wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL FRM 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆசிரியர் கற்பித்த செய்யுளடிகளை மாணவன் ______________________என ஒப்புவித்தான்.

மேற்காணும் வாக்கியத்திற்குப் பொருந்தி

வரும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

சிகிடுகிடு

b)

கடகட

2.

வீட்டிற்கு வரும் உறவினரை _____________________ மலர வரவேற்பது தமழர்களின் உயரிய பண்பாடாகும்.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

3.

சந்திரன்

:

அந்த ஏழை முதியவரைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் அருவறுப்பாய்

உள்ளது கோகுலா.

கோகுலன்

:

நீ சொவ்வது தவறு சந்திரா. நாம் ஒருவருரிடம் பழகும்போது

எவ்விதப் பாகுபாடும் பார்க்கக் கூடாது.

மேற்காணும் சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

உள்ளும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

4.

வகுப்பில் பாடம் போதிக்கப்படும்போது

முழு கவனம் செலுத்தியதால், அன்றைய பாடம் அனைத்தும் _________________________________ மனதில் பதிந்ததாக மாதவன் உணர்ந்தான்.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

பசுமரத்தாணி போல

5.

மாணவர்கள் வகுப்பில் ______________________ பேசியே தங்கள் பொன்னான பொழுதைக் கழித்து வருவது மனதிற்கு வருத்தததை அளிக்கிறது.

a)

வெட்டிப் பேச்சு

b)

அரைப்படிப்பு

6.

கீழ்க்காணும்

திருக்குறளின் கருத்து யாது?

அழுக்காறு,

அவாவெகுளி, இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

a)

பொறாமை, பேராசை, கோபம், இன்சொல் ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.

b)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டும்

7.

அன்பரசனின் பெற்றோர் அவனைப் படிக்க

வைக்க அல்லும் பகலும் உழைத்தனர். அன்பரசனும் பெற்றோரின் அயராத உழைப்பை நினைத்து

நன்றாகப் படித்தான். தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றான். அனைவரும் அவனைப்

பாராட்டினர். அவன் பெறோர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.

மேற்காணும் சூழழுக்குப் பொருத்தமான

திருக்குறள் யாது?

a)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்னம் செயல்

b)

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய்

8.

கீழ்க்காணும் செய்யுளடிகளின்

கருமையாக்கப்பட்ட சொற்களின் பொருள் யாது

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

மிகப் பெரிய மாணிக்கத்தைப் போன்ற பேரொளியாகிய இறைவன்

b)

மிகப் பெரிய மாணிக்கத்தைப் போன்ற சோதி இறைவன்

9.

தோள் கொடுத்தல்

மேற்காணும் மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.

a)

எதிராகச் செயல்படுதல்

b)

துணையாக இருத்தல்

10.

உலக வல்லரசு

நாடுகள் சில பலவகையான அணு ஆயுதச் சோதனைகள் நடத்தி வருகின்றன. சீனா, வட கொரியா, மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகள் எதிருக்கெதிராய்

செயல்படும் இந்த நடவடிக்கையானது மூன்றாவது உலகப்போருக்கு வழி வகுக்கும் என

அஞ்சப்படுகிறது.

-மக்கள் ஓசை

மேற்காணும் நாளிதழ்

செய்தியோடு தொடர்புடைய மரபுத்தொடரை அடையாளம் காண்க.

a)

வெட்டிப் பேச்சு

b)

ஏட்டிக்குப் போட்டி