wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் (Quiz 3)

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தவளை நீரில் இருக்கும்போது எப்படிச் சுவாசிக்கும்?

a)

செவுளைக் கொண்டு

b)

ஈரமான தோலைக் கொண்டு

c)

நுரையீரலைக் கொண்டு

d)

சுவாசத் துளையைக் கொண்டு

2.

ஒரு வெட்டுக்கிளியின் உடல் பகுதி நீருக்குள் அமிழ்த்தப்பட்டு, தலை மட்டும் வெளியே தெரியும்படி விடப்பட்டது. அவ்வெட்டுக்கிளி சில நிமிடங்களில் இறந்து விட்டது. ஏன்?

a)

இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்தால்

b)

அதன் சுவாச உறுப்பு வயிற்றுப் பகுதியில் உள்ளதால்

c)

அது செவுளைக் கொண்டு சுவாசிப்பதால்

d)

அதற்கு உணவு கிடைக்காததால்

3.

பின்வரும் விலங்குகளுள் முதுகெலும்பு இல்லாதது எது?

a)

கடலாமை

b)

மலைப்பாம்பு

c)

மீன்

d)

மண் புழு

4.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது தீயப்பழக்கம்?

a)

நீர் அருந்துவது

b)

மது அருந்துவது

c)

சுவைபானம் அருந்துவது

d)

தேநீர் அருந்துவது

5.

கீழ்க்காணும் படம் கழிவு அகற்றும் உறுப்பை காட்டுகிறது. இந்த உறுப்பு எந்தக் கழிவை வெளியேற்றுகிறது?

a)

வியர்வை

b)

நீராவி

c)

சீறுநீர்

d)

கரிவளி

6.

மேலே உள்ள படம் ஓர் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டுகின்றது. ஏன் உணவகத்தில் மேற்காணும் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது?

a)

நீரிழிவு நோய் உண்டாகும்

b)

உணவின் சுவை குறையும்.

c)

நுரையீரல் புற்றுநோய் உண்டாகும்

d)

காவல் அதிகாரி கண்டிப்பார்

7.

ஈருலக விலங்குகள், மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிறப்புத் தன்மை

கொண்டிருக்கின்றன. அந்தத் தன்மை என்ன?

a)

நீண்ட நாள் உயிர் வாழும்

b)

அதிகமான முட்டைகள் இடும்

c)

நீரிலும் நிலத்திலும் வாழ முடியும்

d)

மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிகப் பாதுகாப்புடன் வாழும்

8.

கீழ்க்காணும் நடவடிக்கைகள் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிகள் ஒன்றைத்

தவிர.

a)

உடல் பயிற்சி செய்தல்

b)

புகைப் பிடித்தல்

c)

கழிவுகளை முறையாக அகற்றுதல்

d)

போதுமான உணவு உண்ணுதல்.

9.

சிறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன?

a)

நுரையீரல் பாதிப்பு

b)

சிறுநீரில் இரத்தம்

c)

உடல் சோர்வு

d)

தூக்கம் வருதல்

10.

கீழ்க்காணும் விலங்குகளில் எது சுவாசத்துளைக் கொண்டு சுவாசிக்கின்றது?

a)

மண்புழு

b)

அட்டை

c)

தலைபிரட்டை

d)

வெட்டுக்கிளி

11.

படம் சமையல் அறையில் நிகழும் ஒரு சூழலைக் காட்டுகிறது.இச்சூழல் எதனை உணர்த்துகிறது?

a)

மனிதர்கள் அதிகம் பயந்தவர்கள்

b)

மனிதர்கள் விரைவில் அதிர்ச்சி அடைவர்

c)

மனிதர்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றனர்

d)

மனிதர்கள் பாதுகாப்பானவர்கள்