wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் கலை சொற்கள்

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கழிவை அகற்றுதல் என்பதன் பொருள் (2013)

a)

உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றுதல்

b)

உடலில் இருந்து மலத்தை வெளியேற்றுதல்

c)

உடலில் இருந்து நீராவியை வெளியேற்றுதல்

d)

உடலுக்கு தேவையற்ற பொருளை வெளியேற்றுதல்

2.

கழிவுப் பொருள் என்றால் என்ன?/ ( 2004)

a)

உடலுக்குத் தேவையில்லாத பொருள்

b)

செரிமாணமாகாத பொருள்கள்

c)

உடலில் காணப்படும் நச்சுத்தன்மை

d)

சிறுநீர் கழித்தலிலிருந்தும் மலம் கழித்தலிலிருந்தும் வெளியாகும் எஞ்சிய பொருள்கள்

3.

பரப்பளவு என்பதன் அர்த்தம் என்ன? ( 2004)

a)

ஓர் இடவெளியின் அளவு

b)

இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்

c)

ஒரு மேற்பரப்பின் அளவு

d)

ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் அளவு

4.

தூரம் என்பதன் அர்த்தம் என்ன?

a)

ஓர் இடவெளியின் அளவு

b)

இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்

c)

ஒரு மேற்பரப்பின் அளவு

d)

ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் அளவு

5.

கொள்ளளவு என்பதன் அர்த்தம் என்ன?

a)

ஓர் இடவெளியின் அளவு

b)

இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்

c)

ஒரு மேற்பரப்பின் அளவு

d)

ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் அளவு

6.

பின்வருவதில் எது கொள்ளளவினை அளப்பதற்கான சரியான விளக்கம்?

a)

ஓர் இடவெளியின் அளவு

b)

இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்

c)

ஒரு மேற்பரப்பின் அளவு

d)

ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் அளவு

7.

தாவரவுண்ணிகள் என்பவை __________________ ஆகியவற்றை உண்பவையாகும். ( 2008)


I. இறைச்சி II. மீன்கள் III. பழங்கள் IV. இலைகள்

a)

I மற்றும் II

b)

I மற்றும் IV

c)

II மற்றும் IIi

d)

III மற்றும் IV

8.

ஊண் உண்ணிகள் என்பவை __________________ ஆகியவற்றை உண்பவையாகும்.


I. இறைச்சி II. மீன்கள் III. பழங்கள் IV. இலைகள்

a)

I மற்றும் II

b)

I மற்றும் IV

c)

II மற்றும் IIi

d)

III மற்றும் IV

9.

புதுப்பிக்கக்கூடிய சக்தி என்பதன் பொருள் என்ன?

a)

மறு உற்பத்தி செய்யக்கூடிய சக்தியாகும்

b)

வடிவ மாற்றம் செய்ய முடியாத சக்தியாகும்

c)

எளிதில் கிடைக்கக் கூடிய சக்தியாகும்

d)

சூரிய சக்தியைப் பயன்படுத்தக்கூடிய சக்தியாகும்

10.

எத்தகைய சூழலில் உராய்வு ஏற்படுகிறது (2008)

I. ஒரு கத்தியைத் தீட்டும்போது

II. காலணியின் அடிப்பாகம் தேயும்போது

III. எந்திரத்தில் வெப்பம் உருவாகும்போது

IV. ஒரு பொருளைப் பிடித்திருக்கும்போது

a)

I, II, III மற்றும் IV

b)

I, II மற்றும் III

c)

II மற்றும் III IV

d)

I, II மற்றும் IV

11.

எத்தகைய சூழலில் உராய்வு பயன்படுகிறது (2008)

I. ஒரு கத்தியைத் தீட்டும்போது

II. காலணியின் அடிப்பாகம் தேயும்போது

III. எந்திரத்தில் வெப்பம் உருவாகும்போது

IV. ஒரு பொருளைப் பிடித்திருக்கும்போது

a)

I மற்றும் II

b)

I, மற்றும் IV

c)

II மற்றும் III

d)

III மற்றும் IV

12.

கேத்தல், மின்விசிறி, ஸ்திரிப்பெட்டி, முடி உலர்த்தும் கருவி


மேலே உள்ள கருவிகளில் எவை வெப்பத்தின் வழி பயன் அளிக்கின்றது (1998)

a)

கேத்தல், மின்விசிறி மட்டும்

b)

ஸ்திரிப்பெட்டி, மின்விசிறி மட்டும்

c)

ஸ்திரிப்பெட்டி, கேத்தல், முடி உலர்த்தும் கருவி மட்டும்

d)

ஸ்திரிப்பெட்டி,மின்விசிறி , முடி உலர்த்தும் கருவி மட்டும்

13.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை நடவடிக்கைகளில் எந்த முறையினால் உணவை ஒரு மாதத்திற்கு மேல் கெடாமல் வைத்திருக்க முடியாது? ( 1998)

a)

வெப்பமாக்குதல்

b)

கலனீடு செய்தல்

c)

காய வைத்தல்

d)

குளிர்ந்துறைதல்

14.

வியாழன், பூமி, சனி, செவ்வாய் ஆகிய கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. கீழே உள்ளவற்றுள் எந்த வரிசை, சூரியனுக்கு அருகில் உள்ள கோளிலிருந்து தொலைவில் உள்ள கோள் வரை முறையாக அமைந்துள்ளது? ( 1998)

a)

செவ்வாய், பூமி, சனி, வியாழன்

b)

பூமி, செவ்வாய், வியாழன், சனி

c)

சனி, பூமி, செவ்வாய், வியாழன்

d)

வியாழன்,செவ்வாய், பூமி, சனி

15.

வியாழன், பூமி, சனி, செவ்வாய் ஆகிய கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. கீழே உள்ளவற்றுள் எந்த வரிசை, சூரியனுக்கு தொலைவில்உள்ள கோளிலிருந்து அருகில் உள்ள கோள் வரை முறையாக அமைந்துள்ளது?

a)

செவ்வாய், பூமி, சனி, வியாழன்

b)

பூமி, செவ்வாய், வியாழன், சனி

c)

சனி, வியாழன், செவ்வாய், பூமி

d)

வியாழன்,செவ்வாய், பூமி, சனி

16.

பரந்த புல் வெளியோ

வெட்டுக்கிளி விளையாடும் இடம்

விடியற்பொழுதோ சேவல் கூவும் நேரம்

இது விழித்திருக்கும் காட்டுப் பூனையின் கவனத்தை ஈர்க்கும் ( 1998)


மேலே காணும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு உணவுச்சங்கிலி ஒன்று உருவாக்கப்பட்டால் அதனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளுள் எது சரியானது?

a)

எல்லாக் கோழிகளும் விற்கப்பட்டால் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

b)

பூச்சுக் கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டால் கோழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

c)

புல் கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டால் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

d)

வேட்டைக்காரனால் எல்லாக் காட்டுப் பூனைகளும் கொல்லப்பட்டால் கோழிகளின் எண்ணிக்கை குறையும்

17.

தாய் கடலாமை கடற்கரை மணலில் முட்டையிட்டு மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும். சிறிது காலத்தில் முட்டை வெடித்து குஞ்சுகள் வெளியாகிக் கடலுக்குச் செல்லும். ஆனால் அக்கடலாமைக் குஞ்சுகள் தொடர்ந்து உயிர் வாழ்வதர்கான சந்தர்ப்பம் மிகக் குறைவே.

மேலுள்ள பத்தியின் கருத்தின்படி பெரும்பாலன் கடலாமைக் குஞ்சுகள் பெரிய கடலாமைகளாக வளர்ச்சியடைய முடியாமல் போவதற்கான முக்கியக் காரணம் என்ன? ( 1998)

a)

கடலாமைக் குஞ்சுகளுக்கு கடல்நீரில் வாழ போதிய அனுபவம் இல்லை

b)

கடலாமைக் குஞ்சுகள் அவற்றின் தாயால் பாதுகாக்கப்படவில்லை

c)

கடலாமைக் குஞ்சுகளுக்கு மற்ற உயிரினங்கள் ஆபத்தாக அமைகின்றன

d)

கடலாமைக் குஞ்சுகள் சிறியதாகவும் வலிமையற்றதாகவும் இருகின்றன.

18.

ஒரு மாணவன் புல்வெளியில் பலகை ஒன்று தரையில் கிடக்கக் கண்டான். அப்பலகையை எடுத்த மாணவன் பலகையின் அடியில் உள்ள புல் வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கக் கண்டான். புல் ஏன் வெளிறிய மஞ்சள் நிறமாக இருக்கின்றது? (1998)

a)

நீர் போதவில்லை

b)

குறைவான வளர்ச்சி

c)

ஒளி பெறவில்லை

d)

குறைவான காற்றுப் பெறுதல்

19.

கீழே உள்ளவற்றுள் எந்தச் சூழ்நிலையில் வெட்டுக்கிளியால் சுவாசிக்க முடியாது? (1998)

i, வெட்டுக்கிளி முழுமையாக நீரில் மூழ்கியிருத்தல்

ii, வெட்டுக்கிளியின் தலை நீரில் மூழ்கியிருத்தல் iii, வெட்டுகிளியின் உடல் நீரில் மூழ்கியிருத்தல் ,

a)

II, மட்டும்

b)

I, II, மட்டும்

c)

I, III மட்டும்

d)

I, II, III,

20.

கீழே உள்ள சூழ்நிலையில் வெட்டுக்கிளியால் சுவாசிக்க முடியாது. அதற்கான ஊகம் என்ன?

வெட்டுக்கிளி முழுமையாக நீரில் மூழ்கியிருத்தல்,

வெட்டுகிளியின் உடல் நீரில் மூழ்கியிருத்தல் ,

a)

வெட்டுகிளிக்கு காற்ரு கிடைக்கவில்லை

b)

வெட்டுக்கிளியின் அடிப்பகுதியில் உள்ள சுவாசத் துளைகளின் மூலம் சுவாசிக்கிறது

c)

வெட்டுக்கிளி ஈரமான தோலின் மூலம் சுவாசிக்கிறது

d)

வெட்டுகிளி செவுளின் மூலம் சுவாசிக்கிறது