Font size
Worksheets7. செய்யுள் - படைவேழம்
Total questions: 12
Worksheet time: 2mins
1. படைவேழம் பாடலின் ஆசிரியர் ________.
அ) செயங்கொண்டார்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) காளமேகப் புலவர்
2. செயங்கொண்டார் பிறந்த ஊர் _________.
அ) ஆலங்குடி
ஆ) தீபங்குடி
இ) லால்குடி
ஈ) மால்குடி
3. தமிழில் முதன்முதலில் தோன்றிய பரணி நூல் _________.
அ) தக்கயாப்பரணி
ஆ) இரணிய வதை பரணி
இ) பாசவதைப் பரணி
ஈ) கலிங்கத்துப் பரணி
4. கலிங்கத்துப் பரணி _________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
அ) 96
ஆ) 97
இ) 64
ஈ) 63
5. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் _______.
அ) கருணாகரத் தொண்டைமான்
ஆ) அனந்தவர்மன்
இ) வடகலிங்கர்
ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
6. 'பரணிக்கோர் செயங்கொண்டார்' - என்று புகழ்ந்தவர் ________.
அ) புகழேந்திப் புலவர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
7. கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை _________.
அ) 590
ஆ) 597
இ) 598
ஈ) 599
8. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் _______.
அ) பள்ளு
ஆ) குறவஞ்சி
இ) அந்தாதி
ஈ) பரணி
9. 'தென்தமிழ்த் தெய்வப்பரணி' - என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ______.
அ) புகழேந்திப் புலவர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
10. சிங்கம் _________ யில் வாழும்.
அ) முழை
ஆ) மாயை
இ) ஊழி
ஈ) அலை
11. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _______.
அ) மகிழ்ச்சி
ஆ) வீரம்
இ) நாணம்
ஈ) அச்சம்
12. கரி, வேழம் - என்னும் சொல்லின் பொருள் _________.
அ) குதிரை
ஆ) யானை
இ) சிங்கம்
ஈ) கரடி
