Font size
Worksheetsநிதியறிவு -
Total questions: 10
Worksheet time: 8mins
“சிறுதுளி பெருவெள்ளம்” என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம் அது நமக்கு ஓர் _____________ கருத்தை தருகின்றது.
உண்மையை
ஆழமான
அகலமான
உத்தமமான
சேமிக்கும் பணமே பின்னாளில் பெரிய தொகையாக நமக்கு அவசியம் ஏற்படும் நேரங்களில் உதவும் என்பதனால்தான் நமது (a) அதனை நமக்கு வலியுறுத்தினார்கள்.
பொதுவாக மனித வாழ்வில் இளமை, முதுமை ஆகியன இயல்பானவை, இளமை பருவத்தில் அனைவருக்கும் கடினமாக உழைக்க உடல் ஆற்றல் இருக்கும். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது போல நாம் இளமை காலத்தில் கடுமையாக உழைத்து நமது (a) சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படியிருந்தால்தான் முதுமையிலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும். வாழ்வில் உயர்வு தாழ்வுகளும் மேடு பள்ளங்களும் (a) வருவது இயற்கை என்பதனால் நாம் எப்பொழுதும் கடினமான சூழ்நிலைக்குத் தயாராக இருக்க வேண்டும்.
உதாரணமாக நோய்வாய்ப்படுகின்ற நேரங்களிலும் அசாதாரணமான காலநிலை _________________ காலங்களிலும் நாம் இங்கே வாழ்வதற்கு நமக்கு சேமிப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது.
வரும்
நிலவும்
உலவும்
பாயும்
இவற்றிக்கு ஏற்றாற்போல் தன்னைத் தயார்படுத்தி கொள்ளும் மனிதனே இங்கு _________________ விளங்குவான்.
மனிதனாய்
இறைவனாய்
வெற்றியாளனாய்
அதிர்ஷ்டசாலியாய்
சேமிக்க வேண்டியவை இந்த உலகத்தில் ஏராளம் உள்ளன. ஆனால், நாம் அனைவரும் அதிகம் சேமிப்பது பணத்தைத்தான். அதனைத் தாண்டியும் நாம் சேமித்து வைத்திருக்க வேண்டியது நம்மை வாழ்விக்கும் மீள உருவாக்க முடியாத இயற்கை _______________ ஆகும்.
விளங்குகள்
விலங்குகள்
வனங்கள்
வளங்கள்
சுத்தமான காற்று, தூய்மையான காடுகள், நாம் உண்ணும் உணவுப் பொருட்கள், கடல் வளங்கள், இயற்கை வளங்கள் போன்றவை அவை அருகிச் செல்வதனால் மனித வாழ்க்கை சவால் நிறைந்த ஒன்றாக மாறி வருகின்றது. சேமிப்பின் வாயிலாக நாம் பல எண்ணற்ற நல்லனவற்றைப் பெற்று கொள்ளலாம். சுயமாகச் சேமிக்க கூடிய ஒருவர் பிறரைச் (a) இருக்காமல் வாழ்வில் சுலபமாக முன்னேறிவிட முடியும்.
இதனால் பிள்ளைகளுக்கு (a) சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுத்து ஊக்குவிக்க பெற்றோர்கள் முயல வேண்டும்.
எதிர்காலத்தில் அவரவர் __________________ மட்டுமன்றி நமது சமூகத்தையும் பாதுகாக்க மிகவும் உதவிகரமானதாக அமையும்.
குடும்பத்திற்கு
பள்ளிக்கு
வட்டாரத்திற்கு
நாட்டிற்கு
