wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

நாளை -______________ அனைவரும் நடன வகுப்புக்குச் செல்வோம். அப்போதுதான் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற முடியும், '' என்றார் பவித்ரா.

a)

அவர்கள்

b)

தாங்கள்

c)

நீங்கள்

d)

நாம்

2.

கண் + இமை

a)

தோன்றல் விகாரம்

b)

கெடுதல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

3.

ஒருமை வாக்கியத்தை அடையாளம் காண்க.

a)

பக்தர்கள் ஆலயத்திற்குச் சென்றனர்.

b)

குருக்கள் இறைவனுக்குப் பூஜை செய்தார்.

c)

எல்லாரும் பூஜையில் கலந்து கொண்டனர்.

4.

ஒற்றைக் காலில் நிற்றல்

மேற்கண்ட மரபுத்தொடருக்கு ஏற்றப் பொருளைத் தெரிவு செய்க

a)

உடன்படுதல்

b)

. சாப்பிடுதல்      

c)

பிடிவாதமாக இருத்தல்

5.

இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப் போல மனத்தில் அழியாமல் நிலைத்திருக்கும்.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

6.

ஒப்புர வொழுகு

a)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

b)

பொறாமை கொண்டு பிறரைக் தூற்றிப் பேசக்கூடாது.

c)

நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.

7.

ஏவா மக்கள் ____________________

a)

ஆக்கத்திற்கு அழகு 

b)

மூவா மருந்து       

c)

கண்ணெனத் தகும்

8.

உயிர்க்குறில் மொத்தம் எத்தனை

a)

7

b)

5

c)

6

9.

தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

216

b)

247

c)

12

10.

உயிர் நெடிலைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

எல

b)

ஔடதம்

c)

ஊதல்

11.

மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் போதித்தார்.

a)

A.       பொருட்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

இடப்பெயர்

12.

கீழ்க்காண்பனவற்றுள் எது பண்புப் பெயர் அல்ல?

a)

நீலம்

b)

அன்பு

c)

அலகு

13.

ஈகை திறன்

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

உலகநாதர் பண்டிதர்

14.

நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.

a)

ஏறுபோல் நட

b)

ஊண்மிக விரும்பு

c)

உடலினை உறுதி செய்

15.

மனோகரனின் குடும்ப உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவர்.

a)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

16.

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக் கூடாது.

a)

அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

17.

பொன் + சரடு

a)

பொன்சரடு

b)

பொற்சரடு

c)

பொட்சரடு

18.

வருமொழியைக் கூறுக.

பொன் + சிலை

a)

பொன்

b)

ன்

c)

சிலை

19.

கீழ்க்காணும் மூதுரையின் செய்யுளடியைச் சரியாக நிறைவு செய்க.

நன்றி ஒருவற்குச் செய்தக்க லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

_________________________________________________________

a)

தெய்வத்துள் வைக்கப் படும்

b)

தோன்றலின் தோன்றாமை நன்று

c)

தலையாலே தான்தருத லால்

20.

கோடிடப்பட்ட சொல்லில் உள்ள வேற்றுமை உருபு யாது ?

யாழினி தன் அம்மாவோடு கடைக்குச் சென்றாள்.

a)

ஓடு

b)

ஒடு

c)

கு

21.

பூ + ஆரம் = __________________

a)

பூரம்

b)

பூவரம்

c)

பூவாரம்

22.

குமரவேல் காணாமல் போன தன் கடிகாரத்தை _____________ _________________ தேடினான்.

a)

அல்லும் பகலும்

b)

அன்றும் இன்றும்

c)

சுற்றும் முற்றும்

23.

விமலன் காலையில் உடற்பயிற்சியைச் செய்தான்

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

எட்டாம் வேற்றுமை

24.

நாங்கள் அதே தெருவில்தான் _________ வசித்து வருகிறோம்.

a)

அண்டை அயலார்

b)

சுற்றும் முற்றும்

c)

அன்றும் இன்றும்

25.

எனக்கு உன் உதவி தேவைப்படுகிறது. ________ இந்த முறை நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்.

a)

ஆகவே

b)

ஏனென்றால்

c)

எனினும்