடியாது காரணம் ___________ .

a)

பச்சையம் இல்லை

b)

கரிவளி இல்லை

5.

தாவரங்கள் இரவு நேரங்களில் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்யாது காரணம் _________ .

a)

காற்று இல்லை

b)

சூரிய ஒளி இல்லை

6.

தாவரங்கள் _____________ உள்வாங்கி உயிர் வாழ்கின்றன.

a)

கரிவளி

b)

உயிர்வளி

7.

தாவரங்கள் சர்க்கரைப் பொருள் (கஞ்சி) எங்கே சேமித்து வைக்கும்?

a)

காய்

b)

தண்டு

c)

வேர்

d)

அனைத்தும்

8.

ஒளிச்சேர்க்கையின் மூலம் _________ கிடைக்கிறது.

a)

உயிரினங்களுக்கு சுவாசிக்க காற்று

b)

உயிரினங்களுக்கு உண்ண உணவு

9.

ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

கரிவளி

d)

பச்சையம்

10.

ஒளிச்சேர்க்கையின்வழி மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

(சரியான மூன்று பதில்களைத் தேர்வு செய்க)

a)

உயிர்வளியைப் பெறுதல்

b)

கரிவளியைப் பெறுதல்

c)

உணவைப் பெறுதல்

d)

உணவைப் பெறுதல்

பூமி வெப்பமாவதிலிருந்து காக்கப்படுதல்

11.

ஒளிச்சேர்க்கை தாவரத்தின் ___________ பகுதியில் நடைபெறுகிறது.

a)

தண்டு

b)

இலை

c)

வேர்

d)

காய்

12.

உயிர்வளி இலைகளின் ____________________வழி வெளியேற்றப்படுகின்றது.

a)

சிறு சிறு ஓட்டைகள்

b)

துவாரங்கள்

c)

கோடுகள்

13.

மனிதர்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் தாவரங்கள் உணவு தேடி அலைவதில்லை. ஏன்?

a)

அவை வேரின் வழி உணவைப் பெறுகின்றன.

b)

அவை சுயமாக உணவு தயாரிக்கின்றன.

c)

அவற்றிற்கு மனிதன் உணவு வழங்குகிறான்.

d)

அவை இயற்கை உரத்தை நம்பி வாழ்கின்றன.

14.

படம் எதனை விளக்குகின்றது?

a)

ஒளிச்சேர்க்கை

b)

சுவாசித்தல்

c)

தூண்டலுக்குத் துலங்குதல்

d)

கழிவுகளை அகற்றுதல்

15.

தாவரங்கள் இல்லை என்றால் உலகுக்கு என்ன நிகழும்?

a)

அனைத்து உயிர்களும் மடிந்துவிடும்.

b)

அனைத்து உயிர்களும் தொடர்ந்து வாழும்.

c)

தாவர உண்ணிகள் மட்டும் அழியும்.

d)

விலங்குகள் மடிந்து விடும்.

16.

காடுகளின் அழிவால் ஏற்படும் விளைவு என்ன?

a)

கரிவளியின் அளவு அதிகரிக்கிறது.

b)

உயிர்வளியின் அளவு அதிகரிக்கிறது.

c)

கடலின் நீர் மட்டம் குறைகிறது.

d)

உலகம் குளிர்ச்சி அடைகிறது.

17.

எது ஒளிச்சேர்க்கை செய்யவில்லை?

a)
b)
c)
d)
e)
18.

எவை பல்வேறு தாவரங்கள் உணவைச் சேமித்து வைக்கும் இடம்?

a)

இலை

b)

தண்டு

c)

வேர்

d)

பழம்

19.

எது தண்டில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

20.

தாவரங்கள் தயாரிக்கும் உணவு அவற்றிற்கு எவ்வாறு பயனளிக்கின்றது?

a)

வளர்ச்சிக்காக

b)

நகர

c)

பிற உயிரினங்களுக்கு உணவளிக்க

d)

நீரில்லாக் காலங்களில் உதவ

21.

தாவரத்தில் நீரும் உணவும் _____________ வழி மற்ற பாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

a)

வேரின்

b)

தண்டின்

c)

இலையின்

d)

பூக்களின்