NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு 1 2025
Total questions: 20
Worksheet time: 10mins
பாரதியார் பல நீதி புகட்டும் பாடல்களைப் பாடியுள்ளார். அதன் வாயிலாக அவர் மாணவர்களுக்குப் பல ______________ கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.
அரிய
அறிய
சிங்கப்பூரில் இப்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொருட்களின் ______________ பலமடங்கு ஏறியுள்ளது. இதைச் சமாளிக்க நம் அரசாங்கம் பல வழிமுறைகளை யோசிக்கின்றது.
விளை
விலை
தமிழ் இலக்கியத்தில் கவிஞர் கண்ணதாசன் பல ______________ பாடல்களை எழுதியுள்ளார். இதனால் அவர் தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்.
அரிய
அறிய
இயற்கை ______________ கெடாமல் இருக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும்.
வலம்
வளம்
பொதுவாக, மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காக ______________ முறையாக படிக்க வேண்டும்.
சீறான
சீரான
நாங்கள் நேற்றுப் பறவைப் பூங்காவுக்குச் சென்றோம். அங்கு ஒரு பறவை தனது _____________ பழங்களைக் கொத்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அழகால்
அலகால்
தேசிய தினத்தன்று எங்கும் கொண்டாட்டமாக இருக்கும். அன்று _____________ வேடிக்கைகள், கோலாகலமாக இடம்பெறும்.
வான
வாண
ராமன் காட்டில், வழி தெரியாமல் அலைந்துகொண்டிருந்தான். அப்போது பாதையைக் கவனிக்காமல் ஆழமான ____________ ஒன்றில் விழுந்தான்.
குழி
குளி
அன்று ராமுவின் பிறந்தநாள். அத்தை அவனுக்குப் பிடித்த
நண்டு _______________ சமைத்தார்.
குளம்பு
குழம்பு
என் தாயார் கடையிலிருந்து பழங்கள் வாங்கி வந்தார். வீடு
திரும்பியதும், அவர் அவற்றை _______________ என்னிடம்
சாப்பிடக் கொடுத்தார்.
அரிந்து
அறிந்து
காவலர்கள் திருடனைத் தூரத்தில் கண்டனர். அவர்கள் ஒரு
_______________ கூடத் தாமதிக்காமல் அவனைத் துரத்திப்
பிடித்தனர்.
கனம்
கணம்
வெயில் கடுமையாக இருந்தது. அதனால் ஓட்டப் பந்தயம் முடிந்ததும்
பயிற்றுவிப்பாளர் பவானியிடம், “தண்ணீர் குடித்து உன் தாகத்தை _________,”
என்றார்.
தனி
தணி
திரு ராமலிங்கம் தான் பழகும் அனைவரிடத்திலும் _________ கண்டு கொண்டிருந்தார். அதனால், அவருக்குக் குறைவான நண்பர்களே இருந்தனர்.
குறை
குரை
சிங்கப்பூர் _________ மிக்க நாடாகத் திகழ்கிறது. இதற்கு நம் முற்போக்குமிக்க தலைவர்களும் விடாமுயற்சியுடன் செயல்படும் மக்களுமே காரணமாவார்கள்.
வலம்
வளம்
தமிழ் எழுத்தாளர் _________ கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது.
அதில் நிறையப் பள்ளிகள் கலந்து கொண்டன.
கலகம்
கழகம்
மழை பெய்யும் போது, நிலத்தில் உள்ள ____________ நீர் தேங்கும்.
குலத்தில்
குளத்தில்
சமையலுக்கு தேவையான பொருட்களை அம்மா ____________ குறைத்து வாங்கினார்,
விளை
விலை
திரு பாரதி தம்மால் முடிந்த உதவிகளை ஏழை எளியோருக்குச் செய்தார். அவரது _________________ பணியைப் பாராட்ட, அவருக்கு விருது வழங்கப்பட்டது.
சீறிய
சீரிய
அந்தப் பழைய கட்டடத்தில் மின்சாரக் கோளாறினால் தீ மூண்டது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள், உடனே தீயை ________________ விட்டனர்.
அனைத்து
அணைத்து
பாட்டி பால் பாயசம் செய்ய எண்ணினார். அதற்கு வேண்டிய _________________ அவர் கடையிலிருந்து வாங்கி வந்தார்.
வெள்ளத்தை
வெல்லத்தை
